ஒரு குட்டிக் கதை

January 13th, 2010       2 comments

இணையத்தில் வளைத்தது…

அவனுக்குப் பிறவியிலேயே வலது கை கிடையாது. அவனுக்கு ஒன்பது வயது நிரம்பியபோது, ‘கராத்தே’ கற்றுக்கொள்ள விரும்பினான். பெற்றோரிடம் தன்

Karate
Karate

விருப்பத்தைச் சொன்னான். மகனின் துணிவைக் கண்டு மகிழ்ந்த பெற்றோர், அவனை கராத்தே பள்ளிக்கு அனுப்பினர். சில நாட்களிலேயே நன்றாகக் கராத்தே பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினான். கராத்தே போட்டி ஒன்றில் பங்குபெற விரும்பி, தன் ஆசிரியரிடம் இது தன்னால் முடியுமா என்று கேட்டான். “என் மீது முழு நம்பிக்கை வைத்து, நான் சொல்வதை அப்படியே செய்வதானால், உன்னால் முடியும்” என்றார் ஆசிரியர். அவனும் சம்மதித்தான்.

ஆசிரியர் அவனுக்கு ஒரே ஒரு தாக்குதல் முறையை மட்டுமே கற்றுக்கொடுத்தார். அந்த தாக்குதலில் மட்டும் அவன் நன்றாகக் கவனம் செலுத்திப் பயின்றான். ஆனாலும் அவனுக்குக் கொஞ்சம் கவலையாக இருந்தது. எல்லோரும் பலவிதமான தாக்குதல் முறைகளையும், தற்காப்பு முறைகளையும் நன்றாகப் பயின்றுகொண்டிருக்கும் போது, அவன் மட்டும் ஒரே ஒரு தாக்குதல் முறையை மட்டும் கற்றுக்கொள்வது, அவனுக்குச் சற்று நெருடலாக இருந்தது. ஆசிரியரிடம், தனக்கு மேலும் சில தாக்குதல் முறைகளையும் கற்றுத் தரும்படி கேட்டான். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அந்த ஒரு முறையை மட்டும் நன்றாகப் பயிலுமாறு கூறினார்.

கராத்தே போட்டியின் முதல் சுற்றில் அவன் வெற்றி பெற்றான். அடுத்த சுற்றிலும் வெற்றி பெற்றான். அடுத்தடுத்த சுற்றுகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று கடைசியில் போட்டியிலேயே முதல் இடம் பிடிக்கும் அளவிற்கு வந்து விட்டான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி இது சாத்தியமானது? ஒரே ஒரு கை இரூக்கும் ஒருவன் எப்படி மற்றவர்களோடு போட்டியிட்டு ஒரு கராத்தே போட்டி முழுவதையும் வெல்ல முடியும் என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஆசிரியரிடம் கேட்டான். ஆசிரியர் சிரித்தார். “நான் உனக்குக் கற்றுக்கொடுத்த தாக்குதல் முறை என்னவோ ஒன்றுதான். ஆனால், அந்தத் தாக்குதலில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள ஒரே ஒரு வழி மட்டும் தான் உள்ளது. அது என்னவென்றால், தாக்குபவரின் வலது கையைப் பிடித்து இழுத்துப் போட வேண்டும்!” என்றார்.

iNaiyaththil vaLaiththathu…

avanukkup piRaviyileeyee valathu kai kidaiyaathu. avanukku onpathu vayathu wirampiyapoothu, karaaththee kaRRukkoLLa virumpinaan. peRRooridam than viruppaththais sonnaan. makanin thuNivaik kaNdu pakizntha peRRoor, avanai karaththee paLLikku anuppinar. sila waadkaLileeyee wanRaakak karaaththee payiRsiyil iidupadath thodangkinaan. karaaththee pooddi onRil pangkupeRa virumpi, than aasiriyaridam ithu thannaal mudiyumaa enRu keeddaan. “en miithu muzu wampikkai vaiththu, naan solvathai appadiyee seyvathaanaal, unnaal mudiyum” enRaar aasiriyar.

aasiriyar avanukku oree oru thaakkuthal muRaiyai maddumee kaRRukkoduththaar. antha thaakkuthalil maddum avan wanRaakak kavanam seluththip payinRaan. aanaalum avanukkuk konjsam kavalaiyaaka irunthathu. elloorum palavithamaana thaakkuthal muRaikaLaiyum, thaRkaappu muRaikaLaiyum wanRaakap payinRukoNdirukkum poothu, avan maddum oree oru thaakkuthal muRaiyai maddum kaRRukkoLvathu, avanukkus saRRu werudalaaka irunthathu. aasiriyaridam, thanakku meelum sila thaakkuthal muRaikaLaiyum kaRRuth tharumpadi keeddaan. aanaal, avar maRuththuviddaar. antha oru muRaiyai maddum wanRaakap payilumaaRu kuuRinaar.

karaaththee pooddiyin muthal suRRil avan veRRi peRRaan. aduththa suRRilum veRRi peRRaan. aduththaduththa suRRukaLilum thodarnthu veRRi peRRu kadaisiyil pooddiyileeyee muthal idam pidikkum aLaviRku vanthu viddaan. avanukku onRumee puriyavillai. eppadi ithu saaththiyamaanathu? oree oru kai iruukkum oruvan eppadi maRRavarkaLoodu pooddiyiddu oru karaaththee pooddi muzuvathaiyum vella mudiyum enRu avanukkuk kuzappamaaka irunthathu. aasiriyaridam keeddaan. aasiriyar siriththaar. “waan unakkuk kaRRukkoduththa thaakkuthal muRai ennavoo onRuthaan. aanaal, anthath thaakkuthalil irunthu thammaith thaRkaaththuk koLLa oree oru vazi maddum thaan uLLathu. athu ennavenRaal, thaakkupavarin valathu kaiyaip pidiththu izuththup pooda veeNdum!” enRaar.

