<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Amusingly Simple &#187; அனுபவம்</title>
	<atom:link href="http://deepakvenkat.com/category/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://deepakvenkat.com</link>
	<description>A blog by Deepak Venkatesan</description>
	<lastBuildDate>Thu, 15 Jul 2010 03:34:09 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.1</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>பறவைகள் பலவிதம்</title>
		<link>http://deepakvenkat.com/2009/05/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://deepakvenkat.com/2009/05/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 07 May 2009 21:53:41 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[பயணம்]]></category>
		<category><![CDATA[பெங்களூரு]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[birds]]></category>
		<category><![CDATA[heron]]></category>
		<category><![CDATA[mysore]]></category>
		<category><![CDATA[pelican]]></category>
		<category><![CDATA[ranganathittu]]></category>
		<category><![CDATA[rivertern]]></category>
		<category><![CDATA[sanctuary]]></category>
		<category><![CDATA[srirangapatna]]></category>
		<category><![CDATA[stork]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/?p=237</guid>
		<description><![CDATA[பெங்களூரிலிருந்து 120 கி.மீ தொலைவில் இருக்கும் அழகான நகரம் மைசூரு. மைசூருக்கு 10 கி.மீ முன்பு வலது புறமாகச் செல்லும் சிறிய சாலையில் இறங்கி, ஒரு 5 கி.மீ அளவுக்குச் சென்றால் கிடைக்கிற இயற்கையின் அற்புதமான படைப்பு தான் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிய உலகின் பல நாடுகளிலிருந்தும் வரும் விதவிதமான வண்ணமிகு பறவைகளைக் காண சரியான இடம் தான் ரங்கனதிட்டு.
நானும் எனது நண்பர்கள் கார்த்திகேயன், சுப்ரமணியன் &#8211; [...]


Related posts:<ol><li><a href='http://deepakvenkat.com/2008/09/a-trip-to-somnathpura-talakad-and-shivanasamudram/' rel='bookmark' title='Permanent Link: A trip to Somnathpura, Talakad and Shivanasamudram'>A trip to Somnathpura, Talakad and Shivanasamudram</a></li>
<li><a href='http://deepakvenkat.com/2009/07/chased-by-elephant/' rel='bookmark' title='Permanent Link: The day we were chased by an elephant&#8230;'>The day we were chased by an elephant&#8230;</a></li>
</ol>]]></description>
			<content:encoded><![CDATA[<div class="wp-caption alignright" style="width: 427px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="A stork scene" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3430295263/"><img src="http://farm4.static.flickr.com/3549/3430295263_abcd33665c.jpg" alt="A stork scene" width="417" height="289" /></a><p class="wp-caption-text">A stork scene</p></div>
<p><a href="http://en.wikipedia.org/wiki/Bangalore">பெங்களூரிலிருந்து</a> 120 கி.மீ தொலைவில் இருக்கும் அழகான நகரம் <a href="http://en.wikipedia.org/wiki/Mysore">மைசூரு</a>. மைசூருக்கு 10 கி.மீ முன்பு வலது புறமாகச் செல்லும் சிறிய சாலையில் இறங்கி, ஒரு 5 கி.மீ அளவுக்குச் சென்றால் கிடைக்கிற இயற்கையின் அற்புதமான படைப்பு தான் <a href="http://en.wikipedia.org/wiki/Ranganathittu">ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம்</a>. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிய உலகின் பல நாடுகளிலிருந்தும் வரும் விதவிதமான வண்ணமிகு பறவைகளைக் காண சரியான இடம் தான் ரங்கனதிட்டு.</p>
<p>நானும் எனது நண்பர்கள் கார்த்திகேயன், சுப்ரமணியன் &#8211; மூவரும் இந்த பறவைகள் சரணாலயத்திற்குச் செல்வது என்று முடிவு செய்தோம். அதிகாலை 6 மணிக்குக் கிளம்புவது சரியாக இருக்கும். பெங்களூரு-மைசூரு சாலை நல்ல அகலமாகவும், மேடு பள்ளங்கள் இன்றி சீராகவும் இருப்பதால், 2 முதல் 2.5 மணி நேரத்தில் 120 கி.மீ தொலைவில் உள்ள ரங்கனதிட்டுவை அடைந்துவிடலாம். நாங்கள் சரியாக 8.30 மணிக்கு இவ்விடத்தை அடைந்தோம். இங்கு காலை வேளையில் செல்வது தான் மிகவும் உசிதம். ஏனென்றால், வெயில் அதிகமாக அதிகமாக, பறவைகள் அவ்வளவாகப் பறக்காமல் தங்கள் மரங்களிலேயே தங்கியிருந்து குஞ்சுகளைப் பாதுகாப்பதில் மும்முரமாக இருக்கும். அதனால், அவற்றைச் சரியாகப் பார்க்க முடியாது. நமக்கும் வெயிலில் சாவகாசமாகப் பார்ப்பது கடினம்.</p>
<div class="wp-caption alignleft" style="width: 308px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="The painted stork" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3431104066/"><img src="http://farm4.static.flickr.com/3410/3431104066_c92fbf9651.jpg" alt="The painted stork" width="298" height="430" /></a><p class="wp-caption-text">Painted Stork</p></div>
<p>ரங்கனதிட்டுவிற்குச் செல்லும் பாதையில் நுழையும் போதே சில வண்ணமயமான <a href="http://en.wikipedia.org/wiki/Painted_stork"><strong>Painted Stork</strong></a> எனப்படும் செங்கால் நாரைகள் வானில் பறந்து போவதைப் பார்த்தேன். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி. இவ்வளவு அழகான பறவைகளை இவ்வளவு கிட்டத்தில் பார்ப்பேன் என்று நான் எண்ணிப்பார்த்ததில்லை. இது மேலும் எனது ஆவலைத் தூண்டியது. போதாக்குறைக்கு, எனது Nikon D80 நிழற்படக் கருவியையும் கையோடு எடுத்துச் சென்றிருந்தேன். மிகுந்த எதிர்பார்ப்புகளோடு சென்ற எங்களை நுழைவு வாயிலில் நிறுத்தினார்கள். காலை 9 மணிக்கு தான் சரணாலயத்திற்குள் செல்ல அனுபதிப்பார்களாம். நாங்கள் ஏமாற்றத்தோடு காத்திருந்த போது, ஒரு 5-10 நிமிடங்கள் கழித்து அங்கு இருந்ந்த அலுவலர் எங்களை உள்ளே அனுமதித்தார். காரில் சென்றதால், ஏறத்தாழ 100-150 ரூபாய் நுழைவுக் கட்டணம் கொடுத்ததாக நினைவு.உள்ளே வாகனங்களை நிறுத்துவதற்கு நல்ல பரவலான இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். ரங்கனதிட்டு சரணாலயமானது காவிரி நதியின் ஒரு பகுதியாக அமைந்திருப்பதால், இவ்விடம் காவிரிக் கரையில் ஒரு அழகான பூங்கா போல் அமைக்கப்பட்டுள்ளது. சின்ன குளம், மீன்கள், ஏராளமான மரம் &#8211; செடிகொடிகள் என ரம்யமாக</p>
<div class="wp-caption alignright" style="width: 317px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="The Eurasian Spoonbill-2" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3431107700/"><img src="http://farm4.static.flickr.com/3559/3431107700_8a2a5b9b8b.jpg" alt="The Eurasian Spoonbill-2" width="307" height="443" /></a><p class="wp-caption-text">Eurasian Spoonbill</p></div>
<p>இருக்கிறது. சிறிய தொலைவே நடப்பதற்குள் காவிரியாற்றை அடைந்துவிடுகிறோம். அதன் பின் காணும் காட்சிகளை வருணிக்க வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கும்.</p>
<p>அத்ற்கு முன் இன்னபிற logistics பற்றிச் சொல்லிவிடுகிறேன். இந்த சரணாலயத்தில் பறவைகளைப் பார்த்து மகிழ சரியான உத்தி, அங்கிருக்கும் படகில் சென்று பார்ப்பதுதான். படகிற்கு, அரை மணி நேரத்திற்கு 250 ரூபாய் வசூலிக்கிறார்கள். 1 மணி நேரம் என்றால் 500 ரூபாய். நீங்கள் தனியாக ஒரு படகினை அமர்த்திக்கொள்ளலாம், அல்லது, அங்கு வந்திருக்கும் மற்ற பயணிகளோடு சேர்ந்து ஒரு படகில் பயணம் செய்யலாம். ஒரு படகில் 8 பேர் செல்லலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் தனியாக ஒரு படகினை அமர்த்திக்கொண்டு பயணத்தைத் தொடங்கினோம்.</p>
<p>ரங்கனதிட்டுவில் ஒரு அற்புதம் என்னவென்றால், மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் இந்தப் பறவைகளை அம்மரங்களின் அருகிலேயே சென்று மிக நன்றாகக் கண்டு களிக்கலாம். இப்பறவைகளும், மனிதர்க்ள் அங்கு வந்து செல்வதற்குப் பழகிப்போயிருப்பதால், நம்மை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. தாம் உண்டு, தம் குஞ்சுகளுண்டு என்று இருக்கின்றன. இதனால், மிக அண்மையில் பார்த்து, சிறப்பான நிழற்படங்கள் எடுப்பதற்கு மிக ஏதுவாக இருக்கிறது. ஒரு விடயத்தில் கவனம் தேவை. இங்கே நீரில் முதலைகள் உண்டு. அதனால், எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இங்கு நீரில் முதலைகள் இருப்பதால், குரங்கு, நரி போன்ற மற்ற மிருகங்கள் எவையும் நீருக்குள் இறங்குவதில்லை. பறவைகளும் நீரின் நடுவே இருக்கிற மரங்களில் மட்டுமே கூடுகளைக் கட்டுகின்றன.</p>
<div class="wp-caption alignleft" style="width: 324px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="The river tern - landing" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3431106958/"><img src="http://farm4.static.flickr.com/3581/3431106958_57f2ff446d.jpg" alt="The river tern - landing" width="314" height="452" /></a><p class="wp-caption-text">River tern landing</p></div>
<p>இம்முதலைகள் இவ்வகையில் பறவைகளைப் பாதுகாக்கின்றன.  பறவைகளின் முட்டைகளோ குஞ்சுகளோ தவறுதலாக ஆற்றில் விழும் போது முதலைகள் அவற்றை இரையாக்கிக் கொள்கின்றன.</p>
<p>மற்ற சமயங்களில் மீன்கள் இவற்றிற்கு இருக்கவே இருக்கிறதே. எனவே, இவ்விடம் பறவைகளுக்கு இயற்கையான பாதுகாப்பிடமாக பல மில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது நிதர்சனமாகிறது.</p>
