<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Amusingly Simple &#187; பொது</title>
	<atom:link href="http://deepakvenkat.com/category/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://deepakvenkat.com</link>
	<description>A blog by Deepak Venkatesan</description>
	<lastBuildDate>Thu, 15 Jul 2010 03:34:09 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.1</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>ஒரு குட்டிக் கதை</title>
		<link>http://deepakvenkat.com/2010/01/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/</link>
		<comments>http://deepakvenkat.com/2010/01/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/#comments</comments>
		<pubDate>Wed, 13 Jan 2010 07:13:45 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[சிறுகதைகள்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/?p=399</guid>
		<description><![CDATA[இணையத்தில் வளைத்தது&#8230;
அவனுக்குப் பிறவியிலேயே வலது கை கிடையாது. அவனுக்கு ஒன்பது வயது நிரம்பியபோது, &#8216;கராத்தே&#8217; கற்றுக்கொள்ள விரும்பினான். பெற்றோரிடம் தன்




Karate



விருப்பத்தைச் சொன்னான். மகனின் துணிவைக் கண்டு மகிழ்ந்த பெற்றோர், அவனை கராத்தே பள்ளிக்கு அனுப்பினர். சில நாட்களிலேயே நன்றாகக் கராத்தே பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினான். கராத்தே போட்டி ஒன்றில் பங்குபெற விரும்பி, தன் ஆசிரியரிடம் இது தன்னால் முடியுமா என்று கேட்டான். &#8220;என் மீது முழு நம்பிக்கை வைத்து, நான் சொல்வதை அப்படியே செய்வதானால், உன்னால் முடியும்&#8221; [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">இணையத்தில் வளைத்தது&#8230;</p>
<p style="text-align: justify;">அவனுக்குப் பிறவியிலேயே வலது கை கிடையாது. அவனுக்கு ஒன்பது வயது நிரம்பியபோது, &#8216;கராத்தே&#8217; கற்றுக்கொள்ள விரும்பினான். பெற்றோரிடம் தன்</p>
<p style="text-align: justify;">
<div class="mceTemp" style="text-align: justify;">
<dl class="wp-caption alignright" style="width: 237px;">
<dt class="wp-caption-dt"><a href="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/karate_logoblack.jpg"><img class="  " title="Karate" src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/karate_logoblack.jpg" alt="Karate" width="227" height="243" /></a></dt>
<dd class="wp-caption-dd">Karate</dd>
</dl>
</div>
<p style="text-align: justify;">
<p style="text-align: justify;">விருப்பத்தைச் சொன்னான். மகனின் துணிவைக் கண்டு மகிழ்ந்த பெற்றோர், அவனை கராத்தே பள்ளிக்கு அனுப்பினர். சில நாட்களிலேயே நன்றாகக் கராத்தே பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினான். கராத்தே போட்டி ஒன்றில் பங்குபெற விரும்பி, தன் ஆசிரியரிடம் இது தன்னால் முடியுமா என்று கேட்டான். &#8220;என் மீது முழு நம்பிக்கை வைத்து, நான் சொல்வதை அப்படியே செய்வதானால், உன்னால் முடியும்&#8221; என்றார் ஆசிரியர். அவனும் சம்மதித்தான்.</p>
<p style="text-align: justify;">ஆசிரியர் அவனுக்கு ஒரே ஒரு தாக்குதல் முறையை மட்டுமே கற்றுக்கொடுத்தார். அந்த தாக்குதலில் மட்டும் அவன் நன்றாகக் கவனம் செலுத்திப் பயின்றான். ஆனாலும் அவனுக்குக் கொஞ்சம் கவலையாக இருந்தது. எல்லோரும் பலவிதமான தாக்குதல் முறைகளையும், தற்காப்பு முறைகளையும் நன்றாகப் பயின்றுகொண்டிருக்கும் போது, அவன் மட்டும் ஒரே ஒரு தாக்குதல் முறையை மட்டும் கற்றுக்கொள்வது, அவனுக்குச் சற்று நெருடலாக இருந்தது. ஆசிரியரிடம், தனக்கு மேலும் சில தாக்குதல் முறைகளையும் கற்றுத் தரும்படி கேட்டான். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அந்த ஒரு முறையை மட்டும் நன்றாகப் பயிலுமாறு கூறினார்.</p>
<p style="text-align: justify;">கராத்தே போட்டியின் முதல் சுற்றில் அவன் வெற்றி பெற்றான். அடுத்த சுற்றிலும் வெற்றி பெற்றான். அடுத்தடுத்த சுற்றுகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று கடைசியில் போட்டியிலேயே முதல் இடம் பிடிக்கும் அளவிற்கு வந்து விட்டான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி இது சாத்தியமானது? ஒரே ஒரு கை இரூக்கும் ஒருவன் எப்படி மற்றவர்களோடு போட்டியிட்டு ஒரு கராத்தே போட்டி முழுவதையும் வெல்ல முடியும் என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஆசிரியரிடம் கேட்டான். ஆசிரியர் சிரித்தார். &#8220;நான் உனக்குக் கற்றுக்கொடுத்த தாக்குதல் முறை என்னவோ ஒன்றுதான். ஆனால், அந்தத் தாக்குதலில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள ஒரே ஒரு வழி மட்டும் தான் உள்ளது. அது என்னவென்றால், தாக்குபவரின் வலது கையைப் பிடித்து இழுத்துப் போட வேண்டும்!&#8221; என்றார்.</p>
<div id="_mcePaste" style="overflow: hidden; position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; text-align: justify;">iNaiyaththil vaLaiththathu&#8230;</p>
<p>avanukkup piRaviyileeyee valathu kai kidaiyaathu. avanukku onpathu vayathu wirampiyapoothu, karaaththee kaRRukkoLLa virumpinaan. peRRooridam than viruppaththais sonnaan. makanin thuNivaik kaNdu pakizntha peRRoor, avanai karaththee paLLikku anuppinar. sila waadkaLileeyee wanRaakak karaaththee payiRsiyil iidupadath thodangkinaan. karaaththee pooddi onRil pangkupeRa virumpi, than aasiriyaridam ithu thannaal mudiyumaa enRu keeddaan. &#8220;en miithu muzu wampikkai vaiththu, naan solvathai appadiyee seyvathaanaal, unnaal mudiyum&#8221; enRaar aasiriyar.</p>
<p>aasiriyar avanukku oree oru thaakkuthal muRaiyai maddumee kaRRukkoduththaar. antha thaakkuthalil maddum avan wanRaakak kavanam seluththip payinRaan. aanaalum avanukkuk konjsam kavalaiyaaka irunthathu. elloorum palavithamaana thaakkuthal muRaikaLaiyum, thaRkaappu muRaikaLaiyum wanRaakap payinRukoNdirukkum poothu, avan maddum oree oru thaakkuthal muRaiyai maddum kaRRukkoLvathu, avanukkus saRRu werudalaaka irunthathu. aasiriyaridam, thanakku meelum sila thaakkuthal muRaikaLaiyum kaRRuth tharumpadi keeddaan. aanaal, avar maRuththuviddaar. antha oru muRaiyai maddum wanRaakap payilumaaRu kuuRinaar.</p>
<p>karaaththee pooddiyin muthal suRRil avan veRRi peRRaan. aduththa suRRilum veRRi peRRaan. aduththaduththa suRRukaLilum thodarnthu veRRi peRRu kadaisiyil pooddiyileeyee muthal idam pidikkum aLaviRku vanthu viddaan. avanukku onRumee puriyavillai. eppadi ithu saaththiyamaanathu? oree oru kai iruukkum oruvan eppadi maRRavarkaLoodu pooddiyiddu oru karaaththee pooddi muzuvathaiyum vella mudiyum enRu avanukkuk kuzappamaaka irunthathu. aasiriyaridam keeddaan. aasiriyar siriththaar. &#8220;waan unakkuk kaRRukkoduththa thaakkuthal muRai ennavoo onRuthaan. aanaal, anthath thaakkuthalil irunthu thammaith thaRkaaththuk koLLa oree oru vazi maddum thaan uLLathu. athu ennavenRaal, thaakkupavarin valathu kaiyaip pidiththu izuththup pooda veeNdum!&#8221; enRaar.</p>
</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2010/01/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>பறவைகள் பலவிதம்</title>
		<link>http://deepakvenkat.com/2009/05/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://deepakvenkat.com/2009/05/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 07 May 2009 21:53:41 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[பயணம்]]></category>
		<category><![CDATA[பெங்களூரு]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[birds]]></category>
		<category><![CDATA[heron]]></category>
		<category><![CDATA[mysore]]></category>
		<category><![CDATA[pelican]]></category>
		<category><![CDATA[ranganathittu]]></category>
		<category><![CDATA[rivertern]]></category>
		<category><![CDATA[sanctuary]]></category>
		<category><![CDATA[srirangapatna]]></category>
		<category><![CDATA[stork]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/?p=237</guid>
		<description><![CDATA[பெங்களூரிலிருந்து 120 கி.மீ தொலைவில் இருக்கும் அழகான நகரம் மைசூரு. மைசூருக்கு 10 கி.மீ முன்பு வலது புறமாகச் செல்லும் சிறிய சாலையில் இறங்கி, ஒரு 5 கி.மீ அளவுக்குச் சென்றால் கிடைக்கிற இயற்கையின் அற்புதமான படைப்பு தான் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிய உலகின் பல நாடுகளிலிருந்தும் வரும் விதவிதமான வண்ணமிகு பறவைகளைக் காண சரியான இடம் தான் ரங்கனதிட்டு.
நானும் எனது நண்பர்கள் கார்த்திகேயன், சுப்ரமணியன் &#8211; [...]