அவந்திகா

June 24th, 2005       8 comments

நீங்கள் அவந்திகா மாதிரிப் பெண்ணை எங்கும் பார்த்திருப்பீர்கள். பறக்கும் ரயிலின் சன்னலோரத்தில் செல்ஃபோனில் குசுகுசுக்கும் போது, தோளில் ஹேண்ட்பேக்கோடு பேருந்து நிறுத்தத்தில் வாட்சைத் திரும்பத் திரும்ப நோக்கு(லுக்கு) விடும் போது, சத்யம் தியேட்டர் வாசலில் நண்பர்கள் கூட்டத்து அரட்டையில் ஐக்கியமாகிப் போயிருக்கும் போது, வால் பிடித்துச் செல்லும் சென்னை ட்ராஃபிக்கில் ஸ்கூட்டியை செலுத்தும் சாகசத்தின் போது, இன்னும் பல இடங்களில், இன்னும் பல சந்தர்பங்களில்… இப்போது நீங்கள் அவந்திகாவைப் பார்க்க வேண்டியது, கடைசியாகச் சொன்ன ஸ்கூட்டி பயணத்தில். வெள்ளையில் பூப்போட்ட சுடிதார், பச்சை நிற துப்பட்டா, தோளில் ஹேண்ட்பேக், அதற்குள் ஒரு சிறிய பர்ஸ், அதற்குள் ஒரு சின்ன என்னவோ-வில் செல்ஃபோன். அனைத்தும் ஸ்கூட்டி ஸீட்டில், ஸ்கூட்டி சாந்தோம் சாலையில்! சாந்தோமில் இருக்கும் தன் வீட்டிலிருந்து கிளம்பி, க்ரீன்வேஸ் சாலை வழியாக திருவான்மியூருக்குப் பயணம். பீக் ட்ராஃபிக்கின் நடு சென்டரில் மாட்டித் தவிக்கும் மோட்டார் பைக் அந்நியன்களின் பெருமூச்சுகளுக்கும் ஏக்கப் பார்வைக்கும் நடுவில், லேட்டாக வந்தாலும், அவந்திகா, மஞ்சள் கோட்டைத் தாண்டி, சிக்னலுக்காகக் காத்திருப்போர் பட்டியலை மதியாமல் முன்னே நிற்கும் வாகன அணிவகுப்பின் முகப்பிற்குச் செல்ல, சரியாக சிக்னல் பச்சை! விருட்டென்று ஸ்கூட்டியின் காதைத் திருக, ஸ்கூட்டி எல்லோரையும் முந்தி வேகமெடுக்கிறது. சென்னை சூரியனின் மிராஜ்களைத் துளைத்துப் பாய்கிறது. சென்னைதான் எவ்வளவு மாறிவிட்டது. எல்லா நாட்களிலும், எல்லா சாலைகளிலும், ட்ராஃபிக்! ட்ராஃபிக்! ட்ராஃபிக்! நிரம்பி வழியும் பச்சைப் பேருந்துகள் – மினி இந்தியாக்கள்! "யாகாவா ராயினும்…." என்று வெள்ளைத் தகட்டில் அடித்து வைத்திருக்கும் MTC குறளின் கண் முன்னே சென்னைவாசிகளின் தற்கால வரலாறு முழுதும் கடைவிரிப்பு. மாமா ஓரகடத்தில் பிளாட் வாங்கியதிலிருந்து, பிரகாஷ் நளினியை சைட் அடித்தது வரை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள MTC-கள் உபயம். செவிக்குணவில்லாத போது விழிக்கு உணவு போடும் சுவரொட்டிகள். குமுதம் குமுதம் குமுதம் குமுதம் நக்கீரன் நக்கீரன் நக்கீரன் கல்கி கல்கி கல்கி என்று வரிசையாக. எல்லாவற்றிலும் சிரிக்கும் சோனியாகள், தியாக்கள், சில சமயம் ஆதிகேசவன்கள். எல்லா ஆரவாரத்துக்கும் மௌன சாட்சியாக நிற்கும் பிரம்மாண்ட ஹோர்டிங்குகள். அவற்றைக் கட்டி மேய்க்கிற மாதிரி மேலே இருந்து சிரிக்கும் தகிக்கும் சூரியன். இவை எல்லாவற்றையும் புறக்கணித்து, தன் ஸ்கூட்டியில் பறக்கிற அவந்திகா! திருவிக பாலத்தில் போகும் போதே அடையாறு ஃப்ளைஓவரில் ஸ்கூட்டியில் பறப்பதைக் கற்பனையில் ஓட விடுகிறாள். எதிலும் ஃபாஸ்ட்! சலனமின்றி கடலைத் தொடும் அடையாறு அவள் கண்களின் கவனத்தைக் கவர்ந்தது அரை நொடிதான். பின் மீண்டும் சாலை. ஃப்ளைஓவரில் ஏறி, அங்கு எல்லா சமயமும் தனக்கே உரியதாய் சாலையின் நடுவில் 1985 ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருக்கிற வழுக்கை விழுந்த ரிடையர்ட் க்ளார்க்கை ஓவர் டேக் செய்வது எப்படி என்று மனம் கணக்குப் போட்டுக் கொண்டே ஃப்ளைஓவரை நெருங்க, முன்னாலேயே சட்டென்று இடது பக்கம் திரும்பி விடுகிறாள். அங்கே நிற்பது ப்ரீத். "ஹாய் ப்ரீத்!" ஸ்கூட்டி நின்று விடுகிறது. "ஹேய் அவந்தி! எங்கே?" "சும்மா தான். நம்ம ஷாலு இல்ல, அவளுக்கு நெக்ஸ்ட் மந்த் மேரேஜ். கொஞ்சம் ஏர்லி தான். US மாப்ளெ. டெலிஃபோன் பண்ணா. அதான் சும்மா போய் பார்க்கலாம்னு… நீயும் வாயேன் ப்ரீத்?" "எனக்கு சொஞ்சம் வேலை இருக்கு. விசா இன்டர்வ்யூக்கு ரெடி பண்ணனும். பெஸன்ட் நகர்ல எங்க அங்கிளைப் பார்க்கணும்&