<p>நம்மூரில் குளிர்காலம் தொடங்கும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியா, சைபீரியா போன்ற பல ஆயிரம் கி.மீ-களுக்கு அப்பாலிருக்கும் நாடுகளிலிருந்து இப்பறவைகள் இந்தியாவிற்கு ஆகாய மார்க்கமாக வருகின்றன. இனச்சேர்க்கை முடிந்து, முட்டைகள் இட்டு, குஞ்சுகள் பொரித்து, அவை வளர்ந்து பெரிதாகி அவையும் பறப்பதற்குத் தயாராகும் தருணம் வரை இவை இங்கேயே தங்கியிருக்கின்றன. பின்னால், வெயில் காலம் தொடங்கும் மார்ச்சு-ஏப்ரல் மாதங்களில், ஒவ்வொரு பறவைக் குடும்பங்களாக, தத்தமது குஞ்சுகளோடு தமது நாட்டிற்குச் சென்று விடுகின்றன. மீண்டும் அடுத்த குளிர்காலம் தொடங்கும் போது திரும்புகின்றன. இந்த cycle, பல மில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>
<div class="wp-caption alignright" style="width: 324px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="The dark couple" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3431108260/"><img src="http://farm4.static.flickr.com/3577/3431108260_82bb91e665.jpg" alt="The dark couple" width="314" height="452" /></a><p class="wp-caption-text">Cormorants</p></div>
<p>அதிகப் பரவலாக இங்கு காணப்படும் பறவைகள் &#8211; நாரை வகைகள். இவை தான் பல்வேறு வண்ணங்களில் நம் கண்களுக்குப் பளிச்சென்று புலப்படுகின்றன. குறிப்பாக, செங்கால் நாரைகள் (<a href="http://en.wikipedia.org/wiki/Painted_stork"><strong>Painted Storks</strong></a>). அழகான ஆரஞ்சு நிறத்தில் நீளமான அலகுகளை உடைய இவை, சாதாரணமாக சாம்பல் நிறத்தில் இருக்கும். இனச்சேர்க்கை சமயங்களில், கருப்பு &#8211; சிகப்பு என்று பல வண்ணங்களில் இறகுகளை வளர்த்துக் கொண்டு அட்டகாசமாகக் காட்சியளிக்கின்றன. இவை தான் ரங்கனதிட்டுவின் &#8216;highlight&#8217; என்று சொல்லலாம்.</p>
<p>அதன் பிறகு, பிளவு பட்டது போன்ற அலகினையுடைய &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Asian_Openbill_Stork">Openbilled Storks</a></strong>&#8216; எனப்படும் நத்தை கொத்தி நாரைகள். இவற்றின் அலகுகள் சேராமல் இருந்து, முனையில் மட்டும் சேர்கின்றன. மற்றொரு interesting-ஆன நாரையினம், &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Eurasian_Spoonbill">Spoonbilled Storks</a></strong>&#8216; எனப்படும் கரண்டி மூக்கு நாரைகள். நன்கு தட்டி வைத்தது போன்று அகலமான, தட்டையான, தோசைக் கரண்டி போன்ற அல்குகள் கொண்டிருக்கின்றன. இவ்வலகுகள், இவற்றிற்கு மீன்களை எளிதில் பிடிக்க உதவுகிறன. ஒரு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இந்த கரண்டி மூக்கு நாரைகள் மார்ச்சு மாதத்தோடு தங்களின் நாடுகளுக்குத் திரும்பிவிடுகின்றன. எனவே, இவற்றைக் காண மார்ச்சுக்கு முன்பு போகவேண்டும்.</p>
<div class="wp-caption alignleft" style="width: 454px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="A bunch of lotuses" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3430290653/"><img src="http://farm4.static.flickr.com/3605/3430290653_1ffb37e926.jpg" alt="A bunch of lotuses" width="444" height="308" /></a><p class="wp-caption-text">Lotus Pond</p></div>
<p>இந்த நாரையினங்கள் எல்லாம், தண்ணீரில் நீண்ட நேரம் நின்று நீர் அருந்திக் கொண்டிருப்பது போல் தோன்றுகின்றன, எனினும், உண்மையில், இவை தமது அலகுகளில் நீரினைச் சேகரித்துக் கொண்டு, பின் பறந்து சென்று, மரங்களில் இருக்கும் தமது குஞ்சுகளை நீர் அருந்தச் செய்கின்றன. இன்னொரு பார்ப்பத்ற்கரிய காட்சி, &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Pelican">Pelican</a></strong>&#8216; எனப்படும் கூழைக்கடாக்கள். இப்பறவைகள், நீரின் பரப்பிற்கு சற்று மேலே பறந்தவாறே சென்று, சட்டென்று த்மது தலையை நீருக்குள் விட்டு மீன்களைப் பிடித்துவிடுகின்றன. கூழைக்கடாக்களுக்கு அலகின் அடிப்பாகத்தில் ஒரு பை போன்ற அமைப்பு இருக்கிறது. இதில் மீன்களைச் சேகரித்துக் கொண்டு, தம் குஞ்சுகளுக்குச் சென்று அவற்றை ஊட்டுகின்றன. இவை பறந்து சென்றவாறே மீன் பிடிக்கும் அழகே அழகு.</p>
<div class="wp-caption alignright" style="width: 309px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="Night heron in penance" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3431104678/"><img src="http://farm4.static.flickr.com/3297/3431104678_a9e761aeb8.jpg" alt="Night heron in penance" width="299" height="431" /></a><p class="wp-caption-text">Night Heron in Penance</p></div>
<p>மேலும், ரங்கனதிட்டுவில் காணப்படும் பறவைகள், சிறிய உடலமைப்பினை உடைய &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Night_heron">Night Heron</a></strong>&#8216; எனப்படும் வக்கா. இது இரவில் மட்டுமே இரைதேடும் ஒரு அரிய பறவை. இவற்றை மிகுதியாக சென்னை அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் காணலாம். இன்னும், &#8216;<a href="http://en.wikipedia.org/wiki/Egretta_garzetta"><strong>L</strong><strong>ittle Egret</strong></a>&#8216; எனப்படும் சின்ன வெள்ளைக் கொக்குகள், &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Cattle_Egret">Cattle Egret</a></strong>&#8216; எனப்படும் உண்ணிக் கொக்குகள், &#8216;<strong><a href="http://delsonclicks3.blogspot.com/2008/07/median-egret.html">Median Egret</a></strong>&#8216; எனப்படும் வெள்ளைக் கொக்குகள், &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/River_tern">Indian River Tern</a></strong>&#8216; எனப்படும் குளத்து ஆலா, &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Little_cormorant">Little Cormorant</a></strong>&#8216; எனப்படும் நீர் காகம், &#8216;<strong><a href="http://en.wikipedia.org/wiki/Swallow">Swallow</a></strong>&#8216; எனப்படும் தலை இல்லாத குருவி, &#8216;<a href="http://en.wikipedia.org/wiki/Darter"><strong>Darter</strong></a>&#8216; எனப்படும் பாம்புத்தாரா, &#8216;<a href="http://en.wikipedia.org/wiki/American_White_Ibis"><strong>White Ibis</strong></a>&#8216; எனப்படும் வெள்ளை அரிவாள் மூக்கன், &#8216;<a href="http://en.wikipedia.org/wiki/Partridge"><strong>Partridge</strong></a>&#8216; எனப்படும் கௌதாரி, என்று சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் இவ்விடத்திலேயே indigenous-ஆகக் காணப்படும் பறவைகளும் உண்டு. மயில், புறா, ஆந்தை போன்ற பறவைகளும் பார்க்க முடிந்தது.</p>
<p>குறிப்பிட்டுச் சொல்லும் படியான பறவை &#8211; குளத்து ஆலா. இது அங்கிருக்கும் பாறைகள் மீது தான் முட்டையிடுகிறது. ஆனால், முதலைகள் இவற்றை நெருங்குவதில்லை. ஏனென்றால், இவை முதலைகளின் கண்களைக் கொத்திவிடுமாம். என்னே தற்காப்பு!</p>
<div class="wp-caption alignleft" style="width: 282px"><a class="tt-flickr tt-flickr-Medium" title="The Asian Open billed Stork" href="http://www.flickr.com/photos/deepakvenkat/3430295007/"><img src="http://farm4.static.flickr.com/3332/3430295007_1a870f6546.jpg" alt="The Asian Open billed Stork" width="272" height="392" /></a><p class="wp-caption-text">Openbilled Stork</p></div>
<p>இவை நாரைகளை விடச் சற்று தாமதமாக முட்டையிடுகின்றன. ஏனென்றால், கோடைக் காலம் ஆரம்பமாகும் போது ஆற்றில் நீர் குறைந்து பாறைகள் மூழ்காமல் நல்ல பரவலாக இருக்கும் போது தான் இவை அப்பாறைகளின் மீது முட்டையிட முடிகிறது.</p>
<p>மழை ஆரம்பமாவதற்குள் தமது குஞ்சுகளைப் பயிற்றுவித்து அழைத்துச் சென்றுவிடுகின்றன.</p>
<p>இயற்கையின் படைப்பில் எத்தனை விந்தைகள்!</p>
<p>இந்த பலதரப்பட்ட பறவைகளையும் நிதானமாக 1 மணி நேரம் பார்த்து ரசித்து, நிழற்படங்கள் நிறைய எடுத்துக் கொண்டு கிளம்பினோம். மீண்டும் அடுத்த வருடம் வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம். அடுத்து வருகிற ஜூன் &#8211; ஜூலை மாதங்களில், மழைக் காலத்தில் இனச்சேர்க்கை கொள்ளும் வெள்ளை அரிவாள் மூக்கன்களை (<a href="http://en.wikipedia.org/wiki/American_White_Ibis">White Ibis</a>) நிறைய பார்க்கலாம். இவை மழைக்காகவே இங்கு வருகின்றனவாம். இவ்விடயங்களையெல்லாம் எங்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்ன எங்களின் படகினைச் செலுத்தி வந்த அன்பருக்கு மிக்க நன்றிகள்.</p>


<p>Related posts:<ol><li><a href='http://deepakvenkat.com/2008/09/a-trip-to-somnathpura-talakad-and-shivanasamudram/' rel='bookmark' title='Permanent Link: A trip to Somnathpura, Talakad and Shivanasamudram'>A trip to Somnathpura, Talakad and Shivanasamudram</a></li>
<li><a href='http://deepakvenkat.com/2009/07/chased-by-elephant/' rel='bookmark' title='Permanent Link: The day we were chased by an elephant&#8230;'>The day we were chased by an elephant&#8230;</a></li>
</ol></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2009/05/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>சென்னை 30-ஆவது புத்தகக் காட்சி</title>
		<link>http://deepakvenkat.com/2007/01/chennai-book-fair/</link>
		<comments>http://deepakvenkat.com/2007/01/chennai-book-fair/#comments</comments>
		<pubDate>Mon, 15 Jan 2007 07:58:27 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[Food and Dining]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[நூல் நயம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[book release]]></category>
		<category><![CDATA[bookfair]]></category>
		<category><![CDATA[books]]></category>
		<category><![CDATA[Chennai]]></category>
		<category><![CDATA[evening]]></category>
		<category><![CDATA[fair]]></category>
		<category><![CDATA[function]]></category>
		<category><![CDATA[january]]></category>