Related posts:<ol><li><a href='http://deepakvenkat.com/2008/09/a-trip-to-somnathpura-talakad-and-shivanasamudram/' rel='bookmark' title='Permanent Link: A trip to Somnathpura, Talakad and Shivanasamudram'>A trip to Somnathpura, Talakad and Shivanasamudram</a></li>
<li><a href='http://deepakvenkat.com/2009/07/chased-by-elephant/' rel='bookmark' title='Permanent Link: The day we were chased by an elephant&#8230;'>The day we were chased by an elephant&#8230;</a></li>
</ol>]]></description>
			<content:encoded><![CDATA[<div class="wp-caption alignright" style="width: 427px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="A stork scene" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3430295263/"><img src="http://farm4.static.flickr.com/3549/3430295263_abcd33665c.jpg" alt="A stork scene" width="417" height="289" /></a><p class="wp-caption-text">A stork scene</p></div>
<p><a href="http://en.wikipedia.org/wiki/Bangalore">பெங்களூரிலிருந்து</a> 120 கி.மீ தொலைவில் இருக்கும் அழகான நகரம் <a href="http://en.wikipedia.org/wiki/Mysore">மைசூரு</a>. மைசூருக்கு 10 கி.மீ முன்பு வலது புறமாகச் செல்லும் சிறிய சாலையில் இறங்கி, ஒரு 5 கி.மீ அளவுக்குச் சென்றால் கிடைக்கிற இயற்கையின் அற்புதமான படைப்பு தான் <a href="http://en.wikipedia.org/wiki/Ranganathittu">ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம்</a>. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிய உலகின் பல நாடுகளிலிருந்தும் வரும் விதவிதமான வண்ணமிகு பறவைகளைக் காண சரியான இடம் தான் ரங்கனதிட்டு.</p>
<p>நானும் எனது நண்பர்கள் கார்த்திகேயன், சுப்ரமணியன் &#8211; மூவரும் இந்த பறவைகள் சரணாலயத்திற்குச் செல்வது என்று முடிவு செய்தோம். அதிகாலை 6 மணிக்குக் கிளம்புவது சரியாக இருக்கும். பெங்களூரு-மைசூரு சாலை நல்ல அகலமாகவும், மேடு பள்ளங்கள் இன்றி சீராகவும் இருப்பதால், 2 முதல் 2.5 மணி நேரத்தில் 120 கி.மீ தொலைவில் உள்ள ரங்கனதிட்டுவை அடைந்துவிடலாம். நாங்கள் சரியாக 8.30 மணிக்கு இவ்விடத்தை அடைந்தோம். இங்கு காலை வேளையில் செல்வது தான் மிகவும் உசிதம். ஏனென்றால், வெயில் அதிகமாக அதிகமாக, பறவைகள் அவ்வளவாகப் பறக்காமல் தங்கள் மரங்களிலேயே தங்கியிருந்து குஞ்சுகளைப் பாதுகாப்பதில் மும்முரமாக இருக்கும். அதனால், அவற்றைச் சரியாகப் பார்க்க முடியாது. நமக்கும் வெயிலில் சாவகாசமாகப் பார்ப்பது கடினம்.</p>
<div class="wp-caption alignleft" style="width: 308px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="The painted stork" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3431104066/"><img src="http://farm4.static.flickr.com/3410/3431104066_c92fbf9651.jpg" alt="The painted stork" width="298" height="430" /></a><p class="wp-caption-text">Painted Stork</p></div>
<p>ரங்கனதிட்டுவிற்குச் செல்லும் பாதையில் நுழையும் போதே சில வண்ணமயமான <a href="http://en.wikipedia.org/wiki/Painted_stork"><strong>Painted Stork</strong></a> எனப்படும் செங்கால் நாரைகள் வானில் பறந்து போவதைப் பார்த்தேன். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி. இவ்வளவு அழகான பறவைகளை இவ்வளவு கிட்டத்தில் பார்ப்பேன் என்று நான் எண்ணிப்பார்த்ததில்லை. இது மேலும் எனது ஆவலைத் தூண்டியது. போதாக்குறைக்கு, எனது Nikon D80 நிழற்படக் கருவியையும் கையோடு எடுத்துச் சென்றிருந்தேன். மிகுந்த எதிர்பார்ப்புகளோடு சென்ற எங்களை நுழைவு வாயிலில் நிறுத்தினார்கள். காலை 9 மணிக்கு தான் சரணாலயத்திற்குள் செல்ல அனுபதிப்பார்களாம். நாங்கள் ஏமாற்றத்தோடு காத்திருந்த போது, ஒரு 5-10 நிமிடங்கள் கழித்து அங்கு இருந்ந்த அலுவலர் எங்களை உள்ளே அனுமதித்தார். காரில் சென்றதால், ஏறத்தாழ 100-150 ரூபாய் நுழைவுக் கட்டணம் கொடுத்ததாக நினைவு.உள்ளே வாகனங்களை நிறுத்துவதற்கு நல்ல பரவலான இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். ரங்கனதிட்டு சரணாலயமானது காவிரி நதியின் ஒரு பகுதியாக அமைந்திருப்பதால், இவ்விடம் காவிரிக் கரையில் ஒரு அழகான பூங்கா போல் அமைக்கப்பட்டுள்ளது. சின்ன குளம், மீன்கள், ஏராளமான மரம் &#8211; செடிகொடிகள் என ரம்யமாக</p>
<div class="wp-caption alignright" style="width: 317px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="The Eurasian Spoonbill-2" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3431107700/"><img src="http://farm4.static.flickr.com/3559/3431107700_8a2a5b9b8b.jpg" alt="The Eurasian Spoonbill-2" width="307" height="443" /></a><p class="wp-caption-text">Eurasian Spoonbill</p></div>
<p>இருக்கிறது. சிறிய தொலைவே நடப்பதற்குள் காவிரியாற்றை அடைந்துவிடுகிறோம். அதன் பின் காணும் காட்சிகளை வருணிக்க வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கும்.</p>
<p>அத்ற்கு முன் இன்னபிற logistics பற்றிச் சொல்லிவிடுகிறேன். இந்த சரணாலயத்தில் பறவைகளைப் பார்த்து மகிழ சரியான உத்தி, அங்கிருக்கும் படகில் சென்று பார்ப்பதுதான். படகிற்கு, அரை மணி நேரத்திற்கு 250 ரூபாய் வசூலிக்கிறார்கள். 1 மணி நேரம் என்றால் 500 ரூபாய். நீங்கள் தனியாக ஒரு படகினை அமர்த்திக்கொள்ளலாம், அல்லது, அங்கு வந்திருக்கும் மற்ற பயணிகளோடு சேர்ந்து ஒரு படகில் பயணம் செய்யலாம். ஒரு படகில் 8 பேர் செல்லலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் தனியாக ஒரு படகினை அமர்த்திக்கொண்டு பயணத்தைத் தொடங்கினோம்.</p>
<p>ரங்கனதிட்டுவில் ஒரு அற்புதம் என்னவென்றால், மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் இந்தப் பறவைகளை அம்மரங்களின் அருகிலேயே சென்று மிக நன்றாகக் கண்டு களிக்கலாம். இப்பறவைகளும், மனிதர்க்ள் அங்கு வந்து செல்வதற்குப் பழகிப்போயிருப்பதால், நம்மை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. தாம் உண்டு, தம் குஞ்சுகளுண்டு என்று இருக்கின்றன. இதனால், மிக அண்மையில் பார்த்து, சிறப்பான நிழற்படங்கள் எடுப்பதற்கு மிக ஏதுவாக இருக்கிறது. ஒரு விடயத்தில் கவனம் தேவை. இங்கே நீரில் முதலைகள் உண்டு. அதனால், எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இங்கு நீரில் முதலைகள் இருப்பதால், குரங்கு, நரி போன்ற மற்ற மிருகங்கள் எவையும் நீருக்குள் இறங்குவதில்லை. பறவைகளும் நீரின் நடுவே இருக்கிற மரங்களில் மட்டுமே கூடுகளைக் கட்டுகின்றன.</p>
<div class="wp-caption alignleft" style="width: 324px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="The river tern - landing" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3431106958/"><img src="http://farm4.static.flickr.com/3581/3431106958_57f2ff446d.jpg" alt="The river tern - landing" width="314" height="452" /></a><p class="wp-caption-text">River tern landing</p></div>
<p>இம்முதலைகள் இவ்வகையில் பறவைகளைப் பாதுகாக்கின்றன.  பறவைகளின் முட்டைகளோ குஞ்சுகளோ தவறுதலாக ஆற்றில் விழும் போது முதலைகள் அவற்றை இரையாக்கிக் கொள்கின்றன.</p>
<p>மற்ற சமயங்களில் மீன்கள் இவற்றிற்கு இருக்கவே இருக்கிறதே. எனவே, இவ்விடம் பறவைகளுக்கு இயற்கையான பாதுகாப்பிடமாக பல மில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது நிதர்சனமாகிறது.</p>
<p>நம்மூரில் குளிர்காலம் தொடங்கும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியா, சைபீரியா போன்ற பல ஆயிரம் கி.மீ-களுக்கு அப்பாலிருக்கும் நாடுகளிலிருந்து இப்பறவைகள் இந்தியாவிற்கு ஆகாய மார்க்கமாக வருகின்றன. இனச்சேர்க்கை முடிந்து, முட்டைகள் இட்டு, குஞ்சுகள் பொரித்து, அவை வளர்ந்து பெரிதாகி அவையும் பறப்பதற்குத் தயாராகும் தருணம் வரை இவை இங்கேயே தங்கியிருக்கின்றன. பின்னால், வெயில் காலம் தொடங்கும் மார்ச்சு-ஏப்ரல் மாதங்களில், ஒவ்வொரு பறவைக் குடும்பங்களாக, தத்தமது குஞ்சுகளோடு தமது நாட்டிற்குச் சென்று விடுகின்றன. மீண்டும் அடுத்த குளிர்காலம் தொடங்கும் போது திரும்புகின்றன. இந்த cycle, பல மில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>
<div class="wp-caption alignright" style="width: 324px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="The dark couple" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3431108260/"><img src="http://farm4.static.flickr.com/3577/3431108260_82bb91e665.jpg" alt="The dark couple" width="314" height="452" /></a><p class="wp-caption-text">Cormorants</p></div>
<p>அதிகப் பரவலாக இங்கு காணப்படும் பறவைகள் &#8211; நாரை வகைகள். இவை தான் பல்வேறு வண்ணங்களில் நம் கண்களுக்குப் பளிச்சென்று புலப்படுகின்றன. குறிப்பாக, செங்கால் நாரைகள் (<a href="http://en.wikipedia.org/wiki/Painted_stork"><strong>Painted Storks</strong></a>). அழகான ஆரஞ்சு நிறத்தில் நீளமான அலகுகளை உடைய இவை, சாதாரணமாக சாம்பல் நிறத்தில் இருக்கும். இனச்சேர்க்கை சமயங்களில், கருப்பு &#8211; சிகப்பு என்று பல வண்ணங்களில் இறகுகளை வளர்த்துக் கொண்டு அட்டகாசமாகக் காட்சியளிக்கின்றன. இவை தான் ரங்கனதிட்டுவின் &#8216;highlight&#8217; என்று சொல்லலாம்.</p>
<p>அதன் பிறகு, பிளவு பட்டது போன்ற அலகினையுடைய &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Asian_Openbill_Stork">Openbilled Storks</a></strong>&#8216; எனப்படும் நத்தை கொத்தி நாரைகள். இவற்றின் அலகுகள் சேராமல் இருந்து, முனையில் மட்டும் சேர்கின்றன. மற்றொரு interesting-ஆன நாரையினம், &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Eurasian_Spoonbill">Spoonbilled Storks</a></strong>&#8216; எனப்படும் கரண்டி மூக்கு நாரைகள். நன்கு தட்டி வைத்தது போன்று அகலமான, தட்டையான, தோசைக் கரண்டி போன்ற அல்குகள் கொண்டிருக்கின்றன. இவ்வலகுகள், இவற்றிற்கு மீன்களை எளிதில் பிடிக்க உதவுகிறன. ஒரு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இந்த கரண்டி மூக்கு நாரைகள் மார்ச்சு மாதத்தோடு தங்களின் நாடுகளுக்குத் திரும்பிவிடுகின்றன. எனவே, இவற்றைக் காண மார்ச்சுக்கு முன்பு போகவேண்டும்.</p>