quot
; "ஏறிக்கோயேன். உன்னை ட்ராப் பண்றேன்" "இல்லை பரவாயில்ல. உனக்கு தான் சுத்து" "ஆமாம். இவனை ட்ராப் பண்றதுனால அம்பானி கூட எனக்கு அப்பாயிண்ட்மென்ட்க்கு லேட் ஆகுது பாரு… சும்மா ஏறுடா" ஸ்கூட்டி இருவரையும் சுமந்து கொள்கிறது. ஃப்ளைஓவர் எதிர்பார்ப்புகளை மறந்து, அதன் அடியில் சாலையில் சென்று, மறுபடியும் சிக்னல்! ஒரு வழியாக பெஸன்ட் நகரில் ப்ரீத்தை உதிர்த்து விட்டு, ஷாலுவின் வீட்டை நோக்கி ஸ்கூட்டியைச் செலுத்துகிறாள். எம் ஜி ரோடில் ட்ராஃபிக் சற்று அதிகமாகவே இருக்கிறது. ரெஸ்டாரண்டுகளில் எல்லாம் ஒட்டி உட்கார்ந்த இரட்டை உருவங்கள் சன்னமாக ஏதோ பேசிக்கொண்டுள்ளன. ஃபுட் ஜாயிண்ட் எதிரில் வண்டியில் வெள்ளரிக்காய் விற்பவன் ரோட்டில் உலாப் போகிற யுவதிகளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே "வெள்ளரீ… வெள்ளரீ…" தெருவோரப் பெட்டிக்கடையில் வேளாங்கன்னி மாதா பொம்மைகள். பேக்கரியில் பஃப்ஸ் சாப்பிடும் ஸ்கூல் பையன்கள். ரோட்டைக் கடக்கும் முதியவர். இதோ… அவந்தியை ஓவர்டேக் செய்கிற அந்த யமஹாவில் இரண்டுபேர்… அய்யோ, அவர்கள் என்ன செய்கிறார்கள்? ஓ மை காட்! சட்டென்று அவந்தியின் உடம்பெல்லாம் அட்ரினாலின். கழுத்தில் ஒரு சிராய்ப்பு. "ஹேய் ஹேய் என்னோட செயின்…. செயின்…. திருடன்! திருடன்!!" அவந்தியின் அலறல் கேட்டு அக்கம்பக்கம் இருப்போர் சட்டெனத் திரும்பிப் பார்க்கிறார்கள். அவந்தி ஸ்கூட்டியை நிறுத்திவிடுகிறாள். அந்த யமஹா திருடர்கள் அதோ… இருபதடி தூரத்தில். வாகனக் கூட்டங்களை விலக்கிச் செல்ல எவ்வளவு பிரயத்னம் அவர்கள் செய்கிறார்கள். ஹாங்க்! ஹாங்க்! ஓயாமல் ஹாரன்கள். MTC-யில் பிரசங்கங்கள் நிறுத்தப்பட்டு, எல்லா தலைகளும் ஜன்னலுக்கு வெளியே. அவந்தி என்ன செய்யப்போகிறாள்? யாரேனும் ஏதேனும் செய்கிறார்களா? இன்னும் இன்னும் வெற்றுப் பார்வைகள். முன்னேறும் யமஹா…. ஸம்படி டூ ஸம்திங்! சாலையைக் கடந்த முதியவரைத் தொடர்ந்து ஒரு பள்ளிப் பிள்ளைகள் கூட்டம். சாலை மூன்று வினாடிகளில் ப்ளாக்ட். ட்ராஃபிக்! அதோ ட்ராஃபிக்கில் அந்த யமஹா. அவர்களுக்கு சந்து கிடைக்கவில்லை. இருபதடியில் நிற்கிறார்கள். திடீரென்று தோன்றுகிறது அவந்திக்கு. ஸ்கூட்டியின் காதைப் பலமுள்ளமட்டும் திருகுகிறாள். ஸ்க்கூட்டி விருட்டெனப் பாய, கால் நொடிக்கு அவளை நிறுத்திப்பிடித்த இனர்ஷியா விலகிட, அவளும் பறக்கிறாள். அவந்தி… இன்னும் வேகமாக! பதினைந்து அடி… பன்னிரண்டு… பத்து… ஏழு… ரெண்டு… சடார்! அவந்தியின் ஸ்கூட்டி இடிக்கிற இடியில் யமஹா கொஞ்சம் பேலன்ஸ் மிஸ். அதற்குள் க்ளியராகிவிடுகிறது ட்ராஃபிக்… கிடைத்த சந்தில் பாய நினைக்கும் யமஹா… ஸ்கிரீரீரீரீரீச்ச்ச்ச்ச்!!!! ஸ்கிட் ஆகி சாலையோரத்திற்கு சரிகிறது. இதற்குள் தைரியம் வந்த சில பொதுஜனங்களின் கையில் அந்த யமஹா ஆசாமிகளின் காலர். அவர்களின் முதுகில் தர்ம அடி! தன் ஸ்கூட்டியைப் புறக்கணித்து ஜனத்திரளை நோக்கி ஓடுகிறாள் அவந்தி. "யூ ப்ரூட்ஸ்! செயினைத் திருடினா சும்மா விட்டுடுவேன்னு நினைச்சீங்களா? ராஸ்கல்ஸ்!" தன் ஹீல்ஸ் காலால் அவர்களை நாலு மிதி மிதிக்கிறாள். அதோ அவன் கையில் அவந்தியின் செயின். "டேய் நாதாரி பாப்பாவோட செயினைத் தாடா சோமாரி! இந்தாக் கண்ணு. இவனுங்களையெல்லாம்…" தன் செயின் கிடைத்து விடுகிறது அவந்திக்கு. தன் செயின்! அப்பா அவளுக்கு ஆசையோடு வாங்கிக் கொடுத்தது. தேங்க் காட்! ஒரு நிமிஷம் கலங்கியே போய்விட்டாள். என்ன வேகம்! என்ன பாய்ச்சல்! என்ன தைரியம் அவனுக்கு… அவளுக்கு. இந்த மாதிரியெல்லாம் கூட சென்னையில் நடக்கிறதா என்ன? இவனை…. ரிலக்ஸ்! ரிலாக்ஸ்! அதற்குள் அங்கு வருகிற கான்ஸ்டேபிள் கையில் அந்த யமஹா திருடர்கள். ஜனத்திரளின் ஊடே நகர்ந்து ஸ்கூட்டியை அட