		<category><![CDATA[joseph]]></category>
		<category><![CDATA[pongal]]></category>
		<category><![CDATA[reading]]></category>
		<category><![CDATA[sivakumar]]></category>
		<category><![CDATA[solomon pappayya]]></category>
		<category><![CDATA[surya]]></category>
		<category><![CDATA[talk]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[tamilnadu]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/2007/01/15/chennai-book-fair/</guid>
		<description><![CDATA[ஜனவரி மாதம் என்றாலே சென்னையில் என் போன்ற புத்தகப் புழுக்களுக்குக் கொண்டாட்டம் தான். ஆண்டுதோறும் சென்னையில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிக் கொண்டே போகிறது. வழக்கமான இடத்தில் இல்லாமல், இம்முறை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். இவ்விடத்தில் முதல் நல்ல விஷயம், போக்குவரத்து இடர்பாடு இல்லாமல் எளிதில் சென்றடைய முடிகிறது. வெளியில் வைத்திருக்கும் வண்ணமயமான வரவேற்பு வளைவைத் தாண்டிச் சென்று, உள்ளே ஏராளமாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/banner.jpg" border="0" alt="" vspace="10" width="449" height="102" align="left" />ஜனவரி மாதம் என்றாலே சென்னையில் என் போன்ற புத்தகப் புழுக்களுக்குக் கொண்டாட்டம் தான். ஆண்டுதோறும் சென்னையில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிக் கொண்டே போகிறது. வழக்கமான இடத்தில் இல்லாமல், இம்முறை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p1.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="left" />இவ்விடத்தில் முதல் நல்ல விஷயம், போக்குவரத்து இடர்பாடு இல்லாமல் எளிதில் சென்றடைய முடிகிறது. வெளியில் வைத்திருக்கும் வண்ணமயமான வரவேற்பு வளைவைத் தாண்டிச் சென்று, உள்ளே ஏராளமாக இருந்த parking area-வில் வண்டியை நிறுத்தினோம்.</p>
<p style="text-align: justify;">குமுதம், விகடன், எக்ஸ்பிரஸ் என்று எல்லோரும் சேர்ந்து வரவேற்றார்கள். நுழைவுச்சீட்டு வாங்க நேராகச் சென்ற எங்களுக்கு ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி. நடிகர் சூர்யா எழுதிய &#8220;இப்படிக்கு சூர்யா&#8221; என்ற நூல் வெளியீடு விழா நடந்து கொண்டிருந்தது. அலையன்ஸ் பதிப்பகத்தின் வெளியீடு. பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கிக் கொண்டிருந்தார். எதேச்சையாக வந்த கூட்டத்தைத் தவிர பெரிய கூட்டம் இல்லை. அதனால், சூர்யாவை அருகில் <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p2.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="right" />சென்று கண்குளிர (ஹிஹி&#8230; என்ன பண்றது&#8230;?) பார்த்து டிஜிக்கேமில் படங்கள் எடுத்துக் கொண்டோம். சூர்யா எப்படியெல்லாம் பெற்றோருக்கு அடங்கிய சமர்த்துப் பிள்ளையாக இருக்கிறார் என்பது பற்றி பாப்பையா பேசிக்கொண்டிருந்தார். அங்கேயே புத்தகம் வாங்குகிறவர்களுக்கு சூர்யா கையெழுத்திட்டுத் தருவார் என்றதும் பல இளைஞர் இளைஞிகள் மேடையை மொய்த்தனர். நாங்கள் ticket counter-ஐ நோக்கி நடந்தோம்.</p>
<p style="text-align: justify;">ஐந்து ரூபாய் நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் முதலில் கவனித்த விஷயம், பிளைவுட் தரை அமைத்திருந்தார்கள். தூசு, மேடு-பள்ளம் என்ற கவலையெல்லாம் இல்லை. இன்னும் அந்த மைதானம் முழுவதற்குமாகப் பெரிய பந்தல் அமைத்திருந்தார்கள். ஆங்காங்கே மின்விசிறிகள் <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p3.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="left" />அமைத்திருந்தார்கள். குறுக்கும் நெடுக்குமாகப் போவது போல் இல்லாமல், வரிசையாக ஸ்டால்களை அமைத்திருந்தார்கள். ஒரு வரிசையை முடித்துவிட்டு, நேராக, அடுத்த வரிசைக்குச் செல்லலாம். அதுமட்டுமின்றி, நல்ல அகலமான பாதை. சென்ற ஆண்டு நடந்தது போல தள்ளுமுள்ளு அனுபவமெல்லாம் இம்முறை கிடையாது. நிறைய கூட்டம் இருந்தபோதும், free-யாக நடக்க முடிந்தது.</p>
<p style="text-align: justify;">புத்தகக் காட்சியில் பெருவாரியாகக் கண்ணுக்குத் தெரிந்த புத்தகங்கள், குழந்தைகளுக்கானவை தான். இளமையிலேயே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி என்றால், பாராட்டலாம். இரண்டாமிடம் ஆன்மீகப் புத்தகங்களுக்கு. <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p4.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="right" />புதிது புதிதாகப் பல ஆன்மீகவாதிகள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். சென்ற ஆண்டுக்கு இந்த ஆண்டு ஆன்மீகம் அதிகமாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். (என் கற்பனையாகவும் இருக்கலாம்). அதன் பின்னால், எப்போதும் போல், பணம் பண்ணுவது எப்படி, வேலை தேடுவது எப்படி போன்றவைகள். எனக்கு மிகவும் பிடித்தமானவை, புத்தக விநியோகஸ்தர்களின் (distributors) ஸ்டால்கள் தான். அவர்களிடம் பல ஊர்களிலிருந்தும், பல நாடுகளிலிருந்தும் பலரும் எழுதும் quality writing கிடைக்கிறது. அது தவிர, பல நம் ஊர் பதிப்பகங்கள் வாயிலாக, புதிய படப்பாளாகளை அடையாளம் காண முடிந்தது. பொதுவாக புத்தகக் கடைகளில் கிடைப்பதை விட இங்கு 10% விலை குறைவு என்பது ஒரு பிள஦lt;br /&gt; ?் பாயிண்ட். <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p6.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="left" />புஸ்தக் மஹால், திருமகள் நிலையம், கிழக்கு பதிப்பகம், உயிர்மை பதிப்பகம் என்று பல ஸ்டாலகளில் பலப்பல புத்தகங்கள் வாங்கித் திணித்துக் கொண்டேன். ஒரு வருடம் முழுவதற்கும் வேண்டுமல்லவா? உயிர்மை பதிப்பகத்தில் மனுஷ்யபுத்ரன் அவர்களைப் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.</p>
<p style="text-align: justify;">பல இடங்களில் மின்விசிறிகள் வைத்திருந்தாலும், காற்றோட்டமாக இல்லாமல் கொஞ்சம் அடைப்பாக இருந்தது ஒரு குறை. அதுவுமில்லாமல், வரிசைகள் நீளமாக இருந்ததும், ஒரு வரிசை முழுவதும் கடந்து தான் அடுத்த வரிசைக்குப் போகவேண்டியிருந்ததும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஸ்டால்களுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் தடுப்புகள் போட்டிருந்தார்கள். பல தடுப்புகள் தள்ளப்பட்டு, மக்கள் அடுத்த வரிசைக்குச் செல்ல குறுக்கு வழிகள் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆங்காங்கே தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், காட்சிக்கு உள்ளே எதுவும் உண்பதற்குக் கிடைக்கவிலை. <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p8.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="right" />இது ஒரு விதத்தில் நன்றாக இருந்தாலும், கிட்டத்தட்ட 400 ஸ்டால்கள் இருப்பதால், பாதி முடிப்பதற்குள் சோர்வாகிவிடுகிறது. எதுவும் உள்ளே போகாமல் முழுவதும் முடிப்பது சிரமம். ஆனால், கண்காட்சிக்கு விளியில், பெரிய அரங்கம் அமைத்து &#8220;The Rice Bowl&#8221; என்ற பெயரில் food court அமைத்திருக்கிறார்கள். மிகவும் வரவேற்கத்தக்கது. (ஹிஹி&#8230;).</p>
<p style="text-align: justify;">Prodigy ஸ்டாலில் புதிய முயற்சியாக குழந்தைகளுக்காக, ஓவியம் தீட்டும் போட்டிகள் நடத்துகிறார்கள். <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p5.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="225" height="300" align="left" />பல குழந்தைகளை வரைய விட்டு அம்மாக்கள் அவர்களை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். வெளியே மற்றுமொரு சிற்றரங்கத்தில் அறிவியல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது குழந்தைகளுக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கும் பயனளிக்கும். இன்னும் ஆவணப் படங்கள் போன்றவற்றுக்காக சிற்றரங்கம் அமைத்திருந்தார்கள். நேரமின்மையால் இவற்றைக் கவர் பண்ண முடியவில்லை. இம்முறை காட்சியில் ஸ்டால்கல் எல்லாம் Chennai Trade Centre-இல் இருப்பது போல் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் அமைத்திருந்தது குறிப்பிடவேண்டிய விஷயம். எல்லாம் முடித்துக் கொண்டு வெளியில் வந்த போது, கங்கை அமரன் அவர்களின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சில நல்ல பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">புத்தகக் காட்சியில் எல்லா தரப்பினருக்கும் ஏதேனும் கிடைக்கிறது. என் போன்றவர்களுக்கு எல்லாமே கிடைக்கிறது. BAPASI நடத்தும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்குத் தமிழக முதல்வர் permanent-ஆக நிலம் ஒதுக்க இசைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இன்னும் தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் எழுத்தாளர்களுக்காக வழங்கியிருக்கிறபடியால் கலைஞரைப் பாராட்டலாம். சென்னையில் புத்தகக் காட்சி பற்றி இன்னும் அதிகமாக விளம்பரமும் விழிப்புணர்வும் <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/p9.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="300" height="225" align="right" />ஏற்படுத்துவது அவசியம். தமிழக-தென்னக-இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளோடு, அதிகமான அளவில் உலக எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவற்றின் தமிழாக்கப் பதிப்புகளையும் கொண்டு வரலாம். இன்னும், தமிழ் புத்தகங்களின் அச்சுத் தரத்தை மேம்படுத்தலாம். Travelogues, Armchair Reading, Satires போன்ற விஷயங்களைத் தமிழில் அதிகமாகவும் அழகாகவும் வெளியிட முயலலாம். இது போன்ற படைப்புகளுக்கு பதிப்பகத்தாரும், அவ்வண்ணமே அரசாங்கமும் ஊக்கமளித்தால், தமிழின்-தமிழரின் ப்டைப்புகளில் ஒரு variety-யைக் கொண்டுவர முடியும். தமிழ் கற்றவர்களின் அறிவுத் தேடல்களுக்கு நல்ல தீனி போட முடியும்.</p>