<div class="wp-caption alignleft" style="width: 454px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="A bunch of lotuses" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3430290653/"><img src="http://farm4.static.flickr.com/3605/3430290653_1ffb37e926.jpg" alt="A bunch of lotuses" width="444" height="308" /></a><p class="wp-caption-text">Lotus Pond</p></div>
<p>இந்த நாரையினங்கள் எல்லாம், தண்ணீரில் நீண்ட நேரம் நின்று நீர் அருந்திக் கொண்டிருப்பது போல் தோன்றுகின்றன, எனினும், உண்மையில், இவை தமது அலகுகளில் நீரினைச் சேகரித்துக் கொண்டு, பின் பறந்து சென்று, மரங்களில் இருக்கும் தமது குஞ்சுகளை நீர் அருந்தச் செய்கின்றன. இன்னொரு பார்ப்பத்ற்கரிய காட்சி, &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Pelican">Pelican</a></strong>&#8216; எனப்படும் கூழைக்கடாக்கள். இப்பறவைகள், நீரின் பரப்பிற்கு சற்று மேலே பறந்தவாறே சென்று, சட்டென்று த்மது தலையை நீருக்குள் விட்டு மீன்களைப் பிடித்துவிடுகின்றன. கூழைக்கடாக்களுக்கு அலகின் அடிப்பாகத்தில் ஒரு பை போன்ற அமைப்பு இருக்கிறது. இதில் மீன்களைச் சேகரித்துக் கொண்டு, தம் குஞ்சுகளுக்குச் சென்று அவற்றை ஊட்டுகின்றன. இவை பறந்து சென்றவாறே மீன் பிடிக்கும் அழகே அழகு.</p>
<div class="wp-caption alignright" style="width: 309px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="Night heron in penance" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3431104678/"><img src="http://farm4.static.flickr.com/3297/3431104678_a9e761aeb8.jpg" alt="Night heron in penance" width="299" height="431" /></a><p class="wp-caption-text">Night Heron in Penance</p></div>
<p>மேலும், ரங்கனதிட்டுவில் காணப்படும் பறவைகள், சிறிய உடலமைப்பினை உடைய &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Night_heron">Night Heron</a></strong>&#8216; எனப்படும் வக்கா. இது இரவில் மட்டுமே இரைதேடும் ஒரு அரிய பறவை. இவற்றை மிகுதியாக சென்னை அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் காணலாம். இன்னும், &#8216;<a href="http://en.wikipedia.org/wiki/Egretta_garzetta"><strong>L</strong><strong>ittle Egret</strong></a>&#8216; எனப்படும் சின்ன வெள்ளைக் கொக்குகள், &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Cattle_Egret">Cattle Egret</a></strong>&#8216; எனப்படும் உண்ணிக் கொக்குகள், &#8216;<strong><a href="http://delsonclicks3.blogspot.com/2008/07/median-egret.html">Median Egret</a></strong>&#8216; எனப்படும் வெள்ளைக் கொக்குகள், &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/River_tern">Indian River Tern</a></strong>&#8216; எனப்படும் குளத்து ஆலா, &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Little_cormorant">Little Cormorant</a></strong>&#8216; எனப்படும் நீர் காகம், &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Swallow">Swallow</a></strong>&#8216; எனப்படும் தலை இல்லாத குருவி, &#8216;<a href="http://en.wikipedia.org/wiki/Darter"><strong>Darter</strong></a>&#8216; எனப்படும் பாம்புத்தாரா, &#8216;<a href="http://en.wikipedia.org/wiki/American_White_Ibis"><strong>White Ibis</strong></a>&#8216; எனப்படும் வெள்ளை அரிவாள் மூக்கன், &#8216;<a href="http://en.wikipedia.org/wiki/Partridge"><strong>Partridge</strong></a>&#8216; எனப்படும் கௌதாரி, என்று சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் இவ்விடத்திலேயே indigenous-ஆகக் காணப்படும் பறவைகளும் உண்டு. மயில், புறா, ஆந்தை போன்ற பறவைகளும் பார்க்க முடிந்தது.</p>
<p>குறிப்பிட்டுச் சொல்லும் படியான பறவை &#8211; குளத்து ஆலா. இது அங்கிருக்கும் பாறைகள் மீது தான் முட்டையிடுகிறது. ஆனால், முதலைகள் இவற்றை நெருங்குவதில்லை. ஏனென்றால், இவை முதலைகளின் கண்களைக் கொத்திவிடுமாம். என்னே தற்காப்பு!</p>
<div class="wp-caption alignleft" style="width: 282px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="The Asian Open billed Stork" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3430295007/"><img src="http://farm4.static.flickr.com/3332/3430295007_1a870f6546.jpg" alt="The Asian Open billed Stork" width="272" height="392" /></a><p class="wp-caption-text">Openbilled Stork</p></div>
<p>இவை நாரைகளை விடச் சற்று தாமதமாக முட்டையிடுகின்றன. ஏனென்றால், கோடைக் காலம் ஆரம்பமாகும் போது ஆற்றில் நீர் குறைந்து பாறைகள் மூழ்காமல் நல்ல பரவலாக இருக்கும் போது தான் இவை அப்பாறைகளின் மீது முட்டையிட முடிகிறது.</p>
<p>மழை ஆரம்பமாவதற்குள் தமது குஞ்சுகளைப் பயிற்றுவித்து அழைத்துச் சென்றுவிடுகின்றன.</p>
<p>இயற்கையின் படைப்பில் எத்தனை விந்தைகள்!</p>
<p>இந்த பலதரப்பட்ட பறவைகளையும் நிதானமாக 1 மணி நேரம் பார்த்து ரசித்து, நிழற்படங்கள் நிறைய எடுத்துக் கொண்டு கிளம்பினோம். மீண்டும் அடுத்த வருடம் வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம். அடுத்து வருகிற ஜூன் &#8211; ஜூலை மாதங்களில், மழைக் காலத்தில் இனச்சேர்க்கை கொள்ளும் வெள்ளை அரிவாள் மூக்கன்களை (<a href="http://en.wikipedia.org/wiki/American_White_Ibis">White Ibis</a>) நிறைய பார்க்கலாம். இவை மழைக்காகவே இங்கு வருகின்றனவாம். இவ்விடயங்களையெல்லாம் எங்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்ன எங்களின் படகினைச் செலுத்தி வந்த அன்பருக்கு மிக்க நன்றிகள்.</p>


<p>Related posts:<ol><li><a href='http://deepakvenkat.com/2008/09/a-trip-to-somnathpura-talakad-and-shivanasamudram/' rel='bookmark' title='Permanent Link: A trip to Somnathpura, Talakad and Shivanasamudram'>A trip to Somnathpura, Talakad and Shivanasamudram</a></li>
<li><a href='http://deepakvenkat.com/2009/07/chased-by-elephant/' rel='bookmark' title='Permanent Link: The day we were chased by an elephant&#8230;'>The day we were chased by an elephant&#8230;</a></li>
</ol></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2009/05/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒகேனக்கல் &#8211; ஒரு இனிய அனுபவம்</title>
		<link>http://deepakvenkat.com/2008/09/%e0%ae%92%e0%ae%95%e0%af%87%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5/</link>
		<comments>http://deepakvenkat.com/2008/09/%e0%ae%92%e0%ae%95%e0%af%87%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5/#comments</comments>
		<pubDate>Sat, 13 Sep 2008 19:53:50 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Headline]]></category>
		<category><![CDATA[Travel]]></category>
		<category><![CDATA[பயணம்]]></category>
		<category><![CDATA[பெங்களூரு]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[bangalore]]></category>
		<category><![CDATA[cauvery]]></category>
		<category><![CDATA[coracle]]></category>
		<category><![CDATA[d4dpak]]></category>
		<category><![CDATA[deepak]]></category>
		<category><![CDATA[drive]]></category>
		<category><![CDATA[enjoy]]></category>
		<category><![CDATA[falls]]></category>
		<category><![CDATA[hogenakkal]]></category>
		<category><![CDATA[scenic]]></category>
		<category><![CDATA[tamilnadu]]></category>
		<category><![CDATA[water]]></category>

		<guid isPermaLink="false">http://deepaksumma.wordpress.com/?p=47</guid>
		<description><![CDATA[கன்னடத்தில் &#8220;ஹொகே&#8221; என்பது புகை. உயரமான அருவியிலிருந்துப் பொழிகிற தண்ணீர் நம் மீது புகை போல் படர்ந்து, நம் நிழற்படக் கருவியையும் ஒரு கை பார்க்கிற போது தான் இந்தப் புகையின் தாக்கம் நமக்கு நன்றாகப் புலனாகிறது. &#8216;ஒகேனக்கல்&#8217; என்பது &#8216;புகைக்கிற கல்&#8217; என்று சொல்லலாம். கன்னடம், தமிழ் என்று இரண்டு கலாச்சாரங்களில் கலந்த என் போன்ற, ரஜினிகாந்த் போன்றவர்களை அவ்வப்போது தர்ம சங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளிவிடுகிற இந்த ஒகேனக்கல்லில் அப்படி என்னத்தான் இருக்கிறது என்று பார்க்கலாம் [...]


Related posts:<ol><li><a href='http://deepakvenkat.com/2008/09/a-trip-to-somnathpura-talakad-and-shivanasamudram/' rel='bookmark' title='Permanent Link: A trip to Somnathpura, Talakad and Shivanasamudram'>A trip to Somnathpura, Talakad and Shivanasamudram</a></li>
<li><a href='http://deepakvenkat.com/2009/07/chased-by-elephant/' rel='bookmark' title='Permanent Link: The day we were chased by an elephant&#8230;'>The day we were chased by an elephant&#8230;</a></li>
</ol>]]></description>
			<content:encoded><![CDATA[<p>கன்னடத்தில் &#8220;ஹொகே&#8221; என்பது புகை. உயரமான அருவியிலிருந்துப் பொழிகிற தண்ணீர் நம் மீது புகை போல் படர்ந்து, நம் நிழற்படக் கருவியையும் ஒரு கை பார்க்கிற போது தான் இந்தப் புகையின் தாக்கம் நமக்கு நன்றாகப் புலனாகிறது. &#8216;ஒகேனக்கல்&#8217; என்பது &#8216;புகைக்கிற கல்&#8217; என்று சொல்லலாம். கன்னடம், தமிழ் என்று இரண்டு கலாச்சாரங்களில் கலந்த என் போன்ற, ரஜினிகாந்த் போன்றவர்களை அவ்வப்போது தர்ம சங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளிவிடுகிற இந்த ஒகேனக்கல்லில் அப்படி என்னத்தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று புறப்பட்டோம்.</p>
<div class="wp-caption alignright" style="width: 177px"><a href="http://www.flickr.com/photos/deepakvenkat/2749503762/in/set-72157606643248954/"><img title="அய்யனார் சிலை" src="http://farm4.static.flickr.com/3127/2748670451_199bbb153b.jpg?v=0" alt="அய்யனார் சிலை" width="167" height="250" /></a><p class="wp-caption-text">அய்யனார் சிலை</p></div>