ைகிறாள் அவந்திகா. சே! ஸ்கூட்டி முன் பகுதியில் ஒரு சொட்டை விழுந்திருக்கிறது. ஆனால் செயின் கிடைத்து விட்டதே. அது போதும். செயினை விட்டிருந்தால் ஸ்கூட்டி பழுதாகி இருக்காதோ? ம்ஹூம்! அந்தத் திருடனுக்கு தண்டனை தேவைதான். என்ன தைரியம் இருந்தால் ஒரு பெண்ணின் செயினை நடு சாலையில் திருடுவான். அதுவும் அவந்தியின் செயினை! முட்டாள்கள்! இல்லை… கிராதகர்கள். அவள் செய்தது சரிதான். Prodigal son கதை ஏனோ அவள் நினைவுக்கு வருகிறது. தன் ஸ்கூட்டியை முன்னே செலுத்துகிறாள். "ஷாலூ! ஸாரிடா! நான் அப்றம் உன்னை சந்திக்கிறேன். ஒரு பெரிய மேட்டர். வீட்டுக்குப் போனப்றம் சொல்றேன்" ஸ்கூட்டி வீட்டு வாசலில் நின்றதும் நிற்காததுமாய், உள்ளே டெலிஃபோன் அடிக்கிறது. அவந்திகா தன் சமீபகால சாகசங்களைத் தன் துள்ளலிலேயே விளம்பரப்படுத்துகிறாள். ஓடிச் சென்று, ரிஸீவரை எடுத்து, "ஹலோ." "ஏய் அவந்தி, இன்னிக்கு ஈவ்னிங் நாங்கள்ளாம் பிக்சர் போறோம், நீயும் வரியா?" "ஷ்யூர்! கண்டிப்பா வரேன். ஆமா… என்ன பிக்சர்?" "மிரட்டல் அடி!"