<p style="text-align: justify;">கற்றது கைம்மண்ணளவு &#8211; கல்லாதது உலகளவு! அனைவருக்கும் இனிய பொবt;br /&gt; ??்கல் நல்வாழ்த்துகள்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2007/01/chennai-book-fair/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>மார்கழியில் மாக்கோலங்கள்</title>
		<link>http://deepakvenkat.com/2007/01/rangoli/</link>
		<comments>http://deepakvenkat.com/2007/01/rangoli/#comments</comments>
		<pubDate>Thu, 11 Jan 2007 16:44:56 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/2007/01/11/rangoli/</guid>
		<description><![CDATA[என் சிறு வயது முதலே, டிசம்பர் மாதத்து மத்தியில் மார்கழி மாதம் தொடங்கியதும் எங்கள் வீடு களை கட்டும். மார்கழி என்றாலே கோலங்கள் தானே. சிறியதும் பெரியதுமாய் வண்ணக் கோலங்கள். எங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் யாரும் இல்லை என்பதால், கோலம் போடுவதில் அம்மா &#8211; பாட்டிக்கு அஸிஸ்டென்ட் வேலை செய்யும் விதமாகத் தொடங்கியது என் கோல மோகம். கோலங்களுக்கு கலர் போடுவதில் தொடங்கி, பின்னர் படிப்படியாக புள்ளி வைத்துக் கோலம் போடுவது முதல், பல காம்ப்ளிகேஷன்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>என் சிறு வயது முதலே, டிசம்பர் மாதத்து மத்தியில் மார்கழி மாதம் தொடங்கியதும் எங்கள் வீடு களை கட்டும். மார்கழி என்றாலே கோலங்கள் தானே. சிறியதும் பெரியதுமாய் வண்ணக் கோலங்கள். எங்கள் வீட்டில் <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/4085b.gif" border="0" alt="படத்தில் இருப்பதி simple தேர்க் கோலம். நிஜமான தேர்க் கோலத்தின் படம் கிடைக்கவில்லை." hspace="10" vspace="10" width="199" height="313" align="left" />பெண் பிள்ளைகள் யாரும் இல்லை என்பதால், கோலம் போடுவதில் அம்மா &#8211; பாட்டிக்கு அஸிஸ்டென்ட் வேலை செய்யும் விதமாகத் தொடங்கியது என் கோல மோகம். கோலங்களுக்கு கலர் போடுவதில் தொடங்கி, பின்னர் படிப்படியாக புள்ளி வைத்துக் கோலம் போடுவது முதல், பல காம்ப்ளிகேஷன்கள் கொண்ட கம்பிக் கோலங்கள் போடுவது வரை பலவும் பழகியிருக்கிறேன். பக்கத்து வீட்டார் கொண்டு வந்து கொடுத்த கோலப் புத்தகத்தில் இருந்த கோஅங்களையெல்லாம் காப்பி அடித்து நோட்டில் வரைந்து வைக்க ஆரம்பித்து, பின்னால், அதை அடிப்படையாகக் கொண்டு மண் தரையில் கோலமாவில் மாக்கோலம் போடும் அளவுக்குக் கைதேர்ந்தவனானேன் என்பதில் எனக்கு நிறைய பெருமிதம் உண்டு.</p>
<p>;</p>
<p>அப்போதெல்லாம், கோலம் என்றாலே எல்லோரும் சங்கு கோலம், மயில் கோலம், கத்திரிக்காய் கோலம், ரோஜா கோலம் என்று சில ஸ்டாண்டர்ட் கோல வகைகள் வைத்திருப்பார்கள். இவையெல்லாம் பல யுகங்களாகப் போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். கண்ணிமைக்கும் நேரத்தில் கத்திரிக்காய் கோலம் போட்டு விடுவார்கள். அவ்வளவு பிராக்டிஸ். இன்னும், பஃபூன் கோலம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கோலம், என்றெல்லாம் உண்டு. பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சமாக, விகடன், குமுதம் போன்ற அறிவுக் களஞ்சியங்கள் வாயிலாக மக்கள் புதுப்புது கோலங்களைக் கற்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கு, கோலத்திற்கென்றே பட்டயப் படிப்பு இருக்கிறதென்று யாராவது சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை.</p>
<p>என்னதான் விதம் விதமாகக் கலர் கோலங்கள் போட்டாலும், எனக்கு எப்போதும் கம்பிக் கோலங்கள் மீது நிறைய பாசம் உண்டு. கம்பி கோலங்கள் தான் ஒரு கோல வல்லுனரின் நிபுணத்துவத்தை (expertise) பறைசாற்றுவது போல இருக்கும். என்னிடம் இருந்த கலெக்ஷனிலேயே மிகவும் கடினமான கம்பிக் கோலங்களைக் கண்டுபிடித்து, அவற்றையெல்லாம் பழகி, இரவு நேரங்களில் போடுவேன். என் வீட்டில் இரவில் தான் கோலம் போடுவர்கள். மார்கழி பனியில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டுக் கோலம் போடுவதெல்லாம் கிடையாது. எங்கள் தெரு முழுவதும் இரவில் கோலம் போடுவார்கள். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு கோலங்கள் போடுவார்கள். பின்னர், தெரு பெரியவர்கள் ஒவ்வொரு கோலமாகப் பார்த்து மார்க் போடுவதும் நடக்கும். நன்கைந்து பேர் சுற்றி நின்றுகொண்டு கோலம் போடுவதைப் பார்த்தார்கள் என்றால், நாம் பாஸ். நிறைய முறை என் கோலம் பாஸ் ஆகியிருக்கிறது. ஃபர்ஸ்ட் கிளாஸில் எல்லாம் கூட&#8230;</p>
<p>இப்போதெல்லாம் கோலங்கள் குறைந்து விட்டன. இன்னும் எங்கள் <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/kolam1.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="285" height="213" align="right" />தெருவில் கோலம் போடுகிறார்கள். ஆனால் முன்பிருந்த போட்டி, வேகம் எல்லாம் இல்லை. நானும் கல்லூரி, வேலை என்று விலகி விட்டதால் என் அம்மாவும் பாட்டியும் தான் இன்றைக்கும் கோலம் போடுகிறார்கள். பல நண்பர்கள் வீடுகளில் எல்லாம் கோலம் போடுமளவிற்கு வீட்டின் வாசலில் இடம் இல்லை. குறிப்பாக, இப்போது அனைவரும் பிளாட்டுகளில் வசிப்பதால், ஸ்டிக்கர் கோலம் வாங்கி வந்து, கதவின் வெளியில் ஒட்டி விடுகிறார்கள். ஒரு மார்கழியிலிருந்து அடுத்த மார்கழி வரும் வரைக்கும் ஒரே ஸ்டிக்கர் தான். கத்திரிக்காய் கோலம் எல்லாம் மலையேறிவிட்டது என்று நினைக்கிறேன். சங்கு கோலம் பட்டும் இன்னும் பல இடங்களில் பார்க்க முடிகிறது. என்ன இருந்தாலும், இன்றைக்கும் தேர் வடிவில் கம்பிக் கோலம் யாராவது போட்டிருந்தால், இரண்டு நிமிடம் நின்று பார்த்து ரசித்துவிட்டுச் செல்கிறேன். நாளைக்கு இருக்குமோ இருக்காதோ&#8230;!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2007/01/rangoli/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>புத்தாண்டில் புதுத்தொடக்கம்</title>
		<link>http://deepakvenkat.com/2007/01/diya-new-year/</link>
		<comments>http://deepakvenkat.com/2007/01/diya-new-year/#comments</comments>
		<pubDate>Mon, 01 Jan 2007 02:53:15 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[தியா]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/2007/01/01/diya-new-year/</guid>
		<description><![CDATA[எனக்கு இந்தப் புத்தாண்டு புதுமையாக இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிய போது டிசம்பர் 31, காலை 6.30 மணி. எங்களின் சமூக அமைப்பான தியா சார்பில் 2007-ஆம் ஆண்டுக்கான சமூகப் பணிகளுக்கு முன்னோட்டமாய் மரம் நடுவிழா கொண்டாடினோம். சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், 5 மரக் கன்றுகளை நட்டு, அதற்குக் காப்பாக வேலி அமைக்கும் பணி காலையில் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் பேசி, அவர்களின் அனுமதியும் ஆர்வமும் பெற்று, 5 இடங்கள் தேர்வு செய்தோம். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எனக்கு இந்தப் புத்தாண்டு புதுமையாக இருந்தது. <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/vel1.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="266" height="202" align="left" />புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிய போது டிசம்பர் 31, காலை 6.30 மணி. எங்களின் சமூக அமைப்பான <a href="http://diya.org.in/" target="_blank"><strong>தியா</strong></a> சார்பில் 2007-ஆம் ஆண்டுக்கான சமூகப் பணிகளுக்கு முன்னோட்டமாய் மரம் நடுவிழா கொண்டாடினோம். சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், 5 மரக் கன்றுகளை நட்டு, அதற்குக் காப்பாக வேலி அமைக்கும் பணி காலையில் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் பேசி, அவர்களின் அனுமதியும் ஆர்வமும் பெற்று, 5 இடங்கள<img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/vel3.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="269" height="202" align="right" />் தேர்வு செய்தோம். நண்பர்கள் ஸ்ரீநிவாஸ், ஸ்ரீராம், விக்ரம் உள்ளிட்ட பலரும் சேர்ந்து, குழிகள் தோண்டி மரங்களை நட்டோம். மரங்களுக்குப் பாதுகாப்பாக எளிய முறையில், பொருட்செலவு இல்லாமல் வேலி அமைக்கும் திட்டத்தை நண்பர்கள் உருவாக்கியுள்ளனர். சைக்கிள் கடைகளில் இருந்து பழைய டயர்களை வாங்கிவந்து, அவற்றை உள்வெளியாகத் திருப்பிவிட்டால், <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/vel5.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="265" height="199" align="left" />பட்டையாக இருக்கும். நடுகிற மரத்தைச் சுற்றி மூன்று கொம்புகள் நட்டு அவற்றில் இந்த டயர்களைக் கட்டிவிடுகிறார்கள். இதனால், ஆடு மாடுகளிலிருந்து இந்த மரங்கள் எளிதில் காப்பாற்றப்படுகின்றன. நமக்கும் பொருட்செலவு இல்லை.எங்கெல்லாம் கடைக்காரர்கள் நீர்விட்டுப் பராமரிக்க ஒத்துக்கொள்கிறார்களோ, அங்கெல்லாம் மட்டுமே மரங்களை நட்டோம். முதல் மாதம் அந்தக் கடைக்காரர்கள் நீர்விட்டுப் பராமரித்தால், பின்னர், வாரம் இருமுறை மரங்களுக்கு நீர் பாய்ச்ச ஆளமர்த்தும் திட்டமும் உள்ளது. படிப்படியாக வாரந்தோறும் மரங்கள் நட்டு, வேளச்சேரி 100 அடி சாலை முழுவதையும் கவர் செய்வதென முடிவு <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/vel4.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="271" height="203" align="right" />செய்துள்ளோம்.<br />
இதற்கு முன்னால், தியா சார்பில், <a href="http://www.nizhaltn.org/" target="_blank"><strong>&#8216;நிழல்&#8217;</strong></a> என்ற அமைப்பின் உதவியுடன் வேளச்சேரி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தியா சார்பில் பல நல்ல சமூக திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். 2007-இல் இன்னும் பல விஷயங்கள் ஈடேறும் என்றும் எதிர்பார்க்கலாம். தியா மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும். <strong><a href="http://www.diya.org.in/" target="_blank">http://diya.org.in</a></strong></p>
