சென்னை 30-ஆவது புத்தகக் காட்சி
Posted in Food and Dining, அனுபவம், சென்னை, நூல் நயம், பொது on 01/15/2007 01:28 pm by Deepak
ஜனவரி மாதம் என்றாலே சென்னையில் என் போன்ற புத்தகப் புழுக்களுக்குக் கொண்டாட்டம் தான். ஆண்டுதோறும் சென்னையில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிக் கொண்டே போகிறது. வழக்கமான இடத்தில் இல்லாமல், இம்முறை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் காட்சியை அமைத்திருக்கிறார்கள்.
இவ்விடத்தில் முதல் நல்ல விஷயம், போக்குவரத்து இடர்பாடு இல்லாமல் எளிதில் சென்றடைய முடிகிறது. வெளியில் வைத்திருக்கும் வண்ணமயமான வரவேற்பு வளைவைத் தாண்டிச் சென்று, உள்ளே ஏராளமாக இருந்த parking area-வில் வண்டியை நிறுத்தினோம்.
குமுதம், விகடன், எக்ஸ்பிரஸ் என்று எல்லோரும் சேர்ந்து வரவேற்றார்கள். நுழைவுச்சீட்டு வாங்க நேராகச் சென்ற எங்களுக்கு ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி. நடிகர் சூர்யா எழுதிய “இப்படிக்கு சூர்யா” என்ற நூல் வெளியீடு விழா நடந்து கொண்டிருந்தது. அலையன்ஸ் பதிப்பகத்தின் வெளியீடு. பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கிக் கொண்டிருந்தார். எதேச்சையாக வந்த கூட்டத்தைத் தவிர பெரிய கூட்டம் இல்லை. அதனால், சூர்யாவை அருகில்
சென்று கண்குளிர (ஹிஹி… என்ன பண்றது…?) பார்த்து டிஜிக்கேமில் படங்கள் எடுத்துக் கொண்டோம். சூர்யா எப்படியெல்லாம் பெற்றோருக்கு அடங்கிய சமர்த்துப் பிள்ளையாக இருக்கிறார் என்பது பற்றி பாப்பையா பேசிக்கொண்டிருந்தார். அங்கேயே புத்தகம் வாங்குகிறவர்களுக்கு சூர்யா கையெழுத்திட்டுத் தருவார் என்றதும் பல இளைஞர் இளைஞிகள் மேடையை மொய்த்தனர். நாங்கள் ticket counter-ஐ நோக்கி நடந்தோம்.
ஐந்து ரூபாய் நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் முதலில் கவனித்த விஷயம், பிளைவுட் தரை அமைத்திருந்தார்கள். தூசு, மேடு-பள்ளம் என்ற கவலையெல்லாம் இல்லை. இன்னும் அந்த மைதானம் முழுவதற்குமாகப் பெரிய பந்தல் அமைத்திருந்தார்கள். ஆங்காங்கே மின்விசிறிகள்
அமைத்திருந்தார்கள். குறுக்கும் நெடுக்குமாகப் போவது போல் இல்லாமல், வரிசையாக ஸ்டால்களை அமைத்திருந்தார்கள். ஒரு வரிசையை முடித்துவிட்டு, நேராக, அடுத்த வரிசைக்குச் செல்லலாம். அதுமட்டுமின்றி, நல்ல அகலமான பாதை. சென்ற ஆண்டு நடந்தது போல தள்ளுமுள்ளு அனுபவமெல்லாம் இம்முறை கிடையாது. நிறைய கூட்டம் இருந்தபோதும், free-யாக நடக்க முடிந்தது.
புத்தகக் காட்சியில் பெருவாரியாகக் கண்ணுக்குத் தெரிந்த புத்தகங்கள், குழந்தைகளுக்கானவை தான். இளமையிலேயே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி என்றால், பாராட்டலாம். இரண்டாமிடம் ஆன்மீகப் புத்தகங்களுக்கு.
புதிது புதிதாகப் பல ஆன்மீகவாதிகள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். சென்ற ஆண்டுக்கு இந்த ஆண்டு ஆன்மீகம் அதிகமாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். (என் கற்பனையாகவும் இருக்கலாம்). அதன் பின்னால், எப்போதும் போல், பணம் பண்ணுவது எப்படி, வேலை தேடுவது எப்படி போன்றவைகள். எனக்கு மிகவும் பிடித்தமானவை, புத்தக விநியோகஸ்தர்களின் (distributors) ஸ்டால்கள் தான். அவர்களிடம் பல ஊர்களிலிருந்தும், பல நாடுகளிலிருந்தும் பலரும் எழுதும் quality writing கிடைக்கிறது. அது தவிர, பல நம் ஊர் பதிப்பகங்கள் வாயிலாக, புதிய படப்பாளாகளை அடையாளம் காண முடிந்தது. பொதுவாக புத்தகக் கடைகளில் கிடைப்பதை விட இங்கு 10% விலை குறைவு என்பது ஒரு பிளlt;br /> ?் பாயிண்ட்.