புதிரல்ல… புதிர்! (சிறுகதை)

May 13th, 2005       1 comments

ஆங்கில எழுத்தாளர் Oscar Wilde எழுதிய சிறுகதையான "The Sphinx without a Secret" என்பதைத் தழுவி இந்தச் சிறுகதையை எழுதியுள்ளேன். கதையை அப்படியே மொழிபெயர்க்காமல், நமது சூழல்களுக்கு ஏற்ற விதத்தில் தமிழ்ப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பட்டதால், கதையை remake செய்தேன் எனலாம். இருப்பினும், கதைக் கரு, ஆஸ்கர் வைல்டினுடையது தான்.
* * * * *
அன்று மாலை, திநகர் கண்ணதாசன் சிலைக்கு எதிரே உள்ள தெருவில் நான் தைக்கக் கொடுத்த செருப்பை வாங்கப் போனேன். மண்டையைப் பிளக்கிற இந்த வெயிலிலிருந்து என்று தான் விடிவோ என்று பெருமூச்சு விட்டவனாய் திரும்பிய எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. எதிரில் கண்ணன் நின்றிருந்தான். கண்ணன் என்றால், என் குறைதீர்க்க வந்தப் பரந்தாமன் கண்ணன் இல்லை. இவன் என் பாலிய நண்பன். பள்ளி, கல்லூரி என்று தொடர்ந்து என் கூடவே படித்தவன். பத்து வருஷங்களுக்கு முன்னால் அவனைக் கல்லூரியில் பார்த்தது. "ஹாய்! வாட் எ சர்ப்ரைஸ்" என்று பளீர் புன்னகையோடு கைக்குலுக்கினேன். அவனும் கைக்குலுக்கிவிட்டு லேசாகச் சிரித்தான். சிரிப்பில் சுருதியில்லை. படபடவென்ற அவன் பேச்சும், கோல்கேட் சிரிப்பும் அவன் முகத்தில் எங்கேனும் மிச்சம் மீதி இருக்கிறதா என்று தேடினேன். ஊஹூம். "என்னடா டல்லா இருக்கே? ம்ம்ம்… உனக்கு கல்யாணமாயிடுச்சு, அதானே?" என்றேன், சற்று நக்கலாகவே… "என்னால இந்தப் பெண்களை புரிஞ்சிக்கவே முடியலடா" என்றான். "கண்ணா, என்ன, புதுசா philosophy படிக்றியா? ஓகே ஓகே, யார் அந்த பொண்ணு?" "இங்க ஒரே கூட்டமா இருக்கு… வேற எங்காவது போய் பேசலாமே" அடுத்த நிமிடம், ஆட்டோவில் நுங்கம்பாக்கம் நோக்கிப் பயணமானோம். "எங்கடா போலாம்? நீயே சொல்லு" – இது நான். "எங்கயாவது அமைதியா இருந்தா சரி" – கண்ணன். நுங்கம்பாக்கம் ஹை ரோடில், 'பரிஸ்தா'வில் கூட்டம் அதிகமாக இல்லை. ஆர்டர் செய்த சான்விச்சை மெல்ல கொரித்துக் கொண்டே கேட்டேன், "இப்ப சொல்லுடா". கண்ணன் கொஞ்சம் மௌனமாயிருந்தான். கண்களை மூடிக் கொண்டான். எதையோ யோசிப்பது போல இருந்தது. பிறகு, தன் கையில் வைத்திருந்த தோல்ப்பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்து என்னிடம் கொடுத்தான். மெல்ல அதைத் திறந்து பார்த்தேன். ஒரு பெண்ணின் படம். மன்னிக்கவும்… ஒரு அழகான பெண்ணின் படம்! 'அழகான' என்று சொல்லும் போதே, எல்லாம் அதில் ஐக்கியம். பெரிய கரிய கண்கள், நேர்த்தியான மூக்கு, சிவந்த உதடுகள் – ஒரு முறை பார்த்தாலே காதல் பண்ணலாம் என்று தோன்றியது. போதாக்குறைக்கு, ஒரு மெல்லிய, மிகமெல்லிய புன்னகை – அவள் உதடுகளில். "இவளைப் பத்தி நீ என்ன நினைக்கிற? இவள் நம்பகமானவளா தெரியறாளா?" பார்த்தவுடன் எதையும் சொல்லத் தோன்றவில்லை. எப்படி வேண்டுமாயினும் இருக்கலாம். அழகு என்றாலே ஆபத்து என்று யாரோ சொல்லியிருக்கிறார்களே… புன்னகை வேறு. இலக்கணப்படி பார்த்தால், அவளை நம்புவதும் கஷ்டமாகத்தான் இருந்தது… ஆனால்… "உன்னை தாண்டா கேக்கறேன்… இவளைப் பத்தி என்ன நினைக்கறே சொல்லு" "நீ கேக்றதே புதிராத்தான் இருக்கு. இவ கிட்ட இருக்கிற மோனாலிசா புன்னகை வேற… சரி, விஷயம் என்ன… புரியறா மாதிரி சொல்லு" வெய்ட்டர் வந்து தண்ணீர் ஊற்றிச் செல்லும் வரை அமைதியாய் இருந்தான். அதன் பின்னால் இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினான். கதை உங்கள் பார்வைக்கு இதோ: ஒரு நாள் காலை நான் ஆஃபீஸ் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், அடையாறு சிக்னலில் பச்சை விழுவதற்காக காத்திருந்தேன். டிஜிட்டலில் 85, 84, 83… என்று மிக மெதுவாக வினாடிகள் குறைந்து கொண்டிருந்ததால், சுற்று முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, பக