<p>பசுமையுடன் தொடங்கிய 2007, பசுமையான விஷயங்களோடு செழிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2007/01/diya-new-year/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>இப்போது தான் ஈ அடிக்கிறேன்</title>
		<link>http://deepakvenkat.com/2006/11/the-letter-e/</link>
		<comments>http://deepakvenkat.com/2006/11/the-letter-e/#comments</comments>
		<pubDate>Sat, 11 Nov 2006 18:51:24 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/2006/11/12/the-letter-e/</guid>
		<description><![CDATA[ஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுகிற எழுத்து &#8211; &#8216;E&#8217; தான். &#8216;அவனின்றி ஓரணுவும் அசையாது&#8217; என்பது போல், &#8216;E&#8217; இல்லையெனில் ஆங்கிலத்தில் வாக்கியங்களே இல்லை. இன்னும் E என்பது Energy-யைக் குறிக்கிற குறியீடு. எனர்ஜி என்பது சக்தி. E &#8211; ஆங்கில மொழியின் சக்தி. இன்று, அலுவலகத்தில் அடுத்த மேஜையில் இருக்கிறவரிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றால் E-மெயில் அனுப்ப வேண்டியிருக்கிறது. வர்த்தகமெல்லாம் E-காமர்ஸாக மாறி வருகிறது. நாம் தினமும் உட்கொள்கிற உணவு செரிமானம் ஆவதற்கு, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுகிற எழுத்து &#8211; &#8216;E&#8217; தான். &#8216;அவனின்றி ஓரணுவும் அசையாது&#8217; என்பது போல், &#8216;E&#8217; இல்லையெனில் ஆங்கிலத்தில் வாக்கியங்களே இல்லை. இன்னும் E என்பது Energy-யைக் குறிக்கிற குறியீடு. எனர்ஜி என்பது சக்தி. <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/E.gif" border="0" alt="" hspace="10" vspace="0" width="184" height="127" align="left" />E &#8211; ஆங்கில மொழியின் சக்தி. இன்று, அலுவலகத்தில் அடுத்த மேஜையில் இருக்கிறவரிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றால் E-மெயில் அனுப்ப வேண்டியிருக்கிறது. வர்த்தகமெல்லாம் E-காமர்ஸாக மாறி வருகிறது. நாம் தினமும் உட்கொள்கிற உணவு செரிமானம் ஆவதற்கு, குடலுக்குள் இருக்கிற &#8216;E&#8217;.coli பாக்டீரியா தான் காரணமாக இருக்கிறது. இந்தத் தகவலையெல்லாம் என் கணிப்பொறியில் உள்ளீடு செய்வதற்கு E-கலப்பை என்ற மென்பொருளைத் தான் பயன்படுத்துகிறேன். &#8216;ஈ&#8217; என்ற பெயரில் நயந்தாரா நடித்தப் படம் வந்து சக்கை போடு போடுகிறது. E என்ற பெயரில் கணிப்பொறி மொழி கூட உள்ளது.</p>
<p>கணிதத்தில் &#8216;e&#8217; என்பது natural logrithms-ஐக் குறிக்கிறது. பள்ளிக்கூடத் தேர்வில் இந்த விஷயத்தைப் பக்கத்தில் இருக்கும் பையனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதினால் &#8216;ஈ&#8217; அடிச்சான் காப்பி என்கிறார்கள். அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் புகழ் பெற்றதே &#8216;E&#8217;-யின் மதிப்பைச் சொல்லித்தான். இசையின் ஏழு ஸ்வரங்களில் &#8216;E&#8217; தான் மூன்றாவது ஸ்வரம். &#8216;E&#8217; என்ற எழுத்து குறிக்கிற electric field இல்லையேல் மின்சாரம் இல்லை, மின்னணுவியல் இல்லை, மின்காந்த அலைகள் இல்லை, டிவி, ரேடியோ, மொபைல், இணையம் &#8211; எதுவுமே இல்லை.</p>
<p>இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? E என்பது நம் அன்றாட வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்வதற்குச் சமீபத்தில் தான் எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது.</p>
<p>பல வருடங்களுக்கு முன்னால் ஒரு கவிதை எங்கேயோ படித்திருக்கிறேன் (தினத்தந்தி &#8211; குடும்ப மலர் என்று நினைக்கிறேன்). இன்னும் வரிகள் நினைவிலிருக்கிறது. வ்டித்தவர் பெயர் நினைவில்லை.</p>
<blockquote><p>ஒன்றாய் இருந்த போது ஒட்டத் தெரியாத இதயம்,<br />
ஒதுங்கிச் இருக்கும் போது ஒன்றிடத் தவிக்கிறது.</p></blockquote>
<p>அது போல், E-யின் அருமை E இல்லாத போது தான் தெரிந்தது. என் அலுவலகக் கணிப்பொறியின் கீபோர்டில், E என்ற எழுத்து மட்டும் ஒரு பதினைந்து நாட்களாக வேலை செய்யவில்லை. அதனால், E அடிக்க முடியாமல் நான் ஈ அடித்துக் கொண்டிருந்த சமயத்தில் E பற்றி அறிந்து கொண்டேன்.</p>
<p>கடைசியாக என் கீபோர்டை மாற்றிவிட்டார்கள். அலுவலகத்தில் இப்போது நிம்மதியாக E அடித்துக் கொண்டிருக்கிறேன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2006/11/the-letter-e/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>சென்னை மழைச் சுற்றுலா</title>
		<link>http://deepakvenkat.com/2006/10/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2%e0%ae%be/</link>
		<comments>http://deepakvenkat.com/2006/10/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Sat, 28 Oct 2006 14:44:33 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/2006/10/28/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2%e0%ae%be/</guid>
		<description><![CDATA[சென்னையில் அழகான மழை! மழை என்றாலே சென்னை மிகவும் சுவாரஸ்யமாகி விடுகிறது. தெருவெல்லாம் கண்ணாடிகளாகி விடுகின்றன. கொஞ்சமாக பைக் சறுக்குகிறது. எல்லோரும் நத்தைகள் போல நின்று நின்று கவனமாக சாலைகளில் செல்கிறார்கள். குடைகள் இல்லாதவர்கள் தெருவில் ஓட்டம் பிடிக்கிறார்கள். தொப்பலாக நனைந்தும், வீரமாக வண்டியோட்டி வருபவர்களும் இருக்கிறார்கள். கார்களில் விருட்டெனப் பாய்ந்துகொண்டிருந்தவர்கள், இப்போது கார்களைச் செலுத்திக்கொண்டு, முன்னால் அதீத ஜாக்கிரதையுடன் செல்கிற சைக்கிள்காரனைப் பின்தொடர்ந்து, மெதுவாக மெதுவாக பவனிவருகிறார்கள். ஆட்டோக்கள் &#8216;நானே ராஜா&#8217; என்று பாகுபாடில்லாமல் எல்லோர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சென்னையில் அழகான மழை! மழை என்றாலே சென்னை மிகவும் சுவாரஸ்யமாகி விடுகிறது. தெருவெல்லாம் கண்ணாடிகளாகி விடுகின்றன. கொஞ்சமாக பைக் சறுக்குகிறது. எல்லோரும் நத்தைகள் போல நின்று நின்று கவனமாக சாலைகளில் செல்கிறார்கள். குடைகள் இல்லாதவர்கள் தெருவில் ஓட்டம் பிடிக்கிறார்கள். தொப்பலாக நனைந்தும், வீரமாக வண்டியோட்டி வருபவர்களும் இருக்கிறார்கள். கார்களில் விருட்டெனப் பாய்ந்துகொண்டிருந்தவர்கள், இப்போது கார்களைச் செலுத்திக்கொண்டு, முன்னால் அதீத ஜாக்கிரதையுடன் செல்கிற சைக்கிள்காரனைப் பின்தொடர்ந்து, மெதுவாக மெதுவாக பவனிவருகிறார்கள். ஆட்டோக்கள் &#8216;நானே ராஜா&#8217; என்று பாகுபாடில்லாமல் எல்லோர் மீதும் தண்ணீரை வாரியிறைத்து &#8216;ட்டப்பட்ட ட்டப்பட்ட&#8217; என்று மோட்டார் புகை கக்க முன்னேறிச் செல்கிறார்கள். மஞ்சள், சிகப்பு, நீலம், கறுப்பு என்று கலர்கலராக &#8216;ஜெர்க்கின்&#8217;கள் அணிந்தவர்கள் பைக்குகளில் ஹீரோக்களாக பவனி வருகிறார்கள். <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/2005090914720401.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="289" height="202" align="right" /></p>
<p>இந்த சுவாரஸ்யமான (interesting) காட்சிகளெல்லாம் மழை வந்தால்தானே பார்க்க முடிகிறது. கொஞ்சம் கவனத்துடன் வண்டியைச் செலுத்த வேண்டும். எகிப்து மம்மிகள் போல் முற்றும் மூடிய ரெயின்கோட் அணிய வேண்டும். நிறைய பொறுமை வேண்டும். புஷ்டியான தேகம் வேண்டும். அவ்வளவு தான். இப்போது நீங்கள் சென்னை மழைச் சுற்றுலாவிற்கு ரெடி. நீங்கள் என்னைப்போல் இல்லாமல் எலும்பும் தோலுமாக இருந்தால், கிளம்பாதீர்கள். சென்னை சாலைகளின் மேடு பள்ளங்களில் உருண்டு பிரண்டு எழுந்து வருகிற பயிற்சி இது. திரும்பும் வரையில் திடகாத்திரமாகத் தாக்குப்பிடிப்பது அவசியம்.</p>
<p>சென்னை மழையில் வண்டி (two-wheeler) ஓட்டுவதற்குக் கொஞ்சம் ஆபத்தான சாலைகளில் அண்ணாசாலை முக்கியமானது. வழவழவென்று தார் போட்டிருப்பதால், வண்டி அருமையாக வழுக்கும். எப்போதும் மழை கொட்டிக்கொண்டே இருப்பதால், எல்லோரும் கண்களை மூடியபடி தான் வருவார்கள். ஆட்டோக்களுக்கு &#8216;சடன் பிரேக்&#8217; அவார்டு கொடுக்கலாம். உங்கள் வண்டியின் பிரேக்குகளைத் தீட்டி வைத்துக் கொள்வது அவசியம். முன்னால் செல்பவர்களுக்கு முன்னால் செல்பவர்களுக்கு முன்னால் இருக்கிற வண்டியில் சிகப்பு விளக்கு தெரிந்தவுடன் பிரேக்கைப் பிடிக்க வேண்டும். இது முக்கியமானது. உங்களின் reflex reaction நேரத்தைப் பரிசோதிக்கும் பயிற்சி இது. சென்னையில் சாதாரண காலங்களிலும் இது அவசியம் என்றாலும், மழைக் காலங்களில் இது வீர விளையாட்டாகக் கொண்டாடப்படுகிறது.</p>
<p><img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/ncr.jpg" border="0" alt="" hspace="10" vspace="10" width="279" height="225" align="left" />ஆனாலும் ஆபத்துகளைத் தாண்டி நம் கவனத்தைக் கவருகிறவர்கள், சின்னச் சின்ன பள்ளிக் குழந்தைகள். அவர்களுக்காகவே சின்னஞ்சிறிய வடிவத்தில் செய்யப்பட்ட &#8216;மிக்கி மவுஸ்&#8217; ரெயின்கோட்டுகளை அணிந்து, வண்டிகளின் பின்னால், தன் தாய் அல்லது தந்தையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வருகிற குழந்தைகள் &#8211; கவிதைகள். இன்னும் தன் அம்மாவின் கைவிரல்களைப் பற்றிக்கொண்டு, தலையில் குடை போன்ற தொப்பிகளை அணிந்து கொண்டு, பள்ளிச் சீருடையில் பவனி வரும் குட்டிகள் மேலும் அழகு. அவர்கள் ரோட்டில் தேங்கி நிற்கும் தண்ணீரில் &#8216;ச்சபக் ச்சபக்&#8217; என்று குதித்து பின்னால் வருகிற அம்மாவை டென்ஷன் ஆக்குவது அழகோ அழகு!</p>
<p>சென்னை மழையில் தான் எத்தனை அழகு!</p>
<p>எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிற A/c-க்குக் கொஞ்சம் விடுமுறை. சென்னை வீடுகளில் எங்கோ முடங்கிக் கிடந்த கம்பளிகளுக்குக் கொஞ்சம் கவனிப்பு, போட்டி. எப்போதும் சுமை சுமையாகப் புத்தகங்களைத் தூக்குகிறப் பிஞ்சுகளுக்குக் கொஞ்சம் லீவ். வீட்டில் அமைதியாக மெகா சீரியல் பார்த்து அழுகிற அம்மாக்க<br />