<p>என்னுடைய Hyundai Santro நீண்ட பயணத்திற்குத் தயாராகிவிட்டது. நாங்கள் இதற்கு முன்னால் மேற்கொண்ட பயணங்களோடு ஒப்பிடும் போது இது மிகவும் சிறிய பயணம் தான் என்றாலும், போவது ஒகேனக்கல் என்பதால் எங்களுக்குள் மிகுந்த எதிர்பார்ப்புகள், கொஞ்சம் நடுக்கம் கூட <img src='http://deepakvenkat.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  நான், ஹேமந்த், ஸ்ரீகாந்த், ஜிபி, மன்மோகன் என்று எங்கள் ஐவர் குழு. காலை 7 மணிக்கு, பணஷங்கரியில் மூக்குப் பிடிக்க நாஷ்தா பண்ணிக்கொண்டு (ஹிஹி&#8230; பெங்களூர் கன்னடம் எட்டிப் பார்க்கிறது) பெங்களூரிலிருந்து புறப்பட்டோம்.</p>
<p>இணையத்தில் நிறைய ஆரய்ச்சிகள் செய்து, ஒரு வழியாக, ஒரு வழியைத் தேர்ந்தெடுத்திருந்தோம். ஓசூர் வரை சென்று, அங்கு சந்திரசூடேசுவரர் ஆலயத்தைத் தாண்டி, மேம்பாலத்தைக் கடந்ததும், வலப்பக்கம் திரும்பி, இராயக்கோட்டை நோக்கிச் சென்றோம். அங்கிருந்து பாலக்கோடு &#8211; பென்னாகரம் &#8211; ஒகேனக்கல். வழியில் பென்னாகரத்தில் தான் முறுக்கு மீசையும், வீச்சரிவாளுமாக வீற்றிருக்கும் ஐயனார் சாமி சிலைகளை முதல் முறையாகக் கண்டேன். காவல் தெய்வமான ஐயனாருக்குக் காவலாகச் சில காக்கிச்சட்டைக் காவலர்களின் சிலைகளையும் அங்கே கண்டது நகைப்பாக இருந்தது. இது தான் சமயம் என்று, புதிதாக நான் வாங்கிய SLR Camera-வுக்கு நன்றாக வேலை கொடுத்தேன். அப்படியே கிராமச் சூழலை இரசித்துக்கொண்டே ஒரு வழியாக, ஒகேனக்கல் வந்து சேர்ந்தோம்.</p>
<div class="wp-caption alignleft" style="width: 260px"><a href="http://www.flickr.com/photos/deepakvenkat/2748672861/in/set-72157606643248954/"><img title="பரிசல்" src="http://farm4.static.flickr.com/3243/2748672861_3c16c4921b.jpg?v=0" alt="பரிசல்" width="250" height="162" /></a><p class="wp-caption-text">பரிசல்</p></div>
<p>வரும் வழியில் இன்னும் ஒரு தமாஷ்! தேநீர் அருந்துவதற்காக ஒரு சிறிய கடையில் நிறுத்தினோம். என்னுடன் இருந்த ஹேமந்த் என்ற நண்பர் கன்னடிகர் என்பதால், அந்தக் கடக்குச் சென்று மூன்று கப் தேநீர் வேண்டும் என்று சொல்வதற்காக, &#8220;மூரு மூரு&#8221; என்று சொல்லியிருக்கிறார். (கன்னடத்தில் &#8216;மூரு&#8217; என்பது மூன்றைக் குறிக்கும்). அதற்கு அந்தக் கடைக்காரம்மா, &#8220;இங்க மோர் எல்லாம் கிடைக்காது சார்&#8221; என்று சொல்ல, நானும் என் தமிழ் நண்பர் ஸ்ரீகாந்தும் சடார் என்று சிரித்தது மறக்க முடியாது.</p>
<p>ஒகேனக்கல்லில் நாங்கள் காலடி எடுத்து வைத்தவுடன்,</p>
<div class="wp-caption alignright" style="width: 197px"><a href="http://www.flickr.com/photos/deepakvenkat/2748673931/in/set-72157606643248954/"><img title="பரிசல்காரர் " src="http://farm4.static.flickr.com/3033/2748673931_2bc081b621.jpg?v=0" alt="பரிசல்காரர் " width="187" height="250" /></a><p class="wp-caption-text">பரிசல்காரர் </p></div>
<p>அல்ல அல்ல, காரை விட்டு இறங்கும் முன்பாகவே, பரிசல்காரர் ஒருவர் எங்களைச் சூழ்ந்துகொண்டார். &#8220;ஒகேனக்கல்லில் செய்வதற்கு இருக்கிற ஒரே வேலை, பரிசலில் சென்று பார்ப்பது, மசாஜ் எடுத்துக் கொள்வது &#8211; இந்த இரண்டும் தான் சார்&#8221;, என்று சொல்லிக்கொண்டு எங்களுடனேயே வந்தார். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், ஒருவர் எங்களை அணுகிய உடனேயே, வேறு எவரும் எங்களை அணுகாமல் விலகிச் சென்று விட்டனர். இது இவர்களுக்குள் இருக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று நினைக்கிறேன். அல்லது, வருகிற வருவாய் பகிர்ந்து கொள்ளப்படுவதாகக் கூட இருக்கலாம் &#8211; எனக்குத் தெரியவில்லை, விசாரிக்கவும் மறந்துவிட்டேன். பரிசலில் சென்று ஒகேனக்கல் அருவிகளைச் சுற்றிப் பார்ப்பதற்குச் சிறிது நேரம் அந்தப் பரிசல்காரருடன் பேரம் செய்தோம். இறுதியில், ஆளுக்கு 250 ரூபாய் என்று முடிவு செய்து, பரிசலில் ஏறினோம்.</p>
<p>பரிசல் பார்ப்பதற்கு மிகவும் இலகுவாக இருந்தது. இந்தப் பரிசல்காரர்கள் அதை &#8216;அலாக்&#8217;காக தூக்கிக்கொண்டு நடப்பது சுவாரசியமாக இருந்தது. அநதப் பரிசல் என் போன்ற பெருத்த உருவத்தைத் தாங்குமா என்ற அச்சம் எனக்கு இருந்தது. ஆனால் என்னைச் சரியாக நடுவில் உட்கார்த்திவிட்டு,</p>
<div class="wp-caption alignleft" style="width: 260px"><a href="http://www.flickr.com/photos/deepakvenkat/2748680905/in/set-72157606643248954/"><img title="சுற்றும் பரிசல்" src="http://farm4.static.flickr.com/3161/2748680905_e722f40e0c.jpg?v=0" alt="சுற்றும் பரிசல்" width="250" height="167" /></a><p class="wp-caption-text">சுற்றும் பரிசல்</p></div>
<p>மற்ற நால்வரையும் விளிம்புகளில் அமரச் செய்தார் அந்தப் பரிசல்காரர். இதனால், நேர்த்தியாக மிதந்து, எங்களை அழகாகச் சுமந்து, பயணத்தைத் தொடங்கியது எங்கள் பரிசல்.</p>
<p>ஒகேனக்கல் பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், நீரின் ஆழம் எல்லா இடங்களிலும் சரிசமமாக இருப்பதில்லை. சில இடங்களில் ஒரு அடிக்கும் குறைவாகவும், பல இடங்களில், 40-50 அடி ஆழத்திற்கும் நீர் இருக்கிறது. இதனால், ஆங்காங்கே பரிசலில் இருந்து இறங்கி பயணிகள் நடப்பதும், பரிசல்காரர் பரிசலைத் தூக்கிக் கொண்டு நடப்பதும், இது போன்ற இடங்களில் makeshift கடைகள் தின்பண்ட வகைகளை விற்பதும் ஒகேனக்கல்லில் வாடிககையான ஒன்று. இது போன்ற ஆழமில்லாத இடங்களில் பார்ப்பதற்கு சில நல்ல காட்சியிடங்கள் இருப்பதால் இன்னும் சிறப்பாக இருக்கிறது. நங்களும் பரிசலில் இருந்து</p>
<div class="wp-caption alignright" style="width: 260px"><a href="http://www.flickr.com/photos/deepakvenkat/2748680097/in/set-72157606643248954/"><img title="காத்திருப்பு" src="http://farm4.static.flickr.com/3122/2748680097_d24c20ca40.jpg?v=0" alt="காத்திருப்பு" width="250" height="166" /></a><p class="wp-caption-text">காத்திருப்பு</p></div>
<p>இறங்கி, முதல் சிற்றருவியைப் பார்த்தோம்.</p>
<p>நீரின் வேகம் எங்களை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு இருந்தது. ஒரு நிமிடம் ஆடிப்போக வேண்டியதுதான். கர்நாடகத்தின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்துவிடப் படும் நீர் வெள்ளமெனப் பாய்ந்து வந்து, தமிழகத்தின் சமப்பரப்பான நிலங்களில் கலப்பதற்காக மலையிலிருந்து மடவுக்குப் பாய்கிற இடம் தான் ஒகேனக்கல். அப்படிப் பாய்கிற நீரின் வேகத்தை அங்கே பார்க்கிற போது தான் காவிரியின் பரப்பளவு என்ன என்பது புலனாகிறது. Water gushing rapidly into the gorges of Tamilnadu is a sight to watch and cherish. கணக்கற்ற நிழற்படக் கருவிகள் அங்கே &#8216;க்ளிக்&#8217;கி, நீரின் வேகத்தை &#8211; வேகத்தின் நிழலைத் தமக்குள் பதிந்து கொள்கின்றன &#8211; பயண நினைவுகளுக்காக! மேலும், ஒகேனக்கல்லின் பரப்பு முழுவதையும் பார்ப்பதற்காக அங்கு ஒரு பார்வை கோபுரம் (watch tower) அமைத்திருக்கிறார்கள். அங்கிருந்து பார்ப்பது பிரமிப்பாக இருந்தது.</p>
<div class="wp-caption alignleft" style="width: 260px"><a href="http://www.flickr.com/photos/deepakvenkat/2749517722/in/set-72157606643248954/"><img title="மீன் வறுவல்" src="http://farm4.static.flickr.com/3033/2749517722_cfddb53b8c.jpg?v=0" alt="மீன் வறுவல்" width="250" height="167" /></a><p class="wp-caption-text">மீன் வறுவல்</p></div>
<p>இந்த stop முடிந்து மீண்டும் பரிசலில் ஏறிக் கொண்டோம். இம்முறை, பரிசல்காரர் பரிசலை 360 டிகிரி சுழற்றியது தான் சிறப்பம்சம். அவர் சுழற்றியதில் நாங்கள் எல்லாம் தலை சுற்றிப் போனோம். இன்னும், பரிசலைச் சில சிற்றருவிகளின் கீழ் கொண்டு சென்று எங்களை நனையச் செய்தார். இவை எல்லாம் எல்லா பரிசல்காரர்களும் செய்தார்கள். பின் ஒரு மணல் திட்டில் எங்களை இறக்கிவிட்டார். அந்த மணல் திட்டு தான் கர்நாடகா-தமிழ்நாடு அரசுகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருகிறது &#8211; the disputed area &#8211; என்று சொன்னார். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில், ஒரு மின் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் அளவுக்கு அத்திட்டு பெரிதாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதை பற்றி எல்லாம் கவலைப் படாமல், நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கத்</p>
<div class="wp-caption alignright" style="width: 260px"><a href="http://www.flickr.com/photos/deepakvenkat/2749522390/in/set-72157606643248954/"><img title="காவிரி" src="http://farm4.static.flickr.com/3001/2749522390_7d9aa16b20.jpg?v=0" alt="காவிரி" width="250" height="166" /></a><p class="wp-caption-text">காவிரி</p></div>
<p>தொடங்கினோம். இந்த மணல் திட்டின் சிறப்பம்சம் (highlight), வறுத்த மீன்கள். ஒகேனக்கல்லுக்கே இது ஒரு சிறப்பம்சம் என்று கூடச் சொல்லலாம். எங்கு பார்த்தாலும் மீன் வறுவலின் வாசம் மூக்கைத் துளைக்கிறது. நானும் எனது அசைவ நண்பர்களும் மீன் வறுவலை ஒரு பதம் பார்த்தோம். மற்றவர்கள் சிப்ஸ் மட்டும் தின்று மனநிறைவடைய வேண்டியிருந்தது பாவ்ம் <img src='http://deepakvenkat.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>இவ்விடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். என் நண்பர்கள் எல்லோரும் நீரில் நீந்தி &#8211; விளையாடிக் கொண்டிருக்க, நான் கரையில் நின்றுகொண்டு மீன் தின்றுகொன்டிருந்தேன் (ஹிஹி&#8230; வழக்கம் போல&#8230;). அவர்களில், நண்பர் ஜிபிக்கு நீச்சல் தெரியாது. காலடியில் இருந்த மணலில் நன்றாக ஊன்றிக்கொண்டு, நீரில் விளையாடிக் கொண்டிருந்தவர், திடீரென்று கால் வழுக்கி, நீரில் மூழ்கத் தொடங்கினார். காலடியில் இருந்து மணல் சரியத் தொடங்கியதாலும், நீரில் current அதிகமாக இருந்ததாலும், அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு வழியாக, ஹேமந்துக்கு நீச்சல் தெரியுமென்பதால், அவரை இழுத்துக் கரை சேர்த்தார். நாங்களெல்லாம் ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டது அப்போதுதான். அதனால், ஒகேனக்கல்லில் நீரில் விளயாடும் போது, எச்சரிக்கை மிகவும் முக்கியம்.</p>