கத்தில் இருந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து இவள் வேகமாக வெளியில் வந்தாள். சடாரென்று ஒரு ஆட்டோவைப் பிடித்தாள். சிக்னல் பச்சைக்கு மாறிவிடவே, ஆட்டோ கடகடவென ஓடி மறைந்தது. அதோடு அவளும் மறைந்தாள். அவளைப் பார்த்த நிமிடமே அவளிடம் எனக்கு ஒரு வகை ஈர்ப்பு உண்டாகியது. வீட்டுக்குப் போனேன். டிவி பார்த்தேன். அவள் நினைவுகள் மட்டும் அகலவேயில்லை. இரவெல்லாம் அவளையே நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு அடுத்த நாள் அவள் அடையாறு சிக்னலில் தென்படுகிறாளா என்று தேடினேன். அதன் மறுநாளும் தேடினேன். அவள் காணக் கிடைக்கவேயில்லை. அப்புறம் அவளை மறந்து போனேன். அடுத்த வாரம் என் நண்பன் ஒருவன் சவேராவில் பார்ட்டி என்று வரச்சொல்லியிருந்தான். போனேன். பார்ட்டியில் பாட்டு டான்ஸ் என்று அமர்க்களமாக இருந்தது. திடீரென்று…. என்ன ஆச்சரியம்! அடையாறில் பார்த்த அவள், பார்ட்டியில்! நண்பன் அவளை எனக்கு அறிமுகம் செய்தான். "மிஸ் மேகா. மிஸ் மேகா, திஸ் இஸ் கண்ணன்". லேசாகப் புன்னகைத்தாள். அவளின் மோனாலிஸா புன்னகை. "மேகா, நான் உங்களை ஒரு வாரம் முன்னால அடையாறு சிக்னல்ல பார்த்தேன்". அவள் கொஞ்சம் ஷாக் அடித்தது போல அதிர்ந்தாள். பின்னர், மிக மெல்லிய குரலில், "சத்தமா பேசாதீங்க. யாராவது கேட்டுட போறாங்க" என்றாள். ஒரு அழகான பெண்ணிடம் பேசப் போய் இப்படி அசட்டுத்தனமாக ஆனது எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பிறகு, நிறைய பேசினோம். இல்லை இல்லை, பேசினேன். அவள் கொஞ்சமாக, அளந்து அளந்துப் பேசினாள். யாராவது கேட்டுவிடப் போகிறார்கள் என்ற அச்சத்துடன் பேசுவது போல இருந்தது. என்னவானாலும் சரி, இவளைக் காதல் பண்ணியே தீருவேன் என்று என் மனம் துள்ளியது. அவளைச் சுற்றியிருந்த அந்த மர்மம் கூட, அவள் மேலான மயக்கத்தை அதிகரிக்கத்தான் செய்தது. பார்ட்டி முடிந்து அவள் போகும் போது, "மேகா, நாம் மறுபடியும் எப்ப சந்திக்கலாம்?" என்றேன். அவள் சற்று தயங்கினாள். யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். "நாளை மாலை 5 மணிக்கு இங்கேயே சந்திக்கலாம்" என்றாள். வேகமாய் மறைந்து போனாள். அடுத்த நாள் 4.45 மணிக்கே சவேரா போனேன். "இப்பத்தான் கெளம்பிப் போனாங்க" என்றான் வாட்ச்மேன். எனக்கு பலத்த ஏமாற்றமாக இருந்தது. நண்பனுக்கு டெலிஃபோன் செய்து அவள் அட்ரஸை வாங்கினேன். 'மேகா, உன்னைப் பின்னால் எப்போது சந்திப்பது?' என்று கேட்டு அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதை அவளுக்குப் போஸ்ட் செய்தேன். இரண்டு வாரமாகியும் பதில் வரவில்லை. பிறகு, மேகா கொடுக்கச் சொன்னதாக என் நண்பன் எனக்கு ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்தான். பிரித்துப் படித்தேன். 'வரும் ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருப்பேன், அப்போது சந்திக்கலாம்' என்று எழுதியிருந்தாள். அடியில், பின்குறிப்பு என்று போட்டு 'என் வீட்டிற்குக் கடிதம் எழுத வேண்டாம். விவரத்தை நேரில் சொல்கிறேன்' என்று எழுதப்பட்டிருந்தது. ஞாயிறு அன்று அவளைச் சந்தித்தேன். மிக எதார்த்தமாகப் பழகினாள். அவள் மீதான என் காதல் அதிகமாவது போல் தோன்றியது. அன்று நான் கிளம்பும் முன் மிக ரகசியமாக என் அருகில் வந்து சொன்னாள்: "அடுத்த முறை எனக்கு கடிதம் போடறப்ப, திருமதி இந்திரா, ரீடர்ஸ் பாயிண்ட், காலேஜ் ரோடு அப்டீங்கற அட்ரஸ்க்கு எழுதுங்க. சில பர்சனல் காரணத்துக்காக என் வீட்டுக்கு லெட்டர் போடாதீங்க ப்ளீஸ்" அதற்கப்புறம் அவளை நிறைய சந்தித்தேன். அவளின் மர்மமும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்தது. சில சமயம் அவள் வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருக்கிறாளா என்று நினைத்தேன். இருக்க முடியாது. அவளே மிகவும் ரிஸர்வ் டைப் போலத் தோன்றினாள். அவளின் மர்மத்திற்கு மோனாலிஸாவே தேவலாம் போலத் தோன்றியது. இறுதியாக ஒரு நாள