புஸ்தக் மஹால், திருமகள் நிலையம், கிழக்கு பதிப்பகம், உயிர்மை பதிப்பகம் என்று பல ஸ்டாலகளில் பலப்பல புத்தகங்கள் வாங்கித் திணித்துக் கொண்டேன். ஒரு வருடம் முழுவதற்கும் வேண்டுமல்லவா? உயிர்மை பதிப்பகத்தில் மனுஷ்யபுத்ரன் அவர்களைப் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.
பல இடங்களில் மின்விசிறிகள் வைத்திருந்தாலும், காற்றோட்டமாக இல்லாமல் கொஞ்சம் அடைப்பாக இருந்தது ஒரு குறை. அதுவுமில்லாமல், வரிசைகள் நீளமாக இருந்ததும், ஒரு வரிசை முழுவதும் கடந்து தான் அடுத்த வரிசைக்குப் போகவேண்டியிருந்ததும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஸ்டால்களுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் தடுப்புகள் போட்டிருந்தார்கள். பல தடுப்புகள் தள்ளப்பட்டு, மக்கள் அடுத்த வரிசைக்குச் செல்ல குறுக்கு வழிகள் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆங்காங்கே தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், காட்சிக்கு உள்ளே எதுவும் உண்பதற்குக் கிடைக்கவிலை.
இது ஒரு விதத்தில் நன்றாக இருந்தாலும், கிட்டத்தட்ட 400 ஸ்டால்கள் இருப்பதால், பாதி முடிப்பதற்குள் சோர்வாகிவிடுகிறது. எதுவும் உள்ளே போகாமல் முழுவதும் முடிப்பது சிரமம். ஆனால், கண்காட்சிக்கு விளியில், பெரிய அரங்கம் அமைத்து “The Rice Bowl” என்ற பெயரில் food court அமைத்திருக்கிறார்கள். மிகவும் வரவேற்கத்தக்கது. (ஹிஹி…).
Prodigy ஸ்டாலில் புதிய முயற்சியாக குழந்தைகளுக்காக, ஓவியம் தீட்டும் போட்டிகள் நடத்துகிறார்கள்.
பல குழந்தைகளை வரைய விட்டு அம்மாக்கள் அவர்களை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். வெளியே மற்றுமொரு சிற்றரங்கத்தில் அறிவியல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது குழந்தைகளுக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கும் பயனளிக்கும். இன்னும் ஆவணப் படங்கள் போன்றவற்றுக்காக சிற்றரங்கம் அமைத்திருந்தார்கள். நேரமின்மையால் இவற்றைக் கவர் பண்ண முடியவில்லை. இம்முறை காட்சியில் ஸ்டால்கல் எல்லாம் Chennai Trade Centre-இல் இருப்பது போல் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் அமைத்திருந்தது குறிப்பிடவேண்டிய விஷயம். எல்லாம் முடித்துக் கொண்டு வெளியில் வந்த போது, கங்கை அமரன் அவர்களின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சில நல்ல பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள்.
புத்தகக் காட்சியில் எல்லா தரப்பினருக்கும் ஏதேனும் கிடைக்கிறது. என் போன்றவர்களுக்கு எல்லாமே கிடைக்கிறது. BAPASI நடத்தும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்குத் தமிழக முதல்வர் permanent-ஆக நிலம் ஒதுக்க இசைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இன்னும் தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் எழுத்தாளர்களுக்காக வழங்கியிருக்கிறபடியால் கலைஞரைப் பாராட்டலாம். சென்னையில் புத்தகக் காட்சி பற்றி இன்னும் அதிகமாக விளம்பரமும் விழிப்புணர்வும்
ஏற்படுத்துவது அவசியம். தமிழக-தென்னக-இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளோடு, அதிகமான அளவில் உலக எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவற்றின் தமிழாக்கப் பதிப்புகளையும் கொண்டு வரலாம். இன்னும், தமிழ் புத்தகங்களின் அச்சுத் தரத்தை மேம்படுத்தலாம். Travelogues, Armchair Reading, Satires போன்ற விஷயங்களைத் தமிழில் அதிகமாகவும் அழகாகவும் வெளியிட முயலலாம். இது போன்ற படைப்புகளுக்கு பதிப்பகத்தாரும், அவ்வண்ணமே அரசாங்கமும் ஊக்கமளித்தால், தமிழின்-தமிழரின் ப்டைப்புகளில் ஒரு variety-யைக் கொண்டுவர முடியும். தமிழ் கற்றவர்களின் அறிவுத் தேடல்களுக்கு நல்ல தீனி போட முடியும்.
கற்றது கைம்மண்ணளவு - கல்லாதது உலகளவு! அனைவருக்கும் இனிய பொবt;br /> ??்கல் நல்வாழ்த்துகள்!










01/15/2007 at 8:50 pm
நன்றாக எழுதியுள்ளீர்கள்!!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
01/15/2007 at 9:52 pm
நல்ல பதிவு.
சும்மாவே இப்படியா!
வாழ்த்துக்கள்
01/15/2007 at 10:06 pm
நன்றி சிவபாலன்
01/15/2007 at 10:29 pm
நீண்ட விபரிப்புக்கு நன்றி
04/18/2007 at 4:59 pm
நன்று. தெரியுமா? என் தந்தை ஒரு எழுத்தாளர் ஆகிவிட்டார்!