ுக்குக் அழுவதற்கு வேறு கொஞ்சம் சுவாரஸ்யமான காரணங்கள். மழைக்கு வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றவர்களின் செல்பேசிகளுக்குக் கொஞ்சம் ஓவர்டைம். நீர் தேங்கி நிற்கும் சாலைகளால், மாநகராட்சிக்குக் கொஞ்சம் கெடுபிடி. கூரை வீடுகளில் வாழ்கிறவர்களுக்குக் கொஞ்சம் ஒழுகல். மருத்துவர்களிடத்தில் கொஞ்சம் அதிகமாகவே கூட்டம். மருந்துக் கடைகளுக்குக் கொஞ்சம் கொண்டாட்டம்.</p>
<p>இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய சுவாரஸ்யங்கள். சென்னையில் அழகான மழை!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2006/10/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
		</item>
		<item>
		<title>நடைபோட்ட நாட்கள்</title>
		<link>http://deepakvenkat.com/2006/10/%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://deepakvenkat.com/2006/10/%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 17 Oct 2006 16:40:29 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/?p=33</guid>
		<description><![CDATA[நிலப்பரப்பின் அடியில் எப்போதாவது அழுத்தம் அதிகமாகும் போது, பூமி லேசாகச் சிலிர்த்துக் கொள்வதுண்டு. அது பூகம்பமாக வெடித்து நம்மை ஒரு கை பார்த்துவிடுகிறது. அப்படி &#8211; எப்போதாவது சிலிர்த்துக் கொள்ளும் பூமி போல, எப்போதாவது சமயமும் சமாச்சாரமும் கிடைக்கிற போது தான் எழுதுவேன் போலும்&#8230; இருந்தாலும் இத்தனை நாளும் நான் எழுதுவதை நாலு பேருக்குச் சொல்லிக் கொள்ள உதவிய தமிழ்மணத்திற்கு என் நன்றிகள். எங்கிருந்தோ தள்ளிவிடப்பட்டு இங்கு வந்து விழுந்திருக்கிற (பாவம்) உங்களுக்கும் என் நன்றிகள். இனி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நிலப்பரப்பின் அடியில் எப்போதாவது அழுத்தம் அதிகமாகும் போது, பூமி லேசாகச் சிலிர்த்துக் கொள்வதுண்டு. அது பூகம்பமாக வெடித்து நம்மை ஒரு கை பார்த்துவிடுகிறது. அப்படி &#8211; எப்போதாவது சிலிர்த்துக் கொள்ளும் பூமி போல, எப்போதாவது சமயமும் சமாச்சாரமும் கிடைக்கிற போது தான் எழுதுவேன் போலும்&#8230; இருந்தாலும் இத்தனை நாளும் நான் எழுதுவதை நாலு பேருக்குச் சொல்லிக் கொள்ள உதவிய தமிழ்மணத்திற்கு என் நன்றிகள். எங்கிருந்தோ தள்ளிவிடப்பட்டு இங்கு வந்து விழுந்திருக்கிற (பாவம்) உங்களுக்கும் என் நன்றிகள். இனி விஷயத்திற்கு வருவோம்.  <img src="http://i19.photobucket.com/albums/b194/d4dpak/walk_cartoon.gif" border="0" alt="" align="left" /></p>
<p>மிக நீண்ட காலமாக என்னுடைய நண்பர்களாக இருக்கிற பலரிடமும் ஒரு சர்வே நடத்தினேன். எத்தனைப் பேர் என்னுடைய மிக நீண்ட தூர நடைபயணத் துன்புறுத்தல்களுக்கு (torture) ஆளாகியிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு. பெரும்பாலும் எல்லாருமே ஆம் என்றார்கள். நடப்பது எனக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக என்னோடு வருகிற அப்பாவி நண்பர்களையும் நடக்கவிடுவது நியாயமில்லை தான். இருந்தாலும் என்னுடைய நண்பர்களாக இருப்பதால் நடந்து தொலைக்கிறார்கள். இரண்டாவது முறை என்னோடு வரும் போது சமாளித்துக் கொண்டு, எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்.  </p>
<p>முதன்முதலாக நான் நடக்கத் தொடங்கியது பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில். நடப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று யாரோ உசுப்பேற்றி விட்டதால், நானும் என் நண்பர்கள் கோஷ்டியும் (இரண்டு பேர்) காலை எழுந்து வாக்கிங் போவது என்று முடிவு செய்தோம். 5.05க்கு வந்தாலும் தொலைத்துவிடுவேன் என்று மிரட்டியதால், காலை 4.55க்கே நண்பர்கள் இருவரும் பயபக்தியுடன் (religiously) என் வீட்டில் ஆஜர். வாக்கிங் போவது என்ற காரணத்தை விட, காலை 5 மணிக்கு நம்மூர் எப்படி இருக்கிறது என்று வேடிக்கை பார்ப்பது தான் எங்கள் உண்மையான நோக்கம் என்பதை அப்போது யாராவது சொல்லியிருந்தால் அவர்களைப் பதம் பார்த்திருப்போம். இப்போது போல் அப்போதும் &#8216;கொளத்தூர், சென்னை-99&#8242;-இல் தான் நான் வசித்து வந்தேன் என்பதால், செங்குன்றம் நோக்கிச் செல்கிற NH5-இல் எங்கள் நடை பயணத்தைத் தொடங்கினோம். என் வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவு போவதற்குள்ளாக இத்தனை அம்பேத்கார் சிலைகள் இருக்கின்றன என்பது எனக்கு அப்போது தான் தெரியும். இடையிடையே பல வண்ணப் பூச்சுகளில் எம்.ஜி.ஆர். சிலைகள். சில மார்பளவு&#8230; சில முழு உருவம்.  சிலைகளையும், செம்மண் புழுதியில் திளைத்த கம்பெனி கதவுகளையும் பார்த்துக் கொண்டே சென்றதால் தூரம் தெரியவில்லை. </p>
<p>10 கி.மீ. நடந்து செங்குன்றம் வந்துவிட்டோம். (பிரபலமாக &#8216;ரெட்ஹில்ஸ்&#8217; என்பார்கள்). ரெட்ஹில்ஸ் வந்துவிட்டது என்று பார்த்ததும் தான் எல்லோரையும் களைப்பு தொற்றிக்கொண்டது. இனி நடக்கமுடியாது என்று முடிவு செய்து, ரெட்ஹில்ஸ் பேருந்து நிலையத்தில் எல்லோரும் உட்கார்ந்து விட்டோம். பேருந்தில் செல்லலாம் என்றால், கையில் பைசா இல்லை. என்ன செய்வது என்று விழித்துக் (முழித்து) கொண்டிருந்த போது, யாரோ ஒருவர் வந்தார். அந்த காலத்தில் (8 ஆண்டுகள் முன்பு) டாஸ்மாக் இல்லை என்பதால், கல்யாணி ஒயின்ஸில் காலையிலேயே குவாட்டர் அடித்து ஸ்டெடியாக இருந்தார் நபர். ஏனோ, எங்களுடன் பேச்சு கொடுத்து, எங்களுக்கு டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்தார். PP242 ஏறி வீடு வந்து சேர்ந்தோம். அதன் பின்னால், ஒரு மாதத்திற்கு அந்த நண்பர்கள் என் வீட்டின் பக்கம் வந்ததாக நினைவில்லை.  இப்படித் தான் நடக்க வைத்தே நான் பலரையும் டார்ச்சர் செய்ய ஆரம்பித்தேன்.  </p>
<p>திடீரென்று ஒரு நாள், மியூஸியத்தில் இருக்கும் பழைய காலத்து சமாச்சாரங்களைப் பார்க்க வேண்டும் என்று எனக்கும் என் நண்பனுக்கும் ஆசை வந்த, எழும்பூர் அருங்காட்சியகம் சென்றோம். என்னோடு வரும் யாரையும் நடக்கச் செய்யாமல் விடுவதில்லை என்று உறுதியேற்றிருந்ததால், ஸ்பென்ஸரிலிருந்து மியூஸியம் வரை என் நண்பனோடு நடந்தேன். இல்லை இல்லை&#8230; நான் நடக்க, பாவப்பட்ட என் நண்பனும் என்னோடு ஒட்டி நடந்து வந்தான். பின்னர், மியூஸியத்தில் அவனின் குடையைத் தொலைத்து, அங்கே நெற்றி நிறைய சந்தனம் வைத்திருந்த செக்யூரிட்டியோடு 1 மணி நேரம் சண்டை போட்டது வேறு கதை.  </p>
<p>தி.நகரிலிருந்து நுங்கம்பாக்கத்திற்கும், பின் திரும்ப தி.நகருக்கும் நான் பல முறை நடந்திருக்கிறேன். நல்ல வேளையாக, அப்போது என் நண்பர்கள் யாரும் என்னோடு மாட்டிக் கொள்ளவில்லை. என் நண்பனின் வீட்டிற்கு நடைபயணமாகச் செல்லும் போதெல்லாம், பாவம் பையன் கால்கடுக்க நடந்து வருகிறான் என்று, என் நண்பனின் அம்மா எனக்கு ஜூஸ் கலந்து கொடுப்பார்கள் என்பதாலேயே அவன் வீட்டிற்குப் பல முறை விஜயம் செய்திருக்கிறேன்.  </p>
<p>இத்தனை நடந்தும் இளைத்தேனா என்றால், NEVER! ஏனோ தெரியலை, இரண்டு மூன்று சுற்று பெருத்தேன். எத்தனை சாப்பிட்டாலும் உடம்பு ஏறவே மாட்டேங்குது என்று என்னிடம் சொல்கிறவர்களைப் பார்த்தால் எனக்கு ஏகப் பொறாமை. வேலைக்கு சேர்ந்து &#8216;டிஸ்கவர்&#8217; வாங்கியதிலிருந்து எனது நடை பயணங்கள் மிகவும் குறைந்து விட்டன. காலையில் எழுந்து வாக்கிங் போக வேண்டும் என்று ஒவ்வொரு  ஒன்றாம் தேதியும் சபதம் எடுப்பது தொடர்கதை. இருந்தாலும் இப்போதும் தனியாக, யாருமில்லாமல் நான்கைந்து கி.மீ. நடப்பதற்கு வாய்ப்பும் அவகாசமும் கிடைத்தால், அதுவே அன்றைய நாளின் பிராப்தம், எனக்கு.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2006/10/%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>பிச்சாவரம் வனப்பகுதி &#8211; ஓர் இனிய அனுபவம்</title>
		<link>http://deepakvenkat.com/2006/05/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d/</link>
		<comments>http://deepakvenkat.com/2006/05/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 14 May 2006 14:07:00 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[Travel]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/?p=29</guid>
		<description><![CDATA[&#8216;ஏவிசினியா மெரினா&#8217; என்று அந்தப் படகோட்டி, மேங்குரோவ் மரங்களின் அறிவியல் பெயரைக் கூறிய போது, நான் ஒரு கணம் வாயடைத்துப் போனேன் &#8211; நானே பள்ளியில் படித்து மறந்து போன இப்பெயரை படிப்பறிவில்லாத இவர் இவ்வளவு அழகாகச் சொல்கிறாரே என்று. பின்னர் தான் தெரிந்தது, இப்பெயரை அங்குள்ள படகோட்டிகள் யாவரும் சொல்வார்கள் என்று. கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்புநிலப் பகுதி, கோடை வெயிலைத் தணிக்கும் ஒரு இனிய மாலைப் பொழுது அனுபவமாகவே அமைந்தது.  சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://en.wikipedia.org/wiki/Avicennia_marina">&#8216;ஏவிசினியா மெரினா&#8217; </a>என்று அந்தப் படகோட்டி, <a href="http://en.wikipedia.org/wiki/Mangrove">மேங்குரோவ் </a>மரங்களின் அறிவியல் பெயரைக் கூறிய போது, நான் ஒரு கணம் வாயடைத்துப் போனேன் &#8211; நானே பள்ளியில் படித்து மறந்து போன இப்பெயரை படிப்பறிவில்லாத இவர் இவ்வளவு அழகாகச் சொல்கிறாரே என்று. பின்னர் தான் தெரிந்தது, இப்பெயரை அங்குள்ள படகோட்டிகள் யாவரும் சொல்வார்கள் என்று. கடலூர் மாவட்டம் <a href="http://www.annauniv.edu/iom/pichavaram.htm">பிச்சாவரம் சதுப்புநிலப் பகுதி</a>, கோடை வெயிலைத் தணிக்கும் ஒரு இனிய மாலைப் பொழுது அனுபவமாகவே அமைந்தது.  