<div class="wp-caption alignleft" style="width: 260px"><a href="http://www.flickr.com/photos/deepakvenkat/2748689637/in/set-72157606643248954/"><img title="பாய்ச்சல்" src="http://farm4.static.flickr.com/3271/2748689637_09f2d76d63.jpg?v=0" alt="பாய்ச்சல்" width="250" height="167" /></a><p class="wp-caption-text">பாய்ச்சல்</p></div>
<p>இந்த இடத்தை முடித்து கொண்டு மீண்டும் பரிசலில் ஏறி, ம்றுகரையில் இருந்த பாறைகளுக்குச் சென்றோம். இந்தப் பாறைகளின் இடுக்கில் நீர் மிகவேகமாகப் பாய்வது, குளிப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. நான் முதலில் குறிப்பிட்டது போல, இங்கும் வேகம் மிக அதிகமாக இருந்தது. நாங்கள் பாறை இடுக்குகளில் ஊன்றிக்கொண்டு குளித்தோம். ஸ்ரீகாந்த் மட்டும் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டார். நாங்கள் எல்லாம் தண்ணீரின் மசாஜ்ஜையே தாங்கமுடியாமல் திணறியபடி மகிழ்ந்தோம். 2 ம்ணி நேரம், நீரில் விளையாடிக் களைத்து, பின் மீண்டும் பரிசலில் ஏறிக் கொண்டோம்.</p>
<p>இது தான் இறுதிப் பயணமாக இருந்தது. ஒகேனக்கல்லின் கர்நாடக எல்லையில் ஒரு மலை இடுக்கில் நீர் பீய்ச்சாடித்துக்கொண்டு பாய்கிற கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்க மக்கள் எல்லோரும் அலைமோதிக் கொண்டிருந்தனர். முன்னர் சொன்ன வேகத்தைத் தூக்கிச் சாப்பிடுகிற அசுரப் பாய்ச்சல் இது. சிக்கினால் சின்னாபின்னமாக்கி விடுகிற இராட்சதப் பாய்ச்சல். அரண்டு</p>
<div class="wp-caption alignright" style="width: 260px"><a href="http://www.flickr.com/photos/deepakvenkat/2748690757/in/set-72157606643248954/"><img title="ஐவர் குழு" src="http://farm4.static.flickr.com/3270/2748690757_e828771839.jpg?v=0" alt="ஐவர் குழு" width="250" height="167" /></a><p class="wp-caption-text">ஐவர் குழு</p></div>
<p>போகிற அளவுக்கு ஆர்ப்பரித்துப் பாய்ந்துகொண்டிருந்தது காவிரி. இது தான் பயணத்தின் கிளைமாக்ஸாக இருந்தது. பயணம் முடிந்து திரும்பிச் சென்று நண்பர்கள், உற்றாரிடம் வருணிக்க வேண்டும் என்றால், அந்த பாய்ச்சலையும், வேகத்தையும், அசுரத்தனத்தையும் அளந்து விவரிக்க வார்த்தைகள் கிடைக்காது என்பதால், நிழற்படக் கருவிகள் இறுதியாக &#8216;க்ளிக்&#8217;கிக் கொண்டன. பயணத்தை இனிதே முடித்த திருப்தியும் எங்களைச் சூழ்ந்து கொண்டது.</p>
<p>திரும்புகிற போது, இன்னும் ஒரு பொட்டலம் நிறைய மீன் வறுவல் வாங்கிக் கொண்டோம். ஒரு மாறுதலுக்காக, தர்மபுரி &#8211; கிருஷ்ணகிரி வழியாகவே பெங்களூர் திரும்பலாம் என்று திரும்பிய எங்களின் பொறுமையை மிகவும் சோதிப்பதாக அப்பாதை அமைந்துவிட்டது. சாலைப் பழுதுபார்க்கும் &#8211; விரிவுபடுத்தும் பணிகள் எல்லா இடங்களிலும் நீக்கமற நடந்துகொண்டிருந்ததால், காரை ஓட்டிய நண்பர் ஸ்ரீகாந்த் களைத்துப் போனார் என்றால், அது குறைவுதான். மீண்டும் பென்னாகரம் &#8211; பாலக்கோடு &#8211; இராயக்கோட்டை &#8211; ஓசூர் பாதையில் செல்வது தான் சிறந்தது என்பது இப்பதிவைப் படிக்கிற அன்பர்களுக்கு நாங்கள் கொடுக்கிற டிப். முழுதும் களைத்து, இரவு 12 மணியளவில் பெங்களூர் வந்து வீட்டில் படுக்கையில் விழுந்ததோடு எங்கள் பயணம் இனிதே முடிந்தது.</p>


<p>Related posts:<ol><li><a href='http://deepakvenkat.com/2008/09/a-trip-to-somnathpura-talakad-and-shivanasamudram/' rel='bookmark' title='Permanent Link: A trip to Somnathpura, Talakad and Shivanasamudram'>A trip to Somnathpura, Talakad and Shivanasamudram</a></li>
<li><a href='http://deepakvenkat.com/2009/07/chased-by-elephant/' rel='bookmark' title='Permanent Link: The day we were chased by an elephant&#8230;'>The day we were chased by an elephant&#8230;</a></li>
</ol></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2008/09/%e0%ae%92%e0%ae%95%e0%af%87%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பெங்களூரிலிருந்து&#8230;</title>
		<link>http://deepakvenkat.com/2007/11/%e0%ae%aa%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/</link>
		<comments>http://deepakvenkat.com/2007/11/%e0%ae%aa%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/#comments</comments>
		<pubDate>Sat, 03 Nov 2007 10:43:42 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[பெங்களூரு]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/2007/11/03/%e0%ae%aa%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/</guid>
		<description><![CDATA[பதிவுப் பிரியர்களுக்கு வணக்கம். நீண்ட நெடிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்.
ஆனால், இம்முறை சென்னையிலிருந்து அல்ல&#8230; பெங்களூரிலிருந்து&#8230;

நன்றி: சிட்னி
ஊர் மாறினாலும், எழுதுகிற விஷயம் அதே தான்&#8230; சும்மா அதையும் இதையும் எழுதுகிறேன்&#8230; இனி நம்ம பெங்களூரு பற்றிய செய்திகளை அதிகம் எதிர்பார்க்கலாம்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p>பதிவுப் பிரியர்களுக்கு வணக்கம். நீண்ட நெடிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்.</p>
<p>ஆனால், இம்முறை சென்னையிலிருந்து அல்ல&#8230; பெங்களூரிலிருந்து&#8230;</p>
<div style="text-align:center;"><img style="width: 314px; height: 329px;" src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/vidhana.jpg" border="0" alt="" hspace="5" vspace="1" width="314" height="329" /></div>
<p align="center">நன்றி: <a href="http://www.flickr.com/photos/sydneya/99345708/" target="_blank">சிட்னி</a></p>
<p>ஊர் மாறினாலும், எழுதுகிற விஷயம் அதே தான்&#8230; சும்மா அதையும் இதையும் எழுதுகிறேன்&#8230; இனி நம்ம பெங்களூரு பற்றிய செய்திகளை அதிகம் எதிர்பார்க்கலாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2007/11/%e0%ae%aa%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>சென்னை 30-ஆவது புத்தகக் காட்சி</title>
		<link>http://deepakvenkat.com/2007/01/chennai-book-fair/</link>
		<comments>http://deepakvenkat.com/2007/01/chennai-book-fair/#comments</comments>
		<pubDate>Mon, 15 Jan 2007 07:58:27 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[Food and Dining]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[நூல் நயம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[book release]]></category>
		<category><![CDATA[bookfair]]></category>
		<category><![CDATA[books]]></category>
		<category><![CDATA[Chennai]]></category>
		<category><![CDATA[evening]]></category>
		<category><![CDATA[fair]]></category>
		<category><![CDATA[function]]></category>
		<category><![CDATA[january]]></category>
		<category><![CDATA[joseph]]></category>
		<category><![CDATA[pongal]]></category>
		<category><![CDATA[reading]]></category>
		<category><![CDATA[sivakumar]]></category>
		<category><![CDATA[solomon pappayya]]></category>
		<category><![CDATA[surya]]></category>
		<category><![CDATA[talk]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[tamilnadu]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/2007/01/15/chennai-book-fair/</guid>
		<description><![CDATA[ஜனவரி மாதம் என்றாலே சென்னையில் என் போன்ற புத்தகப் புழுக்களுக்குக் கொண்டாட்டம் தான். ஆண்டுதோறும் சென்னையில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிக் கொண்டே போகிறது. வழக்கமான இடத்தில் இல்லாமல், இம்முறை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். இவ்விடத்தில் முதல் நல்ல விஷயம், போக்குவரத்து இடர்பாடு இல்லாமல் எளிதில் சென்றடைய முடிகிறது. வெளியில் வைத்திருக்கும் வண்ணமயமான வரவேற்பு வளைவைத் தாண்டிச் சென்று, உள்ளே ஏராளமாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/banner.jpg" border="0" alt="" vspace="10" width="449" height="102" align="left" />ஜனவரி மாதம் என்றாலே சென்னையில் என் போன்ற புத்தகப் புழுக்களுக்குக் கொண்டாட்டம் தான். ஆண்டுதோறும் சென்னையில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிக் கொண்டே போகிறது. வழக்கமான இடத்தில் இல்லாமல், இம்முறை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p1.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="left" />இவ்விடத்தில் முதல் நல்ல விஷயம், போக்குவரத்து இடர்பாடு இல்லாமல் எளிதில் சென்றடைய முடிகிறது. வெளியில் வைத்திருக்கும் வண்ணமயமான வரவேற்பு வளைவைத் தாண்டிச் சென்று, உள்ளே ஏராளமாக இருந்த parking area-வில் வண்டியை நிறுத்தினோம்.</p>
<p style="text-align: justify;">குமுதம், விகடன், எக்ஸ்பிரஸ் என்று எல்லோரும் சேர்ந்து வரவேற்றார்கள். நுழைவுச்சீட்டு வாங்க நேராகச் சென்ற எங்களுக்கு ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி. நடிகர் சூர்யா எழுதிய &#8220;இப்படிக்கு சூர்யா&#8221; என்ற நூல் வெளியீடு விழா நடந்து கொண்டிருந்தது. அலையன்ஸ் பதிப்பகத்தின் வெளியீடு. பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கிக் கொண்டிருந்தார். எதேச்சையாக வந்த கூட்டத்தைத் தவிர பெரிய கூட்டம் இல்லை. அதனால், சூர்யாவை அருகில் <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p2.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="right" />சென்று கண்குளிர (ஹிஹி&#8230; என்ன பண்றது&#8230;?) பார்த்து டிஜிக்கேமில் படங்கள் எடுத்துக் கொண்டோம். சூர்யா எப்படியெல்லாம் பெற்றோருக்கு அடங்கிய சமர்த்துப் பிள்ளையாக இருக்கிறார் என்பது பற்றி பாப்பையா பேசிக்கொண்டிருந்தார். அங்கேயே புத்தகம் வாங்குகிறவர்களுக்கு சூர்யா கையெழுத்திட்டுத் தருவார் என்றதும் பல இளைஞர் இளைஞிகள் மேடையை மொய்த்தனர். நாங்கள் ticket counter-ஐ நோக்கி நடந்தோம்.</p>