் முடிவு செய்து விட்டேன். அவளை நான் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தேன். அவளிடம் இருந்த மர்மங்கள் என்னைத் தடுக்க முடியாது என்று உறுதியாயிருந்தேன். அவள் கொடுத்த முகவரிக்கு அன்று இரவே ஒரு கடிதம் எழுதினேன். 'என்னை திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு சந்திக்க முடியுமா?' என்று அக்கடிதத்தில் கேட்டிருந்தேன். 'சரி' என்று பதில் எழுதினாள். அன்று நான் தான் உலகத்திலேயே சந்தோஷமான ஆள் என்று தோன்றியது. அவளிடம் என்னமோ இருக்கிறது. அவளின் மர்மங்களைத் தாண்டியும் அவள்பால் ஈர்க்கப்படுவதாக எண்ணினேன். ஆனால் இப்போது யோசிக்கும் போது தோன்றுகிறது. நான் அவளை உண்மையாகவே காதலித்தேன். ஆனால், அவளது மர்மம்: அது மட்டும் என்னை வாட்டி எடுத்தது. ஏன் தான் இப்படி ஒரு போராட்டமோ… கடவுளே! "அப்ப அவளோட மர்மத்த நீ கண்டுபிடிச்சுட்டியா?" கண்ணனின் கதையில் ஐக்கியமாகிப் போன நான் கேட்டேன். "அதை நீதான் சொல்லணும்" என்றான். திங்கள்கிழமை. நான் மேகாவிடம் என் காதலைப் ப்ரொபோஸ் செய்யப் போகிற நாள். அன்று காலை முதலே நெர்வஸாக இருந்தேன். ஆஃபீஸுக்கு லீவ் சொல்லிவிட்டேன். மயிலாப்பூரில் இருக்கிற என் மாமாவைப் போய்ப் பார்த்தேன். திரும்புகையில், ட்ராஃபிக் ஜாமாகி இருந்தது. ஒரு சின்ன, மிகச் சின்ன சந்தில் நுழைந்தேன். எதிரில் திடீரென்று மேகா தோன்றினாள். தெருமுனையில் சென்றுகொண்டிருந்தாள். அவள் என்னைக் கவனிக்கவில்லை. மிகவும் ஜாக்கிரதையாக, எப்போதும் போல, எல்லா புறமும் பார்த்து, அந்தத் தெருக்கோடியில் இருந்த வீட்டினுள் நுழைந்தாள். "ஆஹா, இதுதான் உன் மர்மமா?" என்று என்னிடமே சொல்லிக்கொண்டேன். நேரே அந்த வீட்டை நோக்கிச் சென்றேன். ஏதோ தங்கும் விடுதி போல இருந்தது. கீழே பார்த்தேன். அவசரத்தில் அவள் தன் கைக்குட்டையை நழுவ விட்டதைக் கவனிக்காமல் உள்ளே போயிருந்தாள். அதை எடுத்து என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். ஒரு நிமிடம் என்ன செய்வது என்று யோசித்தேன். சரி, அவளின் பர்ஸனல் விஷயத்தில் மூக்கை நுழைப்பானேன்… அவளிடம் நேராகவே கேட்டு விடலாம் என்று தீர்மானித்து அங்கிருந்து நகர்ந்தேன். மாலை 6 மணிக்கு அவள் வீட்டிற்குப் போனேன். சோஃபாவில் சாய்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஒற்றைச் சரடு முத்துமாலை மங்கலான ஒளியில் மின்னியது. அவள் தேவதையாகத் தெரிந்தாள். "வாங்க கண்ணன், காலைலேர்ந்து எங்கயும் போகாம வீட்லியே இருந்தேன். ரொம்ப போரடிக்குது" என்றாள். ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன். மௌனமாய் அவளைப் பார்த்தேன். என் பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுத்து அவள் முன் வைத்தேன். "மேகா, இத நீ இனிக்கு காலையில மயிலாப்பூர்ல தவற விட்டுட்ட" என்றேன். அவள் ஷாக் அடித்து என்னைப் பார்த்தாள். அந்த கைக்குட்டை மேடை மேலேயே கிடந்தது. "அங்க நீ எதுக்கு போன?" என்றேன். "அதை கேக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?" "உன் கணவனாகப் போற உரிமை. நீ என்னை கலியாணம் பண்ணிக்றியானு கேக்கத் தான் வந்தேன்" அடுத்த வினாடி அவள் கண்களில் கண்ணீர். முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். "நீ என்கிட்ட சொல்லியே ஆகணும்" அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். என்னை நேரே பார்த்தாள். "மிஸ்டர் கண்ணன், உங்க கிட்ட சொல்றதுக்கு எதுவும் இல்ல" என்றாள். "நீ யாரையோ பார்க்கப் போயிருக்க. இது தான் இத்தனை நாளா நான் உன்னப்பத்தி தேடிட்டிருந்த மர்மம்" அவள் கன்னம் சிவப்பானது. "நான் யாரையும் பார்க்கப் போகலை" "நீ உண்மையே பேச மாட்டியா?" "உண்மை என்னன்னு சொல்லிட்டேன்" என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. அவளை என்னென்னவோ சொல்லித் திட்டினேன். வேகமாக அங்கிருந்து என் வீட்டிற்கு வந்துவிட்டேன். அடுத்த நாள் அவள் எனக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதனை
் பிரித்துப் பார்க்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டேன். வேலை நிமித்தமாக பெங்களூர் போய் விட்டேன். ஒரு மாதம் கழித்துத் திரும்பினேன். நேரே மேகாவைப் பார்க்கப் போனேன். அவள் இறந்து போயிருந்தாள். திடீரென்று குளிர் ஜுரம் ஏற்பட்டு, நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்து போனதாகச் சொன்னார்கள். நான் பைத்தியமாகிப் போனேன். உலகமே வெறுத்துப் போனது. அவளை அப்படி நேசித்தேனே… எல்லாம் கனவாகிப் போனதே என்று வருந்தினேன். கடவுளே, எல்லாவற்றையும் பிடுங்கி விட்டாயே என்று அழுதேன். "டேய் கண்ணா, நீ மயிலாப்பூர்ல அந்த மர்ம வீட்டுக்குப் போனியா இல்லியா?" – இது கதை கேட்டுக் கொண்டிருந்த நான். "போனேன்" மேகாவின் மர்மத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னத்தான் ஆகிறது பார்க்கலாம் என்று ஒரு நாள் அந்த வீட்டுக்குப் போனேன். கதவைத் தட்டினேன். ஒரு வயதான அம்மாள் கதவைத் திறந்தாள். தங்குவதற்கு ஏதாவது ரூம் கிடைக்குமா என்று கேட்டேன். "ஒரு பெரிய ரூம் இருக்கு. அதில தங்கியிருந்த பொண்ணு மூணு மாசமா காணோம். வாடகை பாக்கியிருக்கு. நீங்க வேணும்ணா அந்த ரூமை எடுத்துக்கோங்களேன்" என்றாள். அவள் போட்டோவைக் காட்டிக் கேட்டேன், "இவ தான் அந்தப் பொண்ணா பாருங்க" "இவங்களே தான் சார், எப்ப வர்றாங்க இவங்க?" "இவ எறந்துட்டா" "ஓ, என்ன சார் ஆச்சு அவங்களுக்கு. அவங்கள என்னால புரிஞ்சிக்கவே முடிஞ்சதில்ல. வருவாங்க, ரூம்ல உக்கார்ந்து ஏதாச்சும் படிப்பாங்க, சும்மா அந்தரத்த பார்த்துட்டிருப்பாங்க, டீ சாப்பிடுவாங்க, அவ்வளவுதான்" "அவ இங்க யாரையாவது சந்திப்பாளா?" "அதெல்லாம் இல்ல சார். ரொம்ப நல்லவங்க. நிறைய பணம் கொடுப்பாங்க" அதன் பிறகு அவளிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளிடம் ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். "இப்ப சொல்லு, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? அந்த பொம்பள உண்மையச் சொல்றாளா இல்லை பொய் சொல்றாளா?" "உண்மையத்தான் சொல்றா" – இது நான். "அப்ப மேகா ஏன் அந்த விடுதிக்குப் போனா?" "கண்ணா, எனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு. அந்தப் பொண்ணு மேகாவுக்கு மர்மங்கள் மேல ஒரு தனி பிரியம். பைத்தியம்னு கூட சொல்லலாம். தன்னை யாரோ ஃபாலோ பண்றதா கற்பனை பண்ணிண்டிருக்கா. மத்தவங்களையும் நம்ப வச்சிருக்கா. தான் ஏதோ ஒரு மர்மக் கதை ஹீரோயின்னு நெனச்சிண்டு இப்படி விடுதியில போய் உட்கார்ந்த்து தனக்குத் தானே ஒரு சஸ்பென்ஸ உண்டு பண்ணியிருக்கா. அதுல அவளுக்கு ஒரு திருப்தி. அவ்வளவுதான். அவகிட்ட வேற ஏதும் மர்மம் இருக்றதா எனக்கு தோணல" "நிஜமாவா?" "நிச்சயமா!" அவன் மீண்டும் அந்த நோட்டை எடுத்து அவள் முகத்தைப் பார்த்தான். அவள் இன்னும் விளங்காத புதிராக அவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
* * * * *
  • The Author

    DEEPAK VENKATESAN

    A Bangalore-based blogger, amateur photographer, engineer, traveler, bird-watcher, cartoonist, designer, stage-performer, and a good cook.
    Know more!

  • Indiblogger Points (Higher the better)

  • I said this on Twitter

  • What the readers feel?

    • MM: oolaalaa…wow…sound s like a nice adventure…
    • varundbest: I always visit your blog and retrieve everything you post here but I never commented but today when I saw...
    • Hemanth: good article…. I too did the yes!+ course…….Definitel y it is a good course and art of...
    • MM: Haha hilarious….good read…and good luck with the search…
    • Suchindra: I have bought a e-stamp, but the deal could not go through. Am left with a e-stamp with names of the...
  • My Random Photos

    More
  • Topics

  • Attic

  • Still not in the Attic