சிறு வயதில்<img src="http://photos1.blogger.com/blogger/6202/307/320/pichava2.png" border="0" alt="" hspace="10" vspace="10" width="320" height="223" align="right" /> பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்த போது, தாவரவியல் பாடத்தில் சுவாசிக்கும் வேர்கள் (Respiratory Roots) பற்றி படித்தது நன்றாக நினைவிலிருக்கிறது. சதுப்பு நிலப்பகுதிகளில் வளரும் மேங்குரோவ் மரங்கள், தண்ணீர் பரப்புக்கு மேல் விரல்களைப் போல நீட்டிக் கொண்டிருக்கும் வேர்களைக் கொண்டவை. அவ்வேர்களில் தான் அம்மரங்கள் சுவாசிப்பதற்கான துவாரங்கள் அமைந்துள்ளன. பக்கவாட்டில் வளரும் வேர்களிலிருந்து, மேல்நோக்கி வளரும் இந்த சுவாசிக்கும் வேர்கள், நேரே மேல்நோக்கி வளர்ந்து, அம்மரங்களின் கிளைகளில் முட்டி ஐக்கியமாகின்றன. தாவரவியல் பாடப்புத்தகத்தில் பார்த்த அம்மரத்தின் வரைபடங்கள் நேரில் பார்த்த போது அந்த இயற்கையின் விந்தை அழகை இன்னும் பல மடங்கு அதிகமாகவே ரசிக்கும்படியாக இருந்தது.  ஒரு வாரம் சிதம்பரதில் தங்க வேண்டிய அவசியம் எனக்கு. கோடை சூரியன் &#8211; உச்சியைப் பிளக்கிற வெயில் &#8211; மொத்த வெப்பமும் சிதம்பரத்தின் மீதே கோட்டுகிறதோ என்னும்படி அப்படியொரு வெயில். பல நாட்களாய் கேள்விப்பட்டிருந்த சிதம்பரதின் பெருமையெல்லாம் எனக்கு மறந்துபோய், இனி இவ்வூர் பக்கம் வரவே கூடாது என்று முடிவெடுக்கும்படி ஆகிவிட்டேன். ஆனால், பிச்சாவரம் போய் வந்த அம்மாலைப் பொழுது மட்டும் என்றும் நினைவிலிருக்கும் கணமாக என் மனதில் பதிந்துபோனது.  சிதம்பரம் வரும் முன்பே, பிச்சாவரம் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன். சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம். சிதம்பரத்தில் நாங்கள் தங்கியிருந்த லாட்ஜின் கண்காணிப்பாளரிடம் கேட்டேன். &#8216;பஸ் இருக்கு சார். பிச்சாவரம் வனப்பகுதின்னே போட்டிருப்பான். கரெக்டா ஒன் அவர் ஆகும்&#8217; என்றார். 17 கி.மீ. போக எதற்கு ஒரு மணி நேரம் என்று நினைத்தேன். ஆனால் போகப் போகத்தான் எனக்கு விளங்கியது.  சிதம்பரம் பேருந்து நிலையத்தில் &#8216;முடசலோடை&#8217; என்று ஒரு பக்கமும், &#8216;பிச்சாவரம்&#8217; என்று ஒரு பக்கமும் போட்டிருந்த பேருந்து வந்து நின்ற மாத்திரத்திலேயே ஃபுல். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, டர்க்கி டவல் போட்டு, வீரப்பன் மீசை சகிதமாக நின்றிருந்த ஒருவரிடம் கேட்டேன். &#8216;இது தான் தம்பி, வாங்க நானும் அங்க தான் போறேன்&#8217; என்றார். ஏறிக்கொண்டோம். சீட் கிடைக்கவில்லை என்றாலும், ஜன்னல் வழி வேடிக்கை பார்ப்பதில் மிகுந்த ஆர்வமுடைய நான், டிரைவர் அருகில் நின்று கொண்டேன். சிதம்பரம் நகர எல்லை வரை நல்ல தார்ச் சாலைகள் போட்டிருந்தார்கள். சில கிலோமீட்டர் போன மாத்திரத்தில் பேருந்தின் டயர்களைக் கூடக் கொள்ளும் அளவு இல்லாத மிகக் குறுகிய சாலை ஆரம்பமானது.  கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு சுற்றுலாத் தலமான பிச்சாவரத்திற்குப் போகிற சாலை இப்படியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்னுடன் வந்திருந்த வட இந்திய நண்பர்கள், &#8216;டீக் ராஸ்தா ஹெய் நா?&#8217; என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே வந்தார்கள். நானும் மீசைக்காரரிடம் இரண்டு முறை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன். எதிரே வந்த புல்</p>
<p>லட் வண்டிகளுக்கெல்லாம் ஒரு நிமிடம் நின்று, ஒதுங்கி, ஓட்டுவதென்றால், 17 கி.மீ. போக ஏன் ஒரு மணி நேரம் ஆகாது? எப்படியோ, பிச்சாவரம் போய் சேர்ந்தோம்.  ஒரு அண்ணா சிலை, ஒரு TTDC படகு நிலையம், ஒரு சில நாற்காலிகள். இது தான் பிச்சாவரம். TTDC (தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்) அலுவலகத்தில் டிக்கெட் வாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு படகிற்கு ஒரு மணி நேரத்திற்கு 125 ரூபாய். 5 நபர்கள் போகலாம். இல்லை, நான் தனியாகத் தான் போவேன் என்று நீங்கள் அடம் பிடித்தாலும், 125 ரூபாய் நிச்சயம் கொடுக்க வேண்டும். டிக்கெட் வாங்கிக் கொண்ட பிறகு, படகுத்துறையின் வாயிலில், வனத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி இருப்பார். அவரிடம் நிச்சயமாக ஆளுக்கு 50 பைசா கட்ட வேண்டும். நீங்கள் வெறுமனே கையில் கேமரா வைத்திருப்பவரானால் பரவாயில்லை. ஆனால், அதை பயன்படுத்திப் புகைபடம் எடுப்பவரானால், அதற்கான கட்டணத்தை இவர்களிடம் செலுத்த வேண்டும்.  நடைமுறைகள் எல்லாம் முடிந்து நானும் நண்பர்களும் படகில் ஏறிக் கொண்டோம். படகோட்டி, இக்காடுகள் பற்றி சொல்லிக் கொண்டே வந்தார். சுமார் 3000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மேங்குரோவ் காடுகள் இந்தியாவில் இரு இடங்களில் தான் இருக்கின்றனவாம். ஒன்று, கோல்கத்தா அருகே சுந்தர்வன் காடுகளிலும், அதன் பிறகு பிச்சாவரத்தில் தான் இருக்கிறது என்றார். பேக்வாட்டர் எனப்படும் இந்நீர்நிலை, கடலோடு நேரடியாக இணைப்புள்ளது. கேரளத்தில் பிரசித்தமான இத்தகைய பேக்வாட்டர்களை தமிழகத்தில் இப்போது தான் காண்கிறேன். ஆழம் 3 அடி தான் இருக்கும், ஆனால் அடியில் சதுப்பு நிலம் என்பதால் ஒரு ஆள் உயரம் தண்ணீர் இருக்கும் என்றார் படகோட்டி. சரத்குமார் நடித்த &#8216;சூரியன்&#8217; படத்தின் சண்டைக் காட்சிகள் இங்கு தான் படமாக்கப் பட்டனவாம். புரட்சித்ததலைவர் எம்.ஜி.ஆர் படத்திலும் வந்திருக்கிறது என்றார். பின்னர் மேங்குரோவ் மரங்கள் எங்கள் அருகில் வந்தன.  படகை அம்மரங்களின் ஊடே செலுத்திய போது, என் அறிவியல் ஆசிரியை போதித்த ஏவிசினியா மரங்களை நேரில் பார்க்கிற பாக்கியம் எனக்கு கிடைத்தது. இரண்டு ஆள் உயரமிருக்கும் மரங்கள். தண்ணீர் பரப்பின் மேல் முளைத்து வளரும் வேர்கள். புதர் மாதிரி நிறைய இலைகள். அம்மரங்களின் அடியில் எல்லாம் நிறைய நண்டுகள் இருந்தன. நரிகளைக் கூட காணமுடியும் என்றார் படகோட்டி. ஆனால், நாங்கள் நரி எதையும் பார்க்கவில்லை. கோடைக் காலம் என்பதால் பறவைகளும் அதிகம் இல்லை. ஆனால், சுற்றி இருக்கும் மரங்கள் நடுவே படகில் போவது, ஏதோ &#8216;அனகோண்டா&#8217; காடுகளில் பயணிப்பது போன்று &#8216;த்ரில்லிங்&#8217;காக இருந்தது. ஆயிரக்கணக்கான கால்வாய்கள் இங்கிருந்து பிரிந்து செல்கின்றனவாம். ஒரு மணி நேரம் அவிசினியா மரங்களை ரசித்தோம். இவற்றின் அறிவியல் சமாச்சாரங்களை என் வட இந்திய நண்பர்களுக்குச் சொல்லிக் கொண்டே வந்தேன். சூரியன் மறைகிற சமயம் என்பதால், குளிர்ச்சியாக இருந்தது. சிதம்பரத்தில் தங்கியிருந்த ஒரு வாரத்தில் குளிர்ச்சியாயிருந்தது என்று சொல்லக்கூடிய ஒரே சந்தர்ப்பம் இது தான்.  சுனாமி வந்த போது, 20 அடிக்கு நீர் மேலெழுந்ததாம். இம்மரங்கள் தான் நீரின் வேகத்தைப் பெரிதும் கட்டுப்படுத்தினவாம். கால்வாய்களின் வழியாக நீர் பிரிந்து விட்டதால், பாதிப்புகள் அதிகம் இல்லை என்றார். ஆனாலும், அருகே எம்.ஜி.ஆர். குப்பத்தில் இருந்த பல நூறு குடும்பங்கள் அடித்துச் செல்லப்பட்டன. &#8216;இந்த வழியாத்தான் சார் பொணங்கள் எல்லாம் போச்சு&#8217; என்று அப்படகோட்டி சொன்ன போது, அவர் கண்கள் கலங்கின. சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.  ஒரு வழியாக, பிச்சாவரம் சுற்றுலா முடிந்து சிதம்பரம் நோக்கிப் பயணப்பட்டோம். அதே குறுகலான பாதையில் 17 கி</p>
<p>.மீ. அதே ஒரு மணி நேரம். ஏவிசினியா மரங்களைப் பார்த்தது, ஏதோ சொந்தக்காரர்களைப் பார்த்துவிட்டு வந்தது போல மனதிற்கு இதமாக இருந்தது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2006/05/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
		</item>
		<item>
		<title>முதல் முறையாகப் பல விஷயங்கள்</title>
		<link>http://deepakvenkat.com/2006/05/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%af%e0%ae%99%e0%af8/</link>
		<comments>http://deepakvenkat.com/2006/05/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%af%e0%ae%99%e0%af8/#comments</comments>
		<pubDate>Wed, 10 May 2006 17:46:00 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/?p=28</guid>
		<description><![CDATA[எல்லோருக்கும் நேராக வைத்த மையை எனக்கு மட்டும் கோணலாக வைத்து விட்டார்களே என்று தேர்தல் மைய அதிகாரி மீது எனக்கு கொஞ்சம் கோபம் இருந்தது. அதிலும் என் என் நடுவிரலில் வேறு சிறு சிந்தல். அப்புறம், என் அலுவலக நண்பரின் விரலைப் பார்த்த பின்பு தான் எனக்கு ஆறுதல். அவர் கை முழுவதும் ஒரு மினி கோலமே போட்டுவிட்டிருந்தார்கள் தேர்தல் மைய அதிகாரிகள்.  முதல் முதலாக வாக்களித்ததில் மிகுந்த மகிழ்ச்சி &#173;&#8211; ஏதோ இந்தியாவிற்கே ஜனாதிபதி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எல்லோருக்கும் நேராக வைத்த மையை எனக்கு மட்டும் கோணலாக வைத்து விட்டார்களே என்று தேர்தல் மைய அதிகாரி மீது எனக்கு கொஞ்சம் கோபம் இருந்தது. அதிலும் என் என் நடுவிரலில் வேறு சிறு சிந்தல். அப்புறம், என் அலுவலக நண்பரின் விரலைப் பார்த்த பின்பு தான் எனக்கு ஆறுதல். அவர் கை முழுவதும் ஒரு மினி கோலமே போட்டுவிட்டிருந்தார்கள் தேர்தல் மைய அதிகாரிகள்.  முதல் முதலாக வாக்களித்ததில் மிகுந்த மகிழ்ச்சி &shy;&ndash; ஏதோ இந்தியாவிற்கே ஜனாதிபதி ஆகிவிட்டது போல. அலுவலகத்தில் நண்பர்கள் பலரும் முதல் முறையாக வாக்களிக்கிறவர்கள் என்பதால், எல்லாருக்குமே உற்சாகம். மே 8-ஆம் தேதி முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது. விரலை உயர்த்தி அவரவர் கையில் வாங்கிய மையைக் காட்டிப் பெருமைபட்டார்கள். கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் டென்ஷன் இருக்கிறதோ இல்லையோ &ndash; எங்களுக்கு இருக்கிறது &ndash; நாளை ஆட்சி அமைக்கப் போவது யார் என்று.  இந்த முறை முதல் முறையாகப் பிரச்சாரத்தில் தேர்தல் ஆணையத்தில் கை ஓங்கி இருந்தது தெளிவாகத் தெரிந்தது. எங்கள் தொகுதி பக்கமெல்லாம் மெகா சைஸில் வரையப்பட்டிருக்கும் தலவர்களின் படங்களை இம்முறை காண முடியவில்லை. சுவர்களில் டப்ல் கலரில் நான்கடி உயர எழுத்துகளில் வரையப் பட்டிருக்கும் &lsquo;கலைஞர்&rsquo;, &lsquo;அம்மா&rsquo;, &lsquo;அய்யா&rsquo; போன்ற பெயர்களெல்லம் இந்த முறை எங்கேயும் இல்லை. கொடிகள், தோரணங்கள், பேனர்கள், விளம்பரப் பலகைகள் என்று எதுவுமே அதிகம் இல்லாமல் அமைதியான தேர்தல் நடந்ததற்குத் தேர்தல் ஆணையத்தைப் பாராட்ட வேண்டும்.  