<p style="text-align: justify;">ஐந்து ரூபாய் நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் முதலில் கவனித்த விஷயம், பிளைவுட் தரை அமைத்திருந்தார்கள். தூசு, மேடு-பள்ளம் என்ற கவலையெல்லாம் இல்லை. இன்னும் அந்த மைதானம் முழுவதற்குமாகப் பெரிய பந்தல் அமைத்திருந்தார்கள். ஆங்காங்கே மின்விசிறிகள் <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p3.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="left" />அமைத்திருந்தார்கள். குறுக்கும் நெடுக்குமாகப் போவது போல் இல்லாமல், வரிசையாக ஸ்டால்களை அமைத்திருந்தார்கள். ஒரு வரிசையை முடித்துவிட்டு, நேராக, அடுத்த வரிசைக்குச் செல்லலாம். அதுமட்டுமின்றி, நல்ல அகலமான பாதை. சென்ற ஆண்டு நடந்தது போல தள்ளுமுள்ளு அனுபவமெல்லாம் இம்முறை கிடையாது. நிறைய கூட்டம் இருந்தபோதும், free-யாக நடக்க முடிந்தது.</p>
<p style="text-align: justify;">புத்தகக் காட்சியில் பெருவாரியாகக் கண்ணுக்குத் தெரிந்த புத்தகங்கள், குழந்தைகளுக்கானவை தான். இளமையிலேயே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி என்றால், பாராட்டலாம். இரண்டாமிடம் ஆன்மீகப் புத்தகங்களுக்கு. <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p4.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="right" />புதிது புதிதாகப் பல ஆன்மீகவாதிகள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். சென்ற ஆண்டுக்கு இந்த ஆண்டு ஆன்மீகம் அதிகமாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். (என் கற்பனையாகவும் இருக்கலாம்). அதன் பின்னால், எப்போதும் போல், பணம் பண்ணுவது எப்படி, வேலை தேடுவது எப்படி போன்றவைகள். எனக்கு மிகவும் பிடித்தமானவை, புத்தக விநியோகஸ்தர்களின் (distributors) ஸ்டால்கள் தான். அவர்களிடம் பல ஊர்களிலிருந்தும், பல நாடுகளிலிருந்தும் பலரும் எழுதும் quality writing கிடைக்கிறது. அது தவிர, பல நம் ஊர் பதிப்பகங்கள் வாயிலாக, புதிய படப்பாளாகளை அடையாளம் காண முடிந்தது. பொதுவாக புத்தகக் கடைகளில் கிடைப்பதை விட இங்கு 10% விலை குறைவு என்பது ஒரு பிள஦lt;br /&gt; ?் பாயிண்ட். <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p6.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="left" />புஸ்தக் மஹால், திருமகள் நிலையம், கிழக்கு பதிப்பகம், உயிர்மை பதிப்பகம் என்று பல ஸ்டாலகளில் பலப்பல புத்தகங்கள் வாங்கித் திணித்துக் கொண்டேன். ஒரு வருடம் முழுவதற்கும் வேண்டுமல்லவா? உயிர்மை பதிப்பகத்தில் மனுஷ்யபுத்ரன் அவர்களைப் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.</p>
<p style="text-align: justify;">பல இடங்களில் மின்விசிறிகள் வைத்திருந்தாலும், காற்றோட்டமாக இல்லாமல் கொஞ்சம் அடைப்பாக இருந்தது ஒரு குறை. அதுவுமில்லாமல், வரிசைகள் நீளமாக இருந்ததும், ஒரு வரிசை முழுவதும் கடந்து தான் அடுத்த வரிசைக்குப் போகவேண்டியிருந்ததும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஸ்டால்களுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் தடுப்புகள் போட்டிருந்தார்கள். பல தடுப்புகள் தள்ளப்பட்டு, மக்கள் அடுத்த வரிசைக்குச் செல்ல குறுக்கு வழிகள் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆங்காங்கே தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், காட்சிக்கு உள்ளே எதுவும் உண்பதற்குக் கிடைக்கவிலை. <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p8.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="right" />இது ஒரு விதத்தில் நன்றாக இருந்தாலும், கிட்டத்தட்ட 400 ஸ்டால்கள் இருப்பதால், பாதி முடிப்பதற்குள் சோர்வாகிவிடுகிறது. எதுவும் உள்ளே போகாமல் முழுவதும் முடிப்பது சிரமம். ஆனால், கண்காட்சிக்கு விளியில், பெரிய அரங்கம் அமைத்து &#8220;The Rice Bowl&#8221; என்ற பெயரில் food court அமைத்திருக்கிறார்கள். மிகவும் வரவேற்கத்தக்கது. (ஹிஹி&#8230;).</p>
<p style="text-align: justify;">Prodigy ஸ்டாலில் புதிய முயற்சியாக குழந்தைகளுக்காக, ஓவியம் தீட்டும் போட்டிகள் நடத்துகிறார்கள். <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p5.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="225" height="300" align="left" />பல குழந்தைகளை வரைய விட்டு அம்மாக்கள் அவர்களை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். வெளியே மற்றுமொரு சிற்றரங்கத்தில் அறிவியல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது குழந்தைகளுக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கும் பயனளிக்கும். இன்னும் ஆவணப் படங்கள் போன்றவற்றுக்காக சிற்றரங்கம் அமைத்திருந்தார்கள். நேரமின்மையால் இவற்றைக் கவர் பண்ண முடியவில்லை. இம்முறை காட்சியில் ஸ்டால்கல் எல்லாம் Chennai Trade Centre-இல் இருப்பது போல் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் அமைத்திருந்தது குறிப்பிடவேண்டிய விஷயம். எல்லாம் முடித்துக் கொண்டு வெளியில் வந்த போது, கங்கை அமரன் அவர்களின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சில நல்ல பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">புத்தகக் காட்சியில் எல்லா தரப்பினருக்கும் ஏதேனும் கிடைக்கிறது. என் போன்றவர்களுக்கு எல்லாமே கிடைக்கிறது. BAPASI நடத்தும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்குத் தமிழக முதல்வர் permanent-ஆக நிலம் ஒதுக்க இசைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இன்னும் தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் எழுத்தாளர்களுக்காக வழங்கியிருக்கிறபடியால் கலைஞரைப் பாராட்டலாம். சென்னையில் புத்தகக் காட்சி பற்றி இன்னும் அதிகமாக விளம்பரமும் விழிப்புணர்வும் <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p9.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="right" />ஏற்படுத்துவது அவசியம். தமிழக-தென்னக-இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளோடு, அதிகமான அளவில் உலக எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவற்றின் தமிழாக்கப் பதிப்புகளையும் கொண்டு வரலாம். இன்னும், தமிழ் புத்தகங்களின் அச்சுத் தரத்தை மேம்படுத்தலாம். Travelogues, Armchair Reading, Satires போன்ற விஷயங்களைத் தமிழில் அதிகமாகவும் அழகாகவும் வெளியிட முயலலாம். இது போன்ற படைப்புகளுக்கு பதிப்பகத்தாரும், அவ்வண்ணமே அரசாங்கமும் ஊக்கமளித்தால், தமிழின்-தமிழரின் ப்டைப்புகளில் ஒரு variety-யைக் கொண்டுவர முடியும். தமிழ் கற்றவர்களின் அறிவுத் தேடல்களுக்கு நல்ல தீனி போட முடியும்.</p>
<p style="text-align: justify;">கற்றது கைம்மண்ணளவு &#8211; கல்லாதது உலகளவு! அனைவருக்கும் இனிய பொবt;br /&gt; ??்கல் நல்வாழ்த்துகள்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2007/01/chennai-book-fair/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>மார்கழியில் மாக்கோலங்கள்</title>
		<link>http://deepakvenkat.com/2007/01/rangoli/</link>
		<comments>http://deepakvenkat.com/2007/01/rangoli/#comments</comments>
		<pubDate>Thu, 11 Jan 2007 16:44:56 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/2007/01/11/rangoli/</guid>
		<description><![CDATA[என் சிறு வயது முதலே, டிசம்பர் மாதத்து மத்தியில் மார்கழி மாதம் தொடங்கியதும் எங்கள் வீடு களை கட்டும். மார்கழி என்றாலே கோலங்கள் தானே. சிறியதும் பெரியதுமாய் வண்ணக் கோலங்கள். எங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் யாரும் இல்லை என்பதால், கோலம் போடுவதில் அம்மா &#8211; பாட்டிக்கு அஸிஸ்டென்ட் வேலை செய்யும் விதமாகத் தொடங்கியது என் கோல மோகம். கோலங்களுக்கு கலர் போடுவதில் தொடங்கி, பின்னர் படிப்படியாக புள்ளி வைத்துக் கோலம் போடுவது முதல், பல காம்ப்ளிகேஷன்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>என் சிறு வயது முதலே, டிசம்பர் மாதத்து மத்தியில் மார்கழி மாதம் தொடங்கியதும் எங்கள் வீடு களை கட்டும். மார்கழி என்றாலே கோலங்கள் தானே. சிறியதும் பெரியதுமாய் வண்ணக் கோலங்கள். எங்கள் வீட்டில் <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/4085b.gif" border="0" alt="படத்தில் இருப்பதி simple தேர்க் கோலம். நிஜமான தேர்க் கோலத்தின் படம் கிடைக்கவில்லை." hspace="10" vspace="10" width="199" height="313" align="left" />பெண் பிள்ளைகள் யாரும் இல்லை என்பதால், கோலம் போடுவதில் அம்மா &#8211; பாட்டிக்கு அஸிஸ்டென்ட் வேலை செய்யும் விதமாகத் தொடங்கியது என் கோல மோகம். கோலங்களுக்கு கலர் போடுவதில் தொடங்கி, பின்னர் படிப்படியாக புள்ளி வைத்துக் கோலம் போடுவது முதல், பல காம்ப்ளிகேஷன்கள் கொண்ட கம்பிக் கோலங்கள் போடுவது வரை பலவும் பழகியிருக்கிறேன். பக்கத்து வீட்டார் கொண்டு வந்து கொடுத்த கோலப் புத்தகத்தில் இருந்த கோஅங்களையெல்லாம் காப்பி அடித்து நோட்டில் வரைந்து வைக்க ஆரம்பித்து, பின்னால், அதை அடிப்படையாகக் கொண்டு மண் தரையில் கோலமாவில் மாக்கோலம் போடும் அளவுக்குக் கைதேர்ந்தவனானேன் என்பதில் எனக்கு நிறைய பெருமிதம் உண்டு.</p>
<p>;</p>
<p>அப்போதெல்லாம், கோலம் என்றாலே எல்லோரும் சங்கு கோலம், மயில் கோலம், கத்திரிக்காய் கோலம், ரோஜா கோலம் என்று சில ஸ்டாண்டர்ட் கோல வகைகள் வைத்திருப்பார்கள். இவையெல்லாம் பல யுகங்களாகப் போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். கண்ணிமைக்கும் நேரத்தில் கத்திரிக்காய் கோலம் போட்டு விடுவார்கள். அவ்வளவு பிராக்டிஸ். இன்னும், பஃபூன் கோலம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கோலம், என்றெல்லாம் உண்டு. பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சமாக, விகடன், குமுதம் போன்ற அறிவுக் களஞ்சியங்கள் வாயிலாக மக்கள் புதுப்புது கோலங்களைக் கற்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கு, கோலத்திற்கென்றே பட்டயப் படிப்பு இருக்கிறதென்று யாராவது சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை.</p>
<p>என்னதான் விதம் விதமாகக் கலர் கோலங்கள் போட்டாலும், எனக்கு எப்போதும் கம்பிக் கோலங்கள் மீது நிறைய பாசம் உண்டு. கம்பி கோலங்கள் தான் ஒரு கோல வல்லுனரின் நிபுணத்துவத்தை (expertise) பறைசாற்றுவது போல இருக்கும். என்னிடம் இருந்த கலெக்ஷனிலேயே மிகவும் கடினமான கம்பிக் கோலங்களைக் கண்டுபிடித்து, அவற்றையெல்லாம் பழகி, இரவு நேரங்களில் போடுவேன். என் வீட்டில் இரவில் தான் கோலம் போடுவர்கள். மார்கழி பனியில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டுக் கோலம் போடுவதெல்லாம் கிடையாது. எங்கள் தெரு முழுவதும் இரவில் கோலம் போடுவார்கள். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு கோலங்கள் போடுவார்கள். பின்னர், தெரு பெரியவர்கள் ஒவ்வொரு கோலமாகப் பார்த்து மார்க் போடுவதும் நடக்கும். நன்கைந்து பேர் சுற்றி நின்றுகொண்டு கோலம் போடுவதைப் பார்த்தார்கள் என்றால், நாம் பாஸ். நிறைய முறை என் கோலம் பாஸ் ஆகியிருக்கிறது. ஃபர்ஸ்ட் கிளாஸில் எல்லாம் கூட&#8230;</p>