அதே போல், முதல் முறையாக தேர்தலில் &lsquo;49-ஓ&rsquo; பற்றி நிறைய விளம்பரம் செய்யப்பட்டது. ஞாநி அவர்களின் படம் போட்ட PDF கோப்பு மின்னஞ்சலில் சர்குலேட் செய்யப்பட்டது. 49-ஓ பற்றி நிறைய விளக்கி, அதனைப் பயன்படுத்த வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால், அப்படி யாரும் 49-ஓ பயன்படுத்தியதாக சேதி இல்லை. 49-ஓ போட வேண்டும் என்று வாக்குச்சாவடிக்குப் போனவர்களைக் கூட அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று கேள்வி. அப்படி ஒரு பிரிவு இருப்பதாகத் தெரியவில்லை என்று கூட பலர் சொன்னதாக ஒரு மடல் கிடைத்தது. இந்த 49-ஓ எந்த அளவிற்குச் சாத்தியமானது? இல்லை உண்மையில் அப்படி ஒரு பிரிவு இருக்கிறதா? இருக்கிறது என்றால் தேர்தல் ஆணையம் பெயரளவுக்காவது அதைப் பயன்படுத்தும் வசதி செய்யாதிருப்பது ஏன்? &ndash; இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டியுள்ளது.  தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு வரை &lsquo;லோக் பரித்ராணா&rsquo; என்று இந்தியத் தொழில்நுட்பக் கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி பற்றி நிறைய பேச்சு அடிபட்டது. அவர்கள் மூதல் முறையாக இத்தேர்தலில் போடியிடுகிறார்கள். நிறைய நண்பர்கள் அக்கட்சியில் overnight அதிரடியாக சேர்ந்தார்கள். வீட்டில் ஒருபோதும் துடைப்பத்தைத் தொட்டறியாத சில நண்பர்கள் அக்கட்சியின் சார்பில் தெருவைக் கூட்டி சுத்தம் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன். <img src='http://deepakvenkat.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  ஆனால் இக்கட்சி அத்துணைப் பெரிய நம்பிக்கை தருவதாக இல்லை. அவர்களின் நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை. சில மாணவர்கள் பிட் நோட்டீஸ் அடித்து தெருக்களில் சுற்றினார்கள். இதுவரை வாக்களித்துப் பழக்கமில்லாத அறிவுஜீவிகள் சிலர் ஆதரவு தெரிவித்தார்கள். மென்பொருள் பொறியாளர்கள், மாணவர்கள் என்று ஒரு மிகக் குறுகிய வட்டத்துக்குள் அக்கட்சி அகப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்.  கட்சியில் சேருவதற்கு படித்தவர்களாக இருக்க வேண்டும் என்றார்கள், யாருக்குமே தெரியாமல் எங்கோ கூட்டம் நடத்தியதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்களின் கட்சியின் பெயர் கூடப் பலருக்குத் தெரியவில்லை. (ஒரு வேளை ஹிந்தி பெயர் தமிழகத்தில் எடுபடவில்லையோ?). மொத்தத்<br />
  ில், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் காட்டிய அவசரத்தைப் பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிற வேலைகளில் காட்டலாம். கொஞ்சம் மக்கள் மத்தியில் இறங்கிப் பணியாற்றினால் அவர்களின் நோக்கம் ஈடேற வாய்ப்புள்ளது.  எப்படியோ இம்முறை தேர்தல் முடிந்து விட்டது. நாளை வாக்கு எண்ணிக்கை. சூரியன் பிரகாசமாக இருப்பது போல் தோன்றுகிறது. அள்ளி அள்ளி வீசப்பட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகள், இலவசங்கள் &ndash; இவற்றில் இருந்து இந்நாட்டை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக்கொண்டே  நானும் நாளைய முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2006/05/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%af%e0%ae%99%e0%af8/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>சில ஞாபகங்கள்</title>
		<link>http://deepakvenkat.com/2005/05/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%aa%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://deepakvenkat.com/2005/05/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%aa%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 31 May 2005 11:26:00 +0000</pubDate>
		<dc:creator>Deepak</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://deepakvenkat.com/tamil/?p=21</guid>
		<description><![CDATA[பின்புறத்தில் சற்றே பெருத்து, கிக் ஸ்டார்ட் செய்யப்படும் ஒரு மாதிரியான ஆட்டோக்களை என் சொந்த ஊரில் தான் பார்த்திருக்கிறேன். கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமம், பெயர் &#39;கொப்பா&#39;. Michael Crichton-னின் State of Fear-இல் எவ்வளவு தான் இயற்கையைத் திட்டி, கன்னாபின்னாவென்று விமர்சித்திருந்தாலும், நாலாபுறமும் மலைகள் மலைகள் என்று இருக்கிற ஊரைப் பார்க்கும் போது, மனம் அதில் லயித்து விடுவதில் ஆச்சரியமில்லை. முணுமுணுப்பது போல் வேகமாகப் பேசுகிற மைசூர் கன்னடம், மணிரத்தினம் பட [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பின்புறத்தில் சற்றே பெருத்து, கிக் ஸ்டார்ட் செய்யப்படும் ஒரு மாதிரியான ஆட்டோக்களை என் சொந்த ஊரில் தான் பார்த்திருக்கிறேன். கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமம், பெயர் &#39;கொப்பா&#39;. Michael Crichton-னின் State of Fear-இல் எவ்வளவு தான் இயற்கையைத் திட்டி, கன்னாபின்னாவென்று விமர்சித்திருந்தாலும், நாலாபுறமும் மலைகள் மலைகள் என்று இருக்கிற ஊரைப் பார்க்கும் போது, மனம் அதில் லயித்து விடுவதில் ஆச்சரியமில்லை. முணுமுணுப்பது போல் வேகமாகப் பேசுகிற மைசூர் கன்னடம், மணிரத்தினம் பட வசனம் போல அவ்வளவு ஸ்பஷ்டமாகப் புரியாவிட்டாலும், சென்னை செந்தமிழைக் கொஞ்ச நாள் மறக்கடித்து விட்டதென்னவோ உண்மைதான்.&nbsp;<img src="http://photos1.blogger.com/blogger/2504/910/320/swing.jpg" border="0" hspace="10" vspace="10" width="320" height="320" align="right" /> மலையிலிருந்து பொங்கிவரும் ஓடை நீரில் குளித்த போது, அங்கே மரநிழலில் ஊஞ்சல் கட்டி ஆடிய சிறுவர்கள் இன்னும் என் கண்களில் நிற்கிறார்கள். என் சிறுவயதில் இப்படியெல்லாம் ஓடைப்புறத்தில் விளையாட வாய்த்ததில்லையே என்ற ஏக்கம் நிறைய உண்டு. சென்னையில் அதிகம் ஊஞ்சல்கள் நான் பார்த்ததில்லை. சங்கிலியில் தொங்கும் மர ஊஞ்சல்களை மயிலாப்பூரிலும் மாம்பலத்திலும் நண்பர்கள் வீடுகளில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதில் எல்லாம் வாண்டுகள் விளையாட முடியாது. அவர்களின் dynamic தேவைகளுக்கு ஈடு தரும்படியாக இருப்பவை மரக்கிளையில் கட்டிய ஊஞ்சல் தான். என் வீட்டில், நான் விளையாடுவதற்காக என் தாத்தா ஒரு ஊஞ்சல் கட்டித் தந்திருந்தார் &#8211; கொய்யா மரக்கிளையில். வருடாவருடம் கட்டித்தருவார். நானும் வருடாவருடம் அதன் பிரேக்கிங் பாயிண்ட் வரும் வரை அதில் ஆடி ஆடி, சட்டென்று அது அறுந்து தொபீர் என்று நான் கீழே விழும் போது, மிகப்பெரிய சாதனை செய்தது போன்ற ஒரு பூரிப்பு உண்டாகும். இப்போதெல்லாம் கூடத் தாத்தாக்கள் மரக்கிளை ஊஞ்சல்கள் கட்டித் தருகிறார்களா என்பது தெரியவில்லை.  கன்னடம் சரியாகப் பேசத் தெரியாமல், கடைக்காரரிடம் எக்குத்தப்பாகப் பேசி, பின் அசடு வழிந்த கதையை முன்னொரு பதிவில் சொல்லியிருக்கிறேன். அது அப்படி என்றால், இன்று கூட, பள்ளி வகுப்பில் என்னோடு படித்த தோழியிலிருந்து, எனக்கு சுரம் வந்தால் ஊசி போடும் டாக்டர் வரை எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி, நீ இப்போதாவது தமிழ் பேசக் கற்றுக்கொண்டாயா?என்பதுதான். இருந்தாலும், ராஜ் டிவி கோலிவுட் டயரியைத் தொகுத்து வழங்கும் பெண் பேசும் டமிலை விட, என் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது என்று மனத்தைத் தேற்றிக்கொண்டு, நகர்ந்துவிடுவேன்.  ஊரில், மலைச்சரிவை ஒட்டியே கட்டப்படும் வீடுகளும், வீட்டுக் கொல்லையில் விடியற்காலை வந்து கிரீச்சிடும் மயில்களும், நாலடிக்கு ஒன்றாக அகப்படும் பாம்புகளும், தோட்டத்தில் காலில் ஒட்டிக் கொள்ளும் அட்டைகளும், ராத்திரி வேளைக் கார் பயணங்களில், ஆங்காங்கே அமைதியாக சாலையைக் கடக்கும் சிறுத்தைகளும், சில சமயம் அரிதாகத் தென்படும் யானைகளும், மரமேனிகள் அனைத்திலும் நட்சத்திரமாய் ஜொலிக்கும் மின்மினிப்பூச்சிகளும், சென்னைக்கு வந்தால் மிகவும் ரிமோட்டாகப் படுகின்றன. ghat section என்று சொல்லி, மெதுவாக, ஸ்டியரிங்கை ஒடித்து ஒடித்து ஓட்டும் லாவகம், உஸ்மான் ரோட்டிலும், கோடம்பாக்கம் ஹை ரோட்டிலும் கூடத் தேவைப்படுவது தான் ஒரே ஒற்றுமை.  பல வருடங்களுக்கு முன்னால், நான் சென்றிருந்த போது, ஊர்க்கோயில் திருவிழா நடைபெற்றதுண்டு. அங்கே, &#39;ஜாத்ரே&#39; என்பார்கள். மெட்ராஸிலிருந்து சென்றவன் என்கிற முறையிலும், அவ்வூரில் பிரசித்தமான குடும்பம் என்பதாலும், திருவிழாவிலும் ஊரிலும் எனக்குப் பல சலுகைகள் நிச்சயம் உண்டு. வாட்ச் மிட்டாயும், மேஜிக் கண்ணாடியும் இலவசமகப் பெற்றிருக்கிறேன். ச<br />
  கரித்து வைத்திருந்த WWF கார்டுகளை எக்ஸ்சேஞ்ச் செய்து, மயிற்பீலியும், பாட்டிலில் அடைத்த மின்மினிப்பூச்சியும் வாங்கியிருக்கிறேன். நான்கு பென்ச் போட்ட பெட்டிக்கடை ஹோட்டலில் ராகி மால்ட்டும், கட்பட் ஐஸும் (நம்மூர் ஃபலூடா), மசால் மண்டக்கியும் (அரிசிப் பொரி) கேட்பாரின்றி விழுங்கியிருக்கிறேன். துங்கா நதிக்கரையோரம் முழுதும் நிரம்பிய கூட்டத்தின் நடுவே வாணவேடிக்கைகளைப் பார்த்து, ஆவென்று வாய்பிளந்து ரசித்திருக்கிறேன். திருவிழாவில் தொலைந்திருக்கிறேன். கிணற்றில் நீந்தியிருக்கிறேன். மாட்டுவண்டி ஓட்டியிருக்கிறேன். சைக்கிளில் ஸ்கூலுக்குப் போய், ஸ்கூல் லீடர் என்ற பெயரில் கொஞ்சம் பஞ்சாயத்தெல்லாம் செய்து, நண்பர்களை விரட்டி ஆடி, குரூப் பையன்களையும் பெண் பிள்ளைகளையும் குச்சியால் அடித்து மிரட்டி, லன்ச் பிரேக்கில் ஹோம்வொர்க் செய்து, பெல் அடித்ததும் சைக்கிளிலேயே வீடு திரும்பி, டிவி முன் ஐக்கியமாகும் சமர்த்தான சென்னைப் பையனாக வளர்ந்த எனக்கு, ஊரும், திருவிழாவும், வயல் வரப்பும் மறக்க முடியாத அத்தியாயங்கள். ஆனால், இப்போதெல்லாம் ஊர் மாறவில்லை. திருவிழா மாறவில்லை. வயலும் கிணறும்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://deepakvenkat.com/2005/05/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%aa%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
		</item>
	</channel>
</rss>