<p>இப்போதெல்லாம் கோலங்கள் குறைந்து விட்டன. இன்னும் எங்கள் <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/kolam1.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="285" height="213" align="right" />தெருவில் கோலம் போடுகிறார்கள். ஆனால் முன்பிருந்த போட்டி, வேகம் எல்லாம் இல்லை. நானும் கல்லூரி, வேலை என்று விலகி விட்டதால் என் அம்மாவும் பாட்டியும் தான் இன்றைக்கும் கோலம் போடுகிறார்கள். பல நண்பர்கள் வீடுகளில் எல்லாம் கோலம் போடுமளவிற்கு வீட்டின் வாசலில் இடம் இல்லை. குறிப்பாக, இப்போது அனைவரும் பிளாட்டுகளில் வசிப்பதால், ஸ்டிக்கர் கோலம் வாங்கி வந்து, கதவின் வெளியில் ஒட்டி விடுகிறார்கள். ஒரு மார்கழியிலிருந்து அடுத்த மார்கழி வரும் வரைக்கும் ஒரே ஸ்டிக்கர் தான். கத்திரிக்காய் கோலம் எல்லாம் மலையேறிவிட்டது என்று நினைக்கிறேன். சங்கு கோலம் பட்டும் இன்னும் பல இடங்களில் பார்க்க முடிகிறது. என்ன இருந்தாலும், இன்றைக்கும் தேர் வடிவில் கம்பிக் கோலம் யாராவது போட்டிருந்தால், இரண்டு நிமிடம் நின்று பார்த்து ரசித்துவிட்டுச் செல்கிறேன். நாளைக்கு இருக்குமோ இருக்காதோ&#8230;!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2007/01/rangoli/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>புத்தாண்டில் புதுத்தொடக்கம்</title>
		<link>http://deepakvenkat.com/2007/01/diya-new-year/</link>
		<comments>http://deepakvenkat.com/2007/01/diya-new-year/#comments</comments>
		<pubDate>Mon, 01 Jan 2007 02:53:15 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[தியா]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/2007/01/01/diya-new-year/</guid>
		<description><![CDATA[எனக்கு இந்தப் புத்தாண்டு புதுமையாக இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிய போது டிசம்பர் 31, காலை 6.30 மணி. எங்களின் சமூக அமைப்பான தியா சார்பில் 2007-ஆம் ஆண்டுக்கான சமூகப் பணிகளுக்கு முன்னோட்டமாய் மரம் நடுவிழா கொண்டாடினோம். சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், 5 மரக் கன்றுகளை நட்டு, அதற்குக் காப்பாக வேலி அமைக்கும் பணி காலையில் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் பேசி, அவர்களின் அனுமதியும் ஆர்வமும் பெற்று, 5 இடங்கள் தேர்வு செய்தோம். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எனக்கு இந்தப் புத்தாண்டு புதுமையாக இருந்தது. <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/vel1.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="266" height="202" align="left" />புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிய போது டிசம்பர் 31, காலை 6.30 மணி. எங்களின் சமூக அமைப்பான <a href="http://diya.org.in/" target="_blank"><strong>தியா</strong></a> சார்பில் 2007-ஆம் ஆண்டுக்கான சமூகப் பணிகளுக்கு முன்னோட்டமாய் மரம் நடுவிழா கொண்டாடினோம். சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், 5 மரக் கன்றுகளை நட்டு, அதற்குக் காப்பாக வேலி அமைக்கும் பணி காலையில் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் பேசி, அவர்களின் அனுமதியும் ஆர்வமும் பெற்று, 5 இடங்கள<img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/vel3.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="269" height="202" align="right" />் தேர்வு செய்தோம். நண்பர்கள் ஸ்ரீநிவாஸ், ஸ்ரீராம், விக்ரம் உள்ளிட்ட பலரும் சேர்ந்து, குழிகள் தோண்டி மரங்களை நட்டோம். மரங்களுக்குப் பாதுகாப்பாக எளிய முறையில், பொருட்செலவு இல்லாமல் வேலி அமைக்கும் திட்டத்தை நண்பர்கள் உருவாக்கியுள்ளனர். சைக்கிள் கடைகளில் இருந்து பழைய டயர்களை வாங்கிவந்து, அவற்றை உள்வெளியாகத் திருப்பிவிட்டால், <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/vel5.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="265" height="199" align="left" />பட்டையாக இருக்கும். நடுகிற மரத்தைச் சுற்றி மூன்று கொம்புகள் நட்டு அவற்றில் இந்த டயர்களைக் கட்டிவிடுகிறார்கள். இதனால், ஆடு மாடுகளிலிருந்து இந்த மரங்கள் எளிதில் காப்பாற்றப்படுகின்றன. நமக்கும் பொருட்செலவு இல்லை.எங்கெல்லாம் கடைக்காரர்கள் நீர்விட்டுப் பராமரிக்க ஒத்துக்கொள்கிறார்களோ, அங்கெல்லாம் மட்டுமே மரங்களை நட்டோம். முதல் மாதம் அந்தக் கடைக்காரர்கள் நீர்விட்டுப் பராமரித்தால், பின்னர், வாரம் இருமுறை மரங்களுக்கு நீர் பாய்ச்ச ஆளமர்த்தும் திட்டமும் உள்ளது. படிப்படியாக வாரந்தோறும் மரங்கள் நட்டு, வேளச்சேரி 100 அடி சாலை முழுவதையும் கவர் செய்வதென முடிவு <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/vel4.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="271" height="203" align="right" />செய்துள்ளோம்.<br />
இதற்கு முன்னால், தியா சார்பில், <a href="http://www.nizhaltn.org/" target="_blank"><strong>&#8216;நிழல்&#8217;</strong></a> என்ற அமைப்பின் உதவியுடன் வேளச்சேரி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தியா சார்பில் பல நல்ல சமூக திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். 2007-இல் இன்னும் பல விஷயங்கள் ஈடேறும் என்றும் எதிர்பார்க்கலாம். தியா மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும். <strong><a href="http://www.diya.org.in/" target="_blank">http://diya.org.in</a></strong></p>
<p>பசுமையுடன் தொடங்கிய 2007, பசுமையான விஷயங்களோடு செழிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2007/01/diya-new-year/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>வாரணம் ஆயிரம்</title>
		<link>http://deepakvenkat.com/2006/11/vaaranam-aayiram/</link>
		<comments>http://deepakvenkat.com/2006/11/vaaranam-aayiram/#comments</comments>
		<pubDate>Thu, 30 Nov 2006 15:37:25 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[பார்வை]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/2006/11/30/vaaranam-aayiram/</guid>
		<description><![CDATA[திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைப்பது என்பது மிகப்பெரும் சர்ச்சையாகி, பின் வரிவிலக்கு அறிவிப்பால் இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தமிழில் பெயர் வைப்பது ஒரு புறம் இருக்கட்டும். இயக்குநர் கௌத்தம் மேனன், சூர்யாவுடனான தன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டதிலிருதே எல்லோரும் &#8220;வாரணம் ஆயிரம்&#8221; பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். &#8220;வாரணம் என்றால் என்ன?&#8221; என்பது தான் பேச்சின் சாராம்சம். இப்படத்த்ன் தலைப்பு, &#8220;வர்ணம் என்னவோ&#8230;&#8221;, &#8220;வானரம் ஆயிரம்&#8221;, &#8220;வருணம் ஆயிரம்&#8221;, &#8220;வரணும் ஆயிரம்&#8221; என்று நண்பர்கள் நாவிலெல்லாம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைப்பது என்பது மிகப்பெரும் சர்ச்சையாகி, பின் வரிவிலக்கு அறிவிப்பால் இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தமிழில் பெயர் வைப்பது ஒரு புறம் இருக்கட்டும். இயக்குநர் <a href="http://en.wikipedia.org/wiki/Gautham_Menon" target="_blank">கௌத்தம் மேனன்,</a> சூர்யாவுட<img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/varanam.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="270" height="149" align="left" />னான தன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டதிலிருதே எல்லோரும் &#8220;<a href="http://en.wikipedia.org/wiki/Vaaranam_Aayiram" target="_blank">வாரணம் ஆயிரம்</a>&#8221; பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். &#8220;வாரணம் என்றால் என்ன?&#8221; என்பது தான் பேச்சின் சாராம்சம். இப்படத்த்ன் தலைப்பு, &#8220;வர்ணம் என்னவோ&#8230;&#8221;, &#8220;வானரம் ஆயிரம்&#8221;, &#8220;வருணம் ஆயிரம்&#8221;, &#8220;வரணும் ஆயிரம்&#8221; என்று நண்பர்கள் நாவிலெல்லாம் பல பரிணாமங்களைப் பெற்றுக் கொண்டிருக்க, பலர் &#8216;வாரணம்&#8217; என்றால் என்ன என்று தெரியாமல் திகைப்பது தெரிந்ததே. அதனால், &#8216;சும்மா&#8217; &#8211; வாரணம் பற்றி ஒரு சின்ன பதிவு.</p>
<p>&#8216;வாரணம்&#8217; என்றால் யானை. &#8216;வாரணம் ஆயிரம்&#8217; படத்தைப் பற்றி செய்தி வெளியிடும் போதே சில ஏடுகள், அடைப்பில், &#8220;<em>Thousand Elephants</em>&#8221; என்று சேர்த்தே வெளியிடுகின்றன. <em>Hmmm</em>&#8230;. ஒரு தமிழ்ச் சொல்லின் பொருள் ஆங்கிலத்தில் சொன்னால்தான் தெரிந்துகொள்ள முடிகிறது.</p>
<p>இன்னும், &#8220;வாரணம் ஆயிரம்&#8221; என்ற சொற்பிரயோகம், ஆண்டாள் அருளிய &#8216;நாச்சியார் திருமொழி&#8217;யில் வருகிறது. திருமால் தன்னைத் திருமணம் செய்வதுபோல் தான் கண்ட கனவை ஆண்டாள் தன் தோழியர்க்குச் சொல்கிறபோது,</p>
<p><strong><span style="color: #990033;">&#8220;வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து<br />
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்<br />
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்<br />
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்&#8221;</span></strong></p>
<p>என்கிறார். திருமால், ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருகிறார். அதை அறிந்ததும், ஊர் மக்கள் எல்லாம், பொன்னாலான குடங்களில் நீர் நிரப்பி வைத்து, எல்லா திசைகளிலும் தோரணங்கள் கட்டி திருமாலை வரவேற்பதாக நான் கனவு கண்டேன் தோழி என்று ஆண்டாள் சொல்கிறார்.</p>
<p>இந்தப் பாடல், &#8216;கேளடி கண்மணி&#8217; படத்தில் இளையராஜா இசையில் இசைப்பாடலாக வந்துள்ளது. <a href="http://ww.smashits.com/music/tamil/songs/4608/keladi-kanmani.html" target="_blank">இந்தச் சுட்டி</a>யைச் சொடுக்கவும்.</p>
<p>இயக்குநர் கௌத்தம் மேனன் தொடர்ந்து தன் படங்களுக்கு அழகிய தமிழ்ப் பெயர்கள் வைப்பது மகிழ்ச்சி. (பெயர்கள் அவரின் சொந்தக் கற்பனை அல்ல என்றாலும் அழகாக இருக்கிறது என்று ஒத்துக்கொள்ளலாம் <img src='http://deepakvenkat.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  அவரின் படப் பாடல்களும் விரசமில்லாமல், தூய பாடல்களாகவும், உணர்ந்து இரசிக்கும்படியும் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. கௌத்தம் படங்களுக்குப் பாடல்கள் எழுதும் கவிஞர் தாமரைக்கு ஒரு &#8220;ஓ!&#8221; போடலாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2006/11/vaaranam-aayiram/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
		</item>
		<item>
		<title>இப்போது தான் ஈ அடிக்கிறேன்</title>
		<link>http://deepakvenkat.com/2006/11/the-letter-e/</link>
		<comments>http://deepakvenkat.com/2006/11/the-letter-e/#comments</comments>
		<pubDate>Sat, 11 Nov 2006 18:51:24 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/2006/11/12/the-letter-e/</guid>
		<description><![CDATA[ஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுகிற எழுத்து &#8211; &#8216;E&#8217; தான். &#8216;அவனின்றி ஓரணுவும் அசையாது&#8217; என்பது போல், &#8216;E&#8217; இல்லையெனில் ஆங்கிலத்தில் வாக்கியங்களே இல்லை. இன்னும் E என்பது Energy-யைக் குறிக்கிற குறியீடு. எனர்ஜி என்பது சக்தி. E &#8211; ஆங்கில மொழியின் சக்தி. இன்று, அலுவலகத்தில் அடுத்த மேஜையில் இருக்கிறவரிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றால் E-மெயில் அனுப்ப வேண்டியிருக்கிறது. வர்த்தகமெல்லாம் E-காமர்ஸாக மாறி வருகிறது. நாம் தினமும் உட்கொள்கிற உணவு செரிமானம் ஆவதற்கு, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுகிற எழுத்து &#8211; &#8216;E&#8217; தான். &#8216;அவனின்றி ஓரணுவும் அசையாது&#8217; என்பது போல், &#8216;E&#8217; இல்லையெனில் ஆங்கிலத்தில் வாக்கியங்களே இல்லை. இன்னும் E என்பது Energy-யைக் குறிக்கிற குறியீடு. எனர்ஜி என்பது சக்தி. <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/E.gif" border="0" alt="" hspace="10" vspace="0" width="184" height="127" align="left" />E &#8211; ஆங்கில மொழியின் சக்தி. இன்று, அலுவலகத்தில் அடுத்த மேஜையில் இருக்கிறவரிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றால் E-மெயில் அனுப்ப வேண்டியிருக்கிறது. வர்த்தகமெல்லாம் E-காமர்ஸாக மாறி வருகிறது. நாம் தினமும் உட்கொள்கிற உணவு செரிமானம் ஆவதற்கு, குடலுக்குள் இருக்கிற &#8216;E&#8217;.coli பாக்டீரியா தான் காரணமாக இருக்கிறது. இந்தத் தகவலையெல்லாம் என் கணிப்பொறியில் உள்ளீடு செய்வதற்கு E-கலப்பை என்ற மென்பொருளைத் தான் பயன்படுத்துகிறேன். &#8216;ஈ&#8217; என்ற பெயரில் நயந்தாரா நடித்தப் படம் வந்து சக்கை போடு போடுகிறது. E என்ற பெயரில் கணிப்பொறி மொழி கூட உள்ளது.</p>
<p>கணிதத்தில் &#8216;e&#8217; என்பது natural logrithms-ஐக் குறிக்கிறது. பள்ளிக்கூடத் தேர்வில் இந்த விஷயத்தைப் பக்கத்தில் இருக்கும் பையனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதினால் &#8216;ஈ&#8217; அடிச்சான் காப்பி என்கிறார்கள். அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் புகழ் பெற்றதே &#8216;E&#8217;-யின் மதிப்பைச் சொல்லித்தான். இசையின் ஏழு ஸ்வரங்களில் &#8216;E&#8217; தான் மூன்றாவது ஸ்வரம். &#8216;E&#8217; என்ற எழுத்து குறிக்கிற electric field இல்லையேல் மின்சாரம் இல்லை, மின்னணுவியல் இல்லை, மின்காந்த அலைகள் இல்லை, டிவி, ரேடியோ, மொபைல், இணையம் &#8211; எதுவுமே இல்லை.</p>
<p>இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? E என்பது நம் அன்றாட வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்வதற்குச் சமீபத்தில் தான் எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது.</p>
<p>பல வருடங்களுக்கு முன்னால் ஒரு கவிதை எங்கேயோ படித்திருக்கிறேன் (தினத்தந்தி &#8211; குடும்ப மலர் என்று நினைக்கிறேன்). இன்னும் வரிகள் நினைவிலிருக்கிறது. வ்டித்தவர் பெயர் நினைவில்லை.</p>
<blockquote><p>ஒன்றாய் இருந்த போது ஒட்டத் தெரியாத இதயம்,<br />
ஒதுங்கிச் இருக்கும் போது ஒன்றிடத் தவிக்கிறது.</p></blockquote>
<p>அது போல், E-யின் அருமை E இல்லாத போது தான் தெரிந்தது. என் அலுவலகக் கணிப்பொறியின் கீபோர்டில், E என்ற எழுத்து மட்டும் ஒரு பதினைந்து நாட்களாக வேலை செய்யவில்லை. அதனால், E அடிக்க முடியாமல் நான் ஈ அடித்துக் கொண்டிருந்த சமயத்தில் E பற்றி அறிந்து கொண்டேன்.</p>
<p>கடைசியாக என் கீபோர்டை மாற்றிவிட்டார்கள். அலுவலகத்தில் இப்போது நிம்மதியாக E அடித்துக் கொண்டிருக்கிறேன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2006/11/the-letter-e/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>இன்றைய தமிழகம் பிறந்த நாள்</title>
		<link>http://deepakvenkat.com/2006/11/tamilnadu-is-born/</link>
		<comments>http://deepakvenkat.com/2006/11/tamilnadu-is-born/#comments</comments>
		<pubDate>Tue, 31 Oct 2006 19:06:26 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[பார்வை]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/2006/11/01/tamilnadu-is-born/</guid>
		<description><![CDATA[தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களின் சில பகுதிகள் என்று அனைத்தையும் உள்ளடக்கியிருந்த &#8216;மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி&#8216;, மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாட்டைக் கொண்ட &#8216;மெட்ராஸ் ஸ்டேட்&#8216; உதயமானது நவம்பர் 1, 1956-இல். மாநிலங்கள் ம்றுசீரமைப்புச் சட்டம் (States Reorganisation Act, 1956) அமலாக்கப்பட்டதால், கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று மொழி அடிப்படையில் தனித்தனி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைக்குச் சரியாக 50 ஆண்டுகள் ஆகின்றன. கர்நாடகாவில் இந்நாளை, &#8216;கன்னட ராஜ்யோத்ஸவா&#8216; (Rajyotsava day) என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். கேரளாவில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://upload.wikimedia.org/wikipedia/en/d/df/Madras_Prov_South_1909.jpg" target="_blank"><img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/481px-Madras_Prov_South_1909.jpg" border="0" alt="" hspace="10" vspace="0" width="285" height="354" align="left" /></a>தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களின் சில பகுதிகள் என்று அனைத்தையும் உள்ளடக்கியிருந்த &#8216;<a href="http://deepakvenkat.com/tamil/wp-admin/" target="_blank"></a><a href="http://en.wikipedia.org/wiki/Madras_Presidency">மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி</a>&#8216;, மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாட்டைக் கொண்ட &#8216;<a href="http://en.wikipedia.org/wiki/Madras_state" target="_blank">மெட்ராஸ் ஸ்டேட்</a>&#8216; உதயமானது நவம்பர் 1, 1956-இல். <a href="http://en.wikipedia.org/wiki/States_Reorganisation_Act" target="_blank">மாநிலங்கள் ம்றுசீரமைப்புச் சட்டம்</a> (States Reorganisation Act, 1956) அமலாக்கப்பட்டதால், கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று மொழி அடிப்படையில் தனித்தனி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைக்குச் சரியாக <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D" target="_blank">50 ஆண்டுகள்</a> ஆகின்றன. கர்நாடகாவில் இந்நாளை, &#8216;<a href="http://www.karnataka.com/profile/rajyotsava.shtml" target="_blank">கன்னட ராஜ்யோத்ஸவா</a>&#8216; (Rajyotsava day) என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். கேரளாவில் &#8216;<a href="http://www.ourkeralam.com/keralaataglance/history.htm" target="_blank">கேரளப் பிறவி தினம்</a>&#8216; என்று பெயர். ஆனால், அப்போது பிரிக்கப்பட்ட போது, மெட்ராஸ் ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட், கேரளா ஸ்டேட் என்று தான் பெயரிடப்பட்டன. பின்னர் 1968-இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றது யாவரும் அறிந்ததே.</p>
<p>கர்நாடகம் 1956-இல் தனியாகப் பிரிக்கப்பட்டாலும், மைசூர் என்ற பெயர் தான் இருந்தது. பின்னர் 1973-இல் கர்நாடகா என்ற பெயர் பெற்றது. அன்று முதன் &#8216;கன்னட ராஜ்யோத்ஸவம்&#8217;<img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/india-in-1956.jpg" border="0" alt="" hspace="10" vspace="0" width="238" height="328" align="right" /> கொண்டாடப்படுகிறது.</p>
<p>அதே போல, சுதந்திரத்திற்கு முன்னால், திருவாங்கூர், மலபார், கொச்சி என்று பிரிந்திருந்த மாநிலங்கள், கேரளா என்ற புதிய மாநிலமானது 1956-இல் தான். உலகெங்கும் இருக்கிற மலையாள நண்பர்கள், இந்நாளைக் &#8216;கேரளப் பிறவி&#8217; என்று கொண்டாடுகின்றனர்.</p>
<p>இன்றைய மெட்ராஸ் ஸ்டேட்டில் ஐக்கியமாகியிருந்த ஆந்திராவைப் பிரித்துத் தனி மாநிலம் அமைக்கும் கோரிக்கை நெடுநாளாக இருந்து வந்தது. &#8216;மெட்ராஸ் மானதே&#8217; என்று கோஷமிட்டு சென்னையைத் தலநகராகக் கொண்ட ஆந்திரா அமைக்க வேண்டிப் போராட்டங்கள் நடைபெற்றன. இருந்தாலும், அன்றைக்கு மாநிலத்திலும் மத்தியிலும் தமிழர்களின் &#8216;கை&#8217; ஓங்கியிருந்ததால், சென்னை தமிழகத்திற்கே கிடைத்தது. 1952-இல் &#8216;குர்நூலை&#8217;த் தலைநகராகக் கொண்டு ஆந்திரா அமைக்கப்பட்டது. பின்னர் 1956-இல் தான் தெலங்கானா ஆந்திராவுடன் சேர்க்கப்பட்டு, &#8216;ஐதராபாத்&#8217;தைத் தலைநகராகக் கொண்டு இன்றைய ஆந்திரா பிறந்தது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2006/11/tamilnadu-is-born/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
	</channel>
</